Yoga Ravi Page

Yoga Ravi Page MEDICAL & SPIRITUAL MESSAGES

15/01/2026

சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில், கள்ளத்தனமாக கடத்தப்பட்ட ஐந்து லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐந்து லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் அல்ல, ஐந்து லட்சம் மாத்திரைகள்!

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட செய்திகளை நாம் எளிதில் கடந்து விடுகிறோம். அதற்குப் பெரிதாக முக்கியத்துவம் தருவதில்லை. ஏனெனில், 'போதை' என்பது இப்போது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஓர் இருண்ட உலகைப் பற்றி, நம்மில் பலருக்குத் தெரிவதே இல்லை. நம் குடும்பத்தில் ஒருவர் போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் போது தான் இப்படி ஒன்று இருப்பது பற்றியே தெரியவரும்.

போதை மாத்திரைகளில் பல வகைகள் உண்டு. அதில், இளைஞர்கள் மத்தியில் சமீப காலமாக அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை தான் Tydol.

இந்த Tydol மாத்திரையின் வேதியியல் பெயர் Tapentadol. இது, வலி மற்றும் மயக்கம் தொடர்பான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தும் 'ஓப்பியாய்டு' வகையைச் சேர்ந்தது.

இந்த ஓப்பியாய்டு மாத்திரைகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை வேறொரு பதிவில் எழுதுகிறேன். இப்போது Tydol பற்றி மட்டும் பார்ப்போம்.

*

கடந்த ஐந்து ஆண்டுகளில், இளைஞர்கள் மத்தியில் Tydol போதை மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது.

இம்மாத்திரை, 50 அல்லது 100 மில்லிகிராம் அளவில் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே இம்மாத்திரையை வாங்க முடியும்.

எனக்குத் தெரிந்து எந்த மருத்துவரும் இப்போது இம்மாத்திரையை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது இல்லை. இதே வகையைச் சேர்ந்த இன்னொரு மாத்திரையான Tramadol ஐ மட்டும் ஒருசிலர் தீராத உடல் வலிக்காக பயன்படுத்துகிறார்கள். எனவே Tydol இப்போது எந்த மருந்தகத்திலும் கிடைப்பதில்லை.

எனவே இம்மாத்திரையை இவர்கள் கள்ளத்தனமாக வாங்குகிறார்கள். இதை வாங்கும் முறையே வியப்பாக இருக்கிறது. பெரும்பாலும் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலிருந்து தான் இவர்கள் இம்மாத்திரையை வாங்குகிறார்கள்.

என்னிடம் சிகிச்சை பெற்ற ஒருவர் சொன்ன விஷயம் இது:

'பெரும்பாலும் இந்த மாத்திரையை மும்பை, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து தான் நாங்கள் வாங்குகிறோம். தமிழ் நாட்டில் இம்மாத்திரை இப்போது அதிகம் கிடைப்பதில்லை. எங்களுக்குத் தனி நெட்வொர்க் இருக்கிறது. ட்ரெயின் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழ் நாட்டுக்கு இம்மாத்திரைகளைக் கடத்தி கொண்டு வருவோம்...'

இதை வாங்க இவர்களிடத்தில் தனி டெலிகிராம் குரூப் உள்ளது. அட்ரஸை அந்த குரூப்பில் அனுப்பிவிட்டு, அட்மினுக்கு தொகையை போன்பேவில் அனுப்பினால் போதும் மாத்திரை வீடு தேடி வரும்.

ஒரு அட்டையில் மொத்தம் பத்து மாத்திரைகள் இருக்கும். மார்க்கெட்டில் இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை, வெறும் முப்பது ரூபாய் தான். அதாவது ஒரு மாத்திரையின் விலை முப்பது ரூபாய். ஒரு அட்டையின் விலை முன்னூறு.

ஆனால் கள்ளத்தனமாக வாங்குபவர்கள், ஒரு அட்டைக்காக செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா? ஐந்தாயிரம் ரூபாய். அதாவது, ஒரு மாத்திரையின் விலை ஐநூறு ரூபாய். முப்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு மாத்திரையை ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.

