நோயும் தீர்வும் - Dr Subha

நோயும் தீர்வும் - Dr Subha Dr Subha BAMS. DMDPN. AVN Ayurveda Hospital, Madurai

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும். காய்ச்சல், தலைவலி, தசை, எலும்பு அல்லது மூட்டு வலி,குமட்டல்,வாந்தி,க...
10/12/2023

டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும்.

காய்ச்சல், தலைவலி, தசை, எலும்பு அல்லது மூட்டு வலி,குமட்டல்,வாந்தி,
கண்களுக்குப் பின்னால் வலி,
வீங்கிய சுரப்பிகள்,
சொறி போன்ற அறிகுறிகளுடன் ஆரம்ப நிலையில் தோன்றி, நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க இரத்த நாளங்களில் இரத்த கசிவு என்று, பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்நோயால் பாதிக்கப்படும் மக்கள், பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் குணமடைவார்கள். சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் மோசமாகி மற்றும் உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது. இது கடுமையான டெங்கு, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் அல்லது டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது.

டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கொசு கடிக்கும் போது, ​​அந்த வைரஸ் கொசுவிற்குள் நுழைகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட கொசு மற்றொரு நபரைக் கடிக்கும்போது, ​​வைரஸ் அந்த நபரின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.

எனவே கொசு கடியில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். கொசு விரட்டிகள் பயன்படுத்துவது. மூலிகை புகை இடுவது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்காமல் பார்த்துக்கொள்வது போன்ற நாட்வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைய ஆரம்பிக்கும். அந்த குறைந்த தட்டணுக்களை உயர்த்துவதே பெரிய சவாலாக இருக்கும்.

டெங்கு காய்ச்சல் என்று கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அலோபதி சிகிச்சையுடன் சேர்த்து ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவும் சிறந்தது.

அசைவ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. முக்கியமாக நண்டு சூப் சிறந்தது. மேலும் பப்பாளி இலை சாறு எடுப்பதன் மூலம் இரத்த தட்டணுக்கள் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சலால், மற்றவர்களும் ஆயுர்வேத மருந்துகளை தற்காப்பு நிவாரணியாக பயன்படுத்தலாம். அதாவது முன்கூட்டியே இரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் மூலிகைகளை உட்கொள்ளலாம் .

பப்பாளி,காட்டு வேம்பு,நில வேம்பு,
வெட்டி வேர், கொம்பு புடலை, கோரை கிழங்கு,மிளகு,பற்படக புல்,சீந்தில் கொடி போன்ற பல்வேறு மூலிகைகள் உள்ளடக்கிய ஆயுர்வேத மாத்திரைகளான, க்லைவேரா மாத்திரை, குழுச்சியாதி மாத்திரை, பஞ்ச நிம்பாதி மாத்திரை பயன்படுத்தி நிவாரணம் பெறுவது சிறந்தது. அலோபதி மருத்துவம் பார்பவர்களும் அதோடு சேர்த்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளலாம். **************** மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும். அறிவோம் ஆயுர்வேதம் Dr.D.SUBHA. BAMS, DMDPN. AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI. 7339008816. இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்.

தற்போது நாடு முழுவதிலும்  கண்வலி நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்த்தொற்றுஅதிகமாக குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள...
08/12/2023

தற்போது நாடு முழுவதிலும் கண்வலி நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த நோய்த்தொற்றுஅதிகமாக குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயானது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. அதாவது கண்வலி உள்ள ஒரு நபரை நாம் பார்ப்பதால் இந்நோய் பரவாது. ஒருவர் பயன்படுத்திய பொருளை நாம் தொடுவதாலோலும், அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொள்பவருக்கும் இந்நோய் பரவுகிறது.

உங்கள் குடும்பத்தாருக்கு பரவாமல் தடுப்பதற்கு வழிமுறைகள் ; ✨பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி தண்ணீரில் உங்கள் கைகளை கழுவவும்.
✨ உங்கள் கண்களைத் தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்கவும். ✨பொருட்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்: துண்டுகள், தலையணைகள் அல்லது கண் ஒப்பனையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ✨தனிமைப்படுத்தல் மற்றும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்:
✨உங்கள் கண்வலி சரியாகாதவரை பள்ளி அல்லது வேலையிலிருந்து விலகி இருங்கள்.
✨வெளியில் செல்லவேண்டும் என்ற நிலை இருக்கும் பொழுது கண்ணாடி பயன்படுத்தவும். ✨உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கண்வலி நோய் ஏற்பட்டால், மற்றவர்கள் நான் மேலே குறிப்பிட்ட தற்காப்பு சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம். ✨மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவும்:

இதனுடன் நான் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்துகளானது வேம்பு , மஞ்சள் , நில வேம்பு, கொம்பு புடலை, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், கடுகு ரோஹிணி போன்ற பல்வேறு முலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மாத்திரைகளான, நிம்ப ராஜன்யாதி மாத்திரை, படோல கடு ரோஹின்யாதி மாத்திரை, திரிபலா மாத்திரை மற்றும் கண் சொட்டு மருந்தினையும் பயன்படுத்தி நிவாரணம் பெறுவது சிறந்தது. அலோபதி மருத்துவம் பார்பவர்களும் அதோடு சேர்த்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளலாம். **************** மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும். அறிவோம் ஆயுர்வேதம் Dr.D.SUBHA. BAMS, DMDPN. AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI. 7339008816. இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்.

அர்டிகேரியா என்னும் தோல் அலர்ஜி நோய்!!!அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, 'அர்ட்டிகேரியா'...
19/11/2023

அர்டிகேரியா என்னும் தோல் அலர்ஜி நோய்!!!
அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, 'அர்ட்டிகேரியா' (Urticaria) என்று அழைக்கப்படுகிற 'நச்சு அரிப்பு' நோய். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோலில் பல இடங்களில் பூரான் கடித்த மாதிரி வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும்

அரிப்புடன் தோல் சிவந்து ஒரு சில நாளோ, சிலருக்கு ஒரு சில வாரமும், இன்னும் சிலருக்கு மாதக்கணக்கில் கூட, காணப்படும்.
சிலருக்கு Urticaria வரும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்து காணப்படும்.

சிலருக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்தினால் கூட வரும். இன்னும் சிலருக்கு மாத்திரை மருந்துகள் இம்மாதிரியான அலர்ஜியை ஏற்படுத்த லாம். உணவுகளில், மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், மாமிசங்கள் போன்ற பொருட்களும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மண மூட்டிகளும், கோதுமை உணவுகள் கூட அலர்ஜியை ஏற்படுத்தும். யாருக்கு எதனால் அலர்ஜி வருகிறது என்பதை கண்டறிந்து அதனை ஒழிவாக்க வேண்டும். அதுவே முக்கிய காரணமாகும்.

ஆயுர்வேதத்தில் நெய் மருந்து பிரயோகத்தில் தொடங்கி, பேதியின் மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டு அதன் மூலம் உடலில் உள்ள தோஷத்தின் சமநிலையை பொறுத்து மேலும் உள் மருந்துகள் வழங்கப்படும். அதில் முக்கியமாக வேம்பு, கீழாநெல்லி, நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், புடலை, கடுகு ரோஹிணி, மஞ்சள், வில்வம் போன்ற பல மூலிகைகள் கொண்ட உள் மருந்துகள் வழங்கப்படும்.

மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும்.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

வில்வம் இலை தேநீரின் மகத்துவம்!அனைவருக்கும் இந்த வில்வம் இலை, கடவுளுக்கு உகந்தது என்றும், மாலையாக தயாரித்து இறை வழிபாட்ட...
18/11/2023

வில்வம் இலை தேநீரின் மகத்துவம்!

அனைவருக்கும் இந்த வில்வம் இலை, கடவுளுக்கு உகந்தது என்றும், மாலையாக தயாரித்து இறை வழிபாட்டிற்கு வழங்கலாம் என்றுமே தெரியும். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களோ ஏராளம். எண்ணற்றது.

வயிற்று புண்( அல்சர்), குடல் புண்கள், குடல் அலர்ஜி நோய்கள், அடிக்கடி பேதி பிரச்சனை, நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், வாந்தி போன்ற அனைத்து செரிமான பிரச்சனை உள்ளவர்களும் தாராளமாக இந்த தேநீரை எடுத்துக்கொள்ளலாம்.

அதோடு மட்டும் இல்லாமல், நீரிழிவு நோய் உள்ளவர்களும் தொடர்ந்து இந்த தேநீரை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாடர் லைனில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த மூலிகையை உள் மருந்தாக எடுப்பது சிறந்தது. தேநீராக எடுக்க முடியவில்லை என்றாலும் தினமும் 2 இலைகளை மென்று, உமிழ்நீருடன் எடுப்பது சிறந்தது. குடும்பத்தில் பரம்பரையாக சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு இந்த தேநீரை பழக்கபடுத்துவது சிறந்தது.