நல்ல பொருளாதாரப் பிண்ணனியில் இருக்கும் மாணவர்களுக்கு இதில் சிக்கல் இல்லை. ஆனால், தாய் தந்தை கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலை? சொல்லப்போனால் இவர்கள் தான் இந்த போதை மருந்துக்கு அதிகளவில் அடிமை ஆகின்றனர்.

அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் திருட்டு புத்தி வெளியே வருகிறது. சொந்த வீட்டில் பணத்தைத் திருட ஆரம்பிப்பார்கள். வீட்டில் இருக்கும் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும். பிறகு அடுத்தவன் வீட்டில் கை வைப்பர். இதன் உச்ச நிலை தான் வழிப்பறியில் ஈடுபடுவது, பணத்துக்காக ஒருவனைக் கொல்வது.

இவர்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் முறையே பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்.

ஒரு அட்டையில் இருக்கும் பத்து மாத்திரைகளில், இரண்டு அல்லது மூன்று என அவர்களுடைய போதைக்கு ஏற்றவாறு எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர்.

அம்மாத்திரைகளை ஒன்றாக நசுக்கி பொடியாக்குவர். அந்தப் பொடியைத் தண்ணீருடன் கலக்க வேண்டும். எனவே 'நார்மல் சலைன்' எனும் உப்பு நீரில் அதை கலந்து கொள்வர். நார்மல் சலைன் என்பது வேறொன்றும் இல்லை, மருத்துவமனையில் பயன்படுத்தும் குளுகோஸ் பாட்டில் தான்.

கலந்த அந்த போதை திரவத்தை இப்போது வடிகட்ட வேண்டும். அதை வடிகட்ட, சிகரெட்டின் பின்பகுதியில் உள்ள மெலிதான பேப்பரைப் பயன்படுத்துவர். வடிகட்டிய திரவம் இப்போது உடலில் உட்கொள்ளத் தயாராகி விடும்.

அதை சிரெஞ்சினுள் ஊற்றி, தன்னுடைய இடது கையில் (வலது கைப்பழக்கம் உடையவராக இருந்தால்) இருக்கும் நரம்புக்குள் செலுத்திக் கொள்வர்.

இப்படி ஊசி போடத் தொடங்கும் போது, முதலில் குழுவாகத் தான் செயல்படுவர். அதாவது ஒரு போதை அடிமை, இன்னொருவனுக்கு ஊசி போட்டு விடுவான். ஆனால் நாளடைவில், தங்களுக்குத் தாங்களே ஊசி போட்டுக் கொள்ள அவர்கள் பழகி விடுவர்.

*

Tydol போன்ற போதை ஊசிக்கு அடிமையானவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

1. கையில் ஊசி குத்தி குத்தி அந்த இடமே புண் ஆகிவிடும். 'கருப்பு பொட்டு' போன்று ஆங்காங்கே முத்துக்கள் முளைத்திருக்கும்.

2. அந்தக் கருப்பு புள்ளிகளை மறைக்க, எப்போதும் இவர்கள் முழுக்கைச் சட்டையோடு வலம் வருவார்கள். வீட்டில் இருக்கும் போது கூட!

3. அந்த இடத்தை மறைக்க டேட்டூ குத்திக் கொள்வார்கள்.

4. பொதுவெளியில் யாரிடமாவது பேசும்போது, தங்களுடையக் கைகளை மறைக்க முற்படுவர்.

ஆக பதின்ம வயதில் இருக்கும் ஒரு இளைஞர், எந்நேரமும் முழுக்கை சட்டை அணிந்து, டேட்டூ குத்திக் கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்து, சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் விலகி நின்று, தேவையில்லாமல் அதிகம் செலவு செய்பவராக இருந்தால் அவர் போதை ஊசிக்கு முன்பே அடிமையானவர் என்பதைப் புரிந்து கொள்க!

*

சில நாட்களுக்கு முன்பு இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் என்னைப் பார்க்க வந்தார். அவருடைய தந்தையும் உடன் இருந்தார்.

மாநிறம். ஐந்தடி உயரம். சுருட்டை முடி. கண்கள் சோர்வாக இருந்தன. வாய்ப்பகுதி வரண்டு போய் இருந்தது. முழு கைச் சட்டை. இரண்டு கைகளிலும் ஏதேதோ உருவங்கள் பதியப்பட்ட டேட்டூ.