இந்த இலைகளை 5 எடுத்து, நன்கு சுத்தம் செய்து, ஒரு செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் இதனை இட்டு, அடுத்த நாள் காலை அந்த இலையை மென்று அந்த தண்ணீரையும் குடித்து வர அல்சர் நோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும்

ஆயுர்வேதத்தில், வில்வாதி மாத்திரை என்றே உள்ளது. வில்வம் முதலாகிய பல மூலிகைகள் உள்ளடக்கிய இந்த மாத்திரை, பேதி, வயிறு மற்றும் குடல் சம்பந்த பட்ட நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. இந்த மாத்திரையை உள்மருந்தாக எடுப்பதற்கு முன்பு மருத்துவரை பரிந்துரை அவசியம்.

மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும்.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

மருந்து மாத்திரைகள் என்பது பிற நோயினை உருவாக்கக்கூடியதாக இருக்கக்கூடாது... பிற நோய்களையும் குணப்படுத்துவதாக இருக்க வேண்ட...
17/11/2023

மருந்து மாத்திரைகள் என்பது
பிற நோயினை உருவாக்கக்கூடியதாக இருக்கக்கூடாது... பிற நோய்களையும் குணப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதுவே ஆயுர்வேத மருந்துகள்!

உடனடி அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சைகளுக்கு அலோபதி அவசியம். அதேபோல்நீண்டகால நோய்களுக்கு சித்தா ஆயுர்வேத மருந்துகளும் சி...
17/11/2023

உடனடி அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சைகளுக்கு அலோபதி அவசியம். அதேபோல்
நீண்டகால நோய்களுக்கு சித்தா ஆயுர்வேத மருந்துகளும் சிகிச்சைகளுமே தீர்வு!

காய்ச்சல் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை;✨சளியோடு சேர்ந்து காய்ச்சல் இருக்கும் பொழுது காய்கறி சூப் எடு...
17/11/2023

காய்ச்சல் இருக்கும் பொழுது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை;

✨சளியோடு சேர்ந்து காய்ச்சல் இருக்கும் பொழுது காய்கறி சூப் எடுப்பது நல்லது. அதில் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து தயார் செய்ய வேண்டும்

✨காய்ச்சல், பசியின்மை இருக்கும் பொழுது, பருகும் நீர் முழுவதும் சீரகம் இட்டு காய்ச்சிய வெந்நீராக இருக்க வேண்டும்.

✨ சூடான அரிசி கஞ்சி, சீரகம் சேர்த்து தயார் செய்து சாப்பிடலாம். மேலும் ரசம் சாதம் போன்றவை நல்லது.

✨பூண்டு, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தி துவையல் செய்து, ஆவியில் தயாரித்த உணவான இட்லி, இடியாப்பம் போன்ற உணவை எடுத்துக்கொள்ளலாம்.

✨காய்ச்சல் இருக்கும் பொழுது பால் உணவுகளை தவிர்க்க வேண்டும். டீ, காப்பிக்கு பதிலாக சுக்குமல்லி காப்பி அல்லது ஹெர்பல் டீ எடுத்துக்கொள்ள வேண்டும்.

✨வாந்தி உணர்வோடு இருக்கும் பொழுது கோதுமை பிரட் எடுத்துக்கொள்ளலாம்.

✨காய்ச்சல் சிறிது குறைய ஆரம்பிக்கும் பொழுது, அதாவது 3 நாட்களுக்கு பிறகு வேக வைத்த முட்டையை எடுத்துக்கொள்வது நல்லது. முட்டையை வேறு எந்த முறையிலும் சமைத்து எடுப்பது கூடாது. வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

✨ தொண்டை வலி, கரகரப்பு, காய்ச்சல் இருக்கும் பொழுது தேன் எடுத்துக்கொள்ளலாம்.

✨தூதுவளை இலையை வெங்காயம், மிளகு, சீரகத்துடன் சேர்த்து அரைத்து ரசம் தயாரித்து சாதத்துடனோ அல்லது தனியாகவோ எடுப்பது நல்லது.

காலையில் எழுந்ததும்  தொடர்ந்து அடுக்கு தும்மல் பிரச்சனையா?சிலருக்கு அடுக்கு தும்மலால் கண்கள் சிவந்து, கண்ணீர் வர தொடங்கு...
17/11/2023

காலையில் எழுந்ததும் தொடர்ந்து அடுக்கு தும்மல் பிரச்சனையா?
சிலருக்கு அடுக்கு தும்மலால் கண்கள் சிவந்து, கண்ணீர் வர தொடங்கும். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து படிப்படியாக குறைய ஆரம்பிக்கும், இதனை தொடர்ந்து பகல் முழுவதும் நார்மல் ஆக இருப்பார்கள். மீண்டும் அடுத்த நாள் காலை அடுக்கு தும்மல் தொடரும்.

ஆனால் இன்னும் சிலருக்கு, தும்மல் நிக்காமல், மூக்கு அடைப்பு, தலை பாரம், மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவார்கள்.

பொதுவாக இதனை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
அலர்ஜி ரைனைடிஸ், நான் அலர்ஜி ரைனைடிஸ்( இதில் என்று அழைக்கபடும்.
போலன் அலர்ஜி என்று கேள்வி பட்டு இருப்பீர்கள். அதாவது மகரந்ததூள் அலர்ஜி. காலை நேரங்களில் பூக்களில் உள்ள மகரந்த துகள்கள், காற்றில் பறக்க தொடங்கும். கண்ணிற்கு புலப்படாது. அதனை அதிகாலையில் நுகரும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
இது போன்ற அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், தூசியை தவிர்க்க வேண்டும். தலையணை உறை, பார்வைகளை அடிக்கடி துவைப்பது நல்லது. மேலும் வீடு கூட்டுதல், தூசி உள்ள இடங்களை சுத்தம் செய்தலை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.

வீட்டில் பூனை, நாய் போன்ற விலங்குகள் வளர்க்கப்பட்டால், சற்று விலகி இருப்பதும், அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியம். அதன் முடிகளில் இருந்து இது போன்ற அலர்ஜி பிரச்சனை ஏற்படும்.

மழை காலங்களில் உங்கள் ஆடைகள், போர்வைகளில் வெள்ளையாக பூஞ்சை காளான்கள் தொற்று காணப்படும். அந்த துணிகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
மிக அதிக வாசனை உள்ள சாம்பூ, லோசன், பெர்ஃப்யூம் போன்றவையும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.
முதலில் இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் எந்த காரணத்தால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை தொடர்ந்து மருத்துவம் பார்ப்பது நல்லது.

ஆயுர்வேதத்தில் இதுபோன்ற அலர்ஜி ரைனைடிஸ் பிரச்சனைக்கு பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. மேலும் பிரத்யேக உள் மருந்துகளோ ஏராளம்.
பஞ்ச கர்மா சிகிச்சையில் நஸ்யம் என்ற சிகிச்சையானது அளிக்கப்படும்.

மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும்.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

குடல் புழுக்கள் வெளியேற உணவில் கவனம் தேவை!!!மண்ணில் விளையாடுவது, சுகாதாரமற்ற உணவு, குடிநீர் ஆகியவை மூலம் நமது குடலில் ஒட...
16/11/2023

குடல் புழுக்கள் வெளியேற உணவில் கவனம் தேவை!!!

மண்ணில் விளையாடுவது, சுகாதாரமற்ற உணவு, குடிநீர் ஆகியவை மூலம் நமது குடலில் ஒட்டுண்ணி புழுக்கள் நுழைந்து வளரும். இவை நமது ரத்தத்தை உறிஞ்சு ரத்தசோகையை உண்டாக்கும். எடை இழப்பு, வயிற்று வலி, உடல் பலவீனம், குமட்டல் ஆகியவற்றை இந்த குடற்புழுக்கள் ஏற்படுத்தும். இந்த அழையா விருந்தாளியை உடனே விரட்டி அடிக்க வேண்டும்.

குடல் புழுக்கள் வெளியேற உணவில் கவனம் தேவை!!!

மண்ணில் விளையாடுவது, சுகாதாரமற்ற உணவு, குடிநீர் ஆகியவை மூலம் நமது குடலில் ஒட்டுண்ணி புழுக்கள் நுழைந்து வளரும். இவை நமது ரத்தத்தை உறிஞ்சு ரத்தசோகையை உண்டாக்கும். எடை இழப்பு, வயிற்று வலி, உடல் பலவீனம், குமட்டல் ஆகியவற்றை இந்த குடற்புழுக்கள் ஏற்படுத்தும். இந்த அழையா விருந்தாளியை உடனே விரட்டி அடிக்க வேண்டும்.