பார்த்த உடனே தெரிந்து விட்டது, இவர் போதை ஊசிக்கு அடிமையானவர் என்பது.

'என்ன பிரச்சினை' என்றேன். 'தூக்கம் வரவில்லை' என்றார். 'ஏன் வரவில்லை' என்றேன். 'தெரியவில்லை' என்றதும், அருகில் இருந்த அவருடைய தந்தை, அந்த இளைஞனின் கன்னத்தில் பளீர்ர் என ஒரு அப்பு அப்பி, 'ஏன் தூக்கம் வரலனு தெரியாதா உனக்கு...பொறுக்கி நாய...என்ன பிரச்சினைனு விரிவான சொல்லுடா டாக்டர் கிட்ட...'என்றார்.

சற்று நேரத்தில், தான் Tydol, Nitrazepam போன்ற போதை மருந்துகளை பயன்படுத்துவதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அதை நான் முன்பே எதிர்பார்த்திருந்ததால், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று மனதிற்குள் De-addiction Treatment பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஆனால் அடுத்து அவர் சொன்னதை அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் சொல்லிய விஷயம் இது தான்:

ஒரு வாரமாக காய்ச்சல் என்று, பொது மருத்துவர் ஒருவரை பார்த்திருக்கிறார். இப்படி ஊசி போடும் பழக்கம் இருப்பது தெரிந்து, அம்மருத்துவரும் அவரிடம் ரத்த பரிசோதனைகள் எடுத்துக் கொண்டு வரும்படி எழுதி கொடுத்திருக்கிறார். அதில் எச்.ஐ.வி எய்ட்ஸ் பரிசோதனையும் ஒன்று. ஆம்! பரிசோதனையில் அந்த இளைஞருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெறும் இருபது வயதில் எய்ட்ஸ் நோய்!

ஐந்து நிமிட போதை சுகத்துக்கு ஆசைப்பட்ட அவர், இனி காலம் முழுவதும் எய்ட்ஸ் மருந்தை சாப்பிட வேண்டும்.

கூலி வேலை செய்து, சிறுக சிறுக பணம் சேர்த்து, அப்பணத்தைக் கொண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மகனை சேர்த்து விட்ட... இப்போது அவன் அருகே அமர்ந்திருக்கும் அந்த தந்தையின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

போதை ஊசி போட்டுக் கொள்வதில் ஆபத்தான நிலையே இது தான். அது 'நீடில் ஷேரிங்'. அதாவது ஒருவன் பயன்படுத்திய சிரெஞ்சை இன்னொருவன் பயன்படுத்துவது. அந்த முதலாமவனுக்கு எய்ட்ஸ் போன்ற வியாதி இருந்தால் அது அப்படியே இவனுக்கும் பரவும். இப்படி சங்கிலித் தொடராக அடுத்தடுத்து பயன்படுத்துபவனுக்கு எய்ட்ஸ் நோய் எளிதில் பரவும்.

தனக்கு எய்ட்ஸ் வந்துள்ளது எனத் தெரிந்த பிறகு அந்த இளைஞர் Tydol மாத்திரை போடுவதை விட்டு விட்டாரா?

அது தான் இல்லை. அடுத்த நாளே அதிக அளவிலான மாத்திரைகளை உடலினுள் செலுத்திக் கொண்டார்.

அவருக்கு அட்மிஷன் தேவைப்பட்டது. உரிய சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

நண்பர்களே!

இது தான் போதை. போதை ஒரு புதைக்குழி. அதில் விழுந்துவிட்டால் மீண்டு வருவது சாத்தியம் இல்லை. என்னதான் இதற்கு பல சிகிச்சைகள் இருந்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். அதற்குப் பெரிய அளவில் தன்னம்பிக்கையும் குடும்ப நபர் ஒத்துழைப்பும் தேவை.

இப்படி போதை ஊசியை போட்டுக் கொள்பவர்கள், எடுத்த உடனேயே இதனை பயன்படுத்த மாட்டார்கள். இதற்கு முன்பு சிகரெட், கூல் லிப், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தி, அவையெல்லாம் சலித்துப் போன பின்பு தான், இன்னும் அதிக போதை வேண்டி இதுபோன்ற ஊசிகளைப் போட ஆரம்பிப்பார்கள்.