குடல் புழுக்கள் பிரச்சனை உள்ளவர்கள் கீழ்காணும் மாதிரியான உணவுகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்;

✨முருங்கை கீரை
✨பூசணி விதைகள்
✨கல்யாணமுருங்கை
✨சீரக தண்ணீர்
✨மஞ்சள்
✨அகத்தி கீரை
✨பிரண்டை
✨சுண்டைக்காய்
✨துளசி இலைகள்
✨புடலங்காய்
✨பீர்க்கங்காய்
✨பூண்டு துவையல்
✨பப்பாளி காய் கூட்டு
✨ அன்னாசி பழம்
✨வெள்ளை பூசணி
✨வேப்பிலை சாறு
✨புதினா
✨கொத்தமல்லி
✨கிராம்பு தண்ணீர்
✨ பாகற்காய்
போன்ற குடல் புழுக்களை அழிக்கும் குணம் கொண்ட மூலிகைகளை உள் மருந்தாகவும் உணவாகவும் எடுக்க இவ்வகை பிரச்சனையில் இருந்து தீர்வு பெறலாம்.

ஆயுர்வேதத்தில் விரேச்சனம் என்ற ஒரு பஞ்ச கர்மா சிகிச்சை உள்ளது. இதன் முதன்மை நோக்கமே, பேதியின் மூலம், வயிற்றில் உள்ள கிருமிகளை அகற்றுவது ஆகும்.
மேலும், வேப்பிலை சாறு போன்ற கசப்பான மூலிகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது கடினமாக இருக்கும். அதே மூலிகையை மாத்திரை வடிவில், ஆயுர்வேத மருந்தகதில் பெற்று கொள்ளலாம். மேலும் படோல கடுரோஹின்தி கஷாயம் மாத்திரை, நிம்ப ராஜன்யதி மாத்திரை, வில்வாதி மாத்திரை, பஞ்ச நிம்பாதி மாத்திரை என குடல் புழுக்களை அழிக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. கிருமி சோதனி வடி என்ற பிரத்யேக மாத்திரையும் உள்ளது.

மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும்.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

TPO, TG, TSHR ஆன்டி பாடி டெஸ்ட் யாரெல்லாம் எடுக்க வேண்டும்?தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கான ஒரு பரிசோதனை முறை ஆகும். ...
14/11/2023

TPO, TG, TSHR ஆன்டி பாடி டெஸ்ட் யாரெல்லாம் எடுக்க வேண்டும்?

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கான ஒரு பரிசோதனை முறை ஆகும். பொதுவாக TSH, T3,T4 என்ற பொதுவான பரிசோதனை செய்து இருப்பீர்கள். இதனை வைத்து Hyperthyroidism ( தைராய்டு சுரப்பி அதிகமாக சுரத்தல்) அல்லது Hypothyroidism ( தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல்) என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற மருந்துகளை எடுத்து வருவீர்கள்.

அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி தெரிந்து இருக்கும். அதாவது நோய் தொற்றுக்கு எதிராக நம் உடம்பை பாதுகாக்கும் ஒரு செயல் திறன் ஆகும். அதாவது நம் உடலின் பாதுகாவலன் என்று அர்த்தம். இதற்கு மாறானது தான் நோய் எதிர்ப்பு திறன் மாற்றம். இத்தகைய நிலையில் நமக்கு நன்மை பயக்கும் இடத்தில் உள்ள நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கும். அதாவது புரியும் படி சொன்னால் சைலண்ட் கில்லர் மாதிரியான செயல் ஆகும்.

சரி, இந்த நோய் எதிர்ப்பு மாற்றம் பாஸிட்டிவ் ஆனால் என்ன ஆகும். அதாவது, இந்த ஆன்டி பாடி பாஸிட்டிவ் ஆக இருந்தால், அந்த நோயினை முழுமையாக குணப்படுத்த வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் சரியான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ஆன்டி பாடி நெகடிவ் ஆக இருந்தால், உணவியல், வாழ்வியல் மாற்றம் மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் பெரும்பாலும் சரி செய்ய இயலும்.

எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் யாருக்கேனும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், TSH, T 3, T 4 டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு, TPO, TG, TSHR என்ற ஆன்டி பாடி டெஸ்ட் எடுத்து பார்ப்பது நல்லது. அதனை தொடர்து ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது நல்லது.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

பயணத்தின் போது கால் வீங்குகிறதா???நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரும் பொழுதோ அல்லது நிற்கும் பொழுதோ, சிலருக்கு காலில், மு...
13/11/2023

பயணத்தின் போது கால் வீங்குகிறதா???

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரும் பொழுதோ அல்லது நிற்கும் பொழுதோ, சிலருக்கு காலில், முக்கியமாக கணுக்காலை சுற்றி இந்த வீக்கம் ஏற்படும்.
நீண்ட நேரம் ஒரே அமைப்பில் இருக்கும் பொழுது தமனி மற்றும் சிரைகளில்( இரத்த நாளங்கள்) அழுத்தம் ஏற்பட்டு, இரத்தத்தில் இருந்து ஒரு வித திரவம் வெளியாகி தசைகளுக்கு இடையே சென்று, தேங்க ஆரம்பிக்கிறது. இதுவே வீக்கமாக மாறுகிறது. ஆனால் அனைவருக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருப்பது இல்லை.

முக்கியமாக காலில் நரம்பு சுருள் நோய் என்று அழைக்கபடும், வெரிக்கோஸ் வெயின் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படும்.

அதிகப்படியான வலி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இன்றி நீண்ட நாள் எடுக்கும் சிலருக்கும் இது போன்ற அறிகுறிகள் தென்படும்.
தூக்க மாத்திரை அதிகமாக எடுப்பவர்களுக்கு இந்த கால் வீக்கம் அதிகமாக காணப்படுவதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.

இது போன்று வீக்கம் அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுகி கல்லீரல், கிட்னி, இருதயம் சம்பந்த பட்ட வீக்கமா என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

உணவியல் ரீதியாக மூக்கிரட்டை கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்ப்பதும், நெருஞ்சில் கஷாயம் அடிக்கடி எடுத்துக்கொள்வது சிறந்தது. மேலும் பரிசோதனை மூலம் மூல காரணத்தை கண்டறிவது அவசியம்.

ஆயுர்வேதத்தில், இது போன்ற பிரச்சனைகளை படிப்படியாக குறைக்க பல்வேறு வெளிப்புற சிகிச்சைகளும், பல்வேறு பிரத்யேக உள் மருந்துகளும் உள்ளன. முக்கியமாக புணர்னவ என்ற மூலிகை அடங்கிய மாத்திரைகள் வீக்கம் குறைய பயன்படுத்த படுகிறது. அதனை தொடர்ந்து சோபோரிட், கோக்ஷுரம் போன்ற பக்க விளைவுகள் அற்ற ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

மாத்திரை, மருந்து என்பது பிற நோய்களை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. பிற உறுப்புகளுக்கும் நலன் பயக்குவதாக இருக்கவேண்டும்.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

மலச்சிக்கல் பல சிக்கல்!!!இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற்ற ஒருவருக்கு, மலச்சிக்கல் பிரச்சனையோ பல மாதங்களாக...
13/11/2023

மலச்சிக்கல் பல சிக்கல்!!!

இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற்ற ஒருவருக்கு, மலச்சிக்கல் பிரச்சனையோ பல மாதங்களாக இருப்பதாகவும், அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வில்லை என்றும் கூறினார்.
மேலும் அவரோடு பேசுகையில், அவருக்கு மீன்குழம்பு, சிக்கன் சாப்பிட்டால் மலத்தில் இரத்தம் வெளியேறுவதாகவும் கூறினார். இவ்வாறு அறிகுறிகள் இருந்தும், அவருக்கு என்னவோ, மூலப்பிரச்சனை இல்லை என்று நம்புகிறார். நமக்கு நோய் இல்லை என்று நம்புவது என்னவோ நல்ல விஷயம் தான்.
ஆனால், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டும், அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.

பிறகு பரிசோதனை செய்து பார்க்கையில், உள் மூலம் இருந்தது. மற்றும் ஆசன வாயில் பல வெடிப்புகள் இருந்தது. இந்த ஆசன வாய் வெடிப்பிற்கு முக்கிய காரணமே, மலம் கட்டியாக இருப்பது, அதனை வெளியேற்றுவதற்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதும் தான்.

இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று,
மூல பிரச்சனை அறிகுறிகள் உள்ளவர்கள், மலம் கழிக்க அழுத்தம் அறவே கொடுக்க கூடாது. அழுத்தம் கொடுப்பதால், இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி, வலி வீக்கம், இரத்தபோக்கு ஏற்படும்.

மேலும் அவர்,அவ்வப்பொழுது காயம் மாத்திரையை பயன்படுத்