கூல் லிப் போன்ற போதை வஸ்துக்களை பத்து வயதிலிருந்தே பள்ளி மாணவர்கள் உபயோகிக்கின்றனர். இந்தக் கட்டத்திலேயே இவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது தான் புத்திசாலித்தனம். இல்லையெனில் இதே நிலை நாளை நம் பிள்ளைகளுக்கும் வரலாம்.

-சு. சரத்குமார், மனநல மருத்துவர், கோவை.

படம் -கூகுள் குரோம்‌_ல்
எடுத்தது.

13/01/2026

புதுச்சேரி போக்குவரத்து போலீசாரின் புது போக்குவரத்து விதி.

Own board கார் உரிமையாளர் மட்டுமே ஓட்ட வேண்டும். மற்றவர்கள் ஓட்டினால் அபராதம் விதிப்போம்.
----------------------------------------

ஜனவரி 5 ம் தேதி. விழுப்புரம் – காரைக்கால் விரைவு சாலை. நண்பரின் காரில் சென்று கொண்டிருந்தோம்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் காரை நிறுத்தி ஆவணங்கள் கேட்டார்கள். கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுத்தோம்.

சக்திவேல் என்ற போலீஸ் கூறிய அதிர்ச்சி செய்தி :

“Own board கார் உரிமையாளர் மட்டுமே ஓட்ட வேண்டும். மற்றவர்கள் ஓட்டினால் அபராதம் விதிப்போம்.”

நான் அப்படி ஒரு விதி இல்லையே சார் என்றதற்கு இது எங்கள் ரூல் என்று வாதிட்டார்.

என் உறவினர் அவருடைய SCIENTIST அடையாள அட்டை காட்டியதும் வழி விட்டார்.

நடந்த சம்பவத்தை புதுச்சேரி முதல்வருக்கும், உள்துறை அமைச்சருக்கும் புகாராக மெயிலில் அனுப்பி இருக்கிறேன்.

கடந்த பத்து வருடங்களாக புதுச்சேரி கிருமாம்பாக்கம் மற்றும் ECR ரோட்டில் இவர்கள் அராஜகம் தாங்க முடியவில்லை.

சட்டப்படி இவர்களை தண்டிக்க ஒருவருமே இல்லையா?

Youngest disciple 18 years old Miss Nithya SreeLearning havan kriya today.All friends please bless her.
11/01/2026

Youngest disciple 18 years old

Miss Nithya Sree

Learning havan kriya today.

All friends please bless her.

31/12/2025

I pray KAALI MAA for your happy and prosperous life.

Happy new year to you.

30/12/2025

நன்றி Nallini முக நூல்
இந்த வயசுல நாமெல்லாம் கரப்பான் பூச்சி டிசெக்ஷன் கிளாஸசை கூட பாதி கண்ணை மூடிட்டேதான் பார்ப்போம்.

பொது இடத்துல யாருன்னே தெரியாத ஒருத்தர் கால் இடறி கீழே விழ போனால் கூட பதறி, பார்த்து பார்த்து மெதுவா போங்ன்னு சொல்லும் தலைமுறை நம் தலைமுறை.

ஆனால் நம் கண் முன்னாலேயே இன்றைய இளைய தலைமுறை இப்படி காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வதை பார்க்கும் போது...
இப்படியான சமூகத்தில் எப்படி பிள்ளைகளை வெளியே அனுப்ப என்று மனசு ஆடித்தான் போகிறது.

சாதாரமாகவே பையன் வெளியே போனால் வீடு வந்து சேரும் வரை படபடப்பாவே இருக்கு, ஏன்னா சாலையில் நடக்கும் விபத்துக்கள் அப்படி.

இப்போது இப்படியான கொடூரம்...

இதையெல்லாம் பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழக கொடூரம் நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை.

ஈசியார் ரோட்டில் பெண்களை துரத்தி சென்ற கட்சி கொடி கட்டிய கயவர்கள் கண் முன்னே வந்து போகிறார்கள்.

ஒருத்தணுக்காவது ஒழுங்கான தண்டனை கொடுத்திருந்தா இன்று இந்த அவலம் நடந்திருக்குமா?

வெளியில் நடமாடவே அச்சமாக இருக்கிறது.

என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

கொலை செய்வதை எப்போது வீரம் என்று தமிழ் சினிமா காட்டியதோ அப்போது ஆரம்பித்த ரவுடியிசம் இது.

அடங்க மறு, அத்து மீறு என்பது அடாவடித்தனம் என்பதை கற்று கொடுக்க வேண்டிய பெற்றோரே, ஊக்குவிக்கும் போது, என்ன சொல்ல.

வீர மகனுக்கு வெற்றி திலகம் சூடி போருக்கு அனுப்பி வைத்த தாய்மார்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில் லட்ச கணக்கில் செலவு செய்து கல்லூரி படிக்கும் மாணவனுக்கு அதி நவீன பைக் வாங்கி கொடுத்து, போய் சாவு மகனேன்னு வழி வைக்கிறாள், திராவிட தாய்.

இதெல்லாம் ஒரே நாளில் மாறும் விஷயம் அல்ல. நம் கலாச்சாரம் என்னும் ஆணி வேரிலேயே கரையான் அரித்து விட்டது. மீண்டும் நம் பண்பாட்டை துளிர்க்க வைப்பது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல.

இந்து மதத்தை நசுக்க நசுக்க இது போன்ற ஒழுக்க கேடுகள் வளரத்தான் செய்யும். இந்து மதம் வெறும் வழிபாடு மட்டும் அல்ல, அது வாழ்வியல்.

வாழ்வியலை அழித்தால் இப்படித்தான் சமூகம் கெட்டு சீரழியும்.

கோயிலுக்கு போகாதே, கடவுளை நினையாதே, இந்து மதம் கற்பிக்கும் ஒழுக்கங்களை மதிக்காதே, மூட நம்பிக்கை என உதறி தள்ளு என கள்ள போதனை செய்யும் எந்த தலைவனும் தன் வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் அவ்வாறு இருக்க அனுமதிப்பது இல்லை.

பாந்தமாக பட்டு சேலை உடுத்தி, நெற்றி நிறைய குங்குமம் இட்டு தலை நிறைய பூ சூடி மங்களகரமாக கோயிலுக்கு செல்வார்கள்.

அவர்கள் வீட்டு பிள்ளைகள் ஆயிரம் சர்ச்சை, முறை தவறிய உறவுகள் வைத்திருந்தாலும், மனைவி, குழந்தை, குடும்பம் என்ற கட்டு கோப்பை குலையாமல் வாழ்வார்கள்.

அவர்கள் குடும்பத்து பிள்ளைகள் யாராவது கஞ்சா அடிமயாக இருக்கிறார்களா, இல்லை டாஸ்மாக் போதையுடன் சாலையோரம் மதி இழந்து கிடக்கிறார்களா?

உபதேசம் எல்லாம் ஊருக்குதான்...

அவனுங்க பேச்சை கேட்டு, தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் குடும்பங்கள் பல.

திராவிட கொள்கை என்னும் கடவுள் மறுப்பு எண்ணம் இந்த பூமியில் இருக்கும் வரை இந்த சமூகத்தை திருத்த முடியாது.

என்று இந்த இளைய சமூகம் இந்து மத வாழ்வியல் வழி முறைகளையும், இந்த மதம் சொல்லும் ஒழுக்க நெறிகளையும் பின்பற்றி சுத்த இந்துவாக மாறுகிறார்களோ அன்று தான் இந்த தமிழகம் உருப்படும்.

அதற்கு தேவை நல்ல ஒரு அரசு, இந்துக்களை மதிக்கும் ஒரு அரசு, இந்து சமயத்திற்கு ஆதரவாக இருக்கும் ஒரு அரசு.

அப்படி ஒரு அரசு அமையும் வரையிலும் இந்த சொரியான் மண்ணை ஒழுக்க கேட்டில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.

27/12/2025

I am in Chennai now

26/12/2025

Research postponed

26/12/2025
24/12/2025

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Ravi Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Yoga Ravi Page:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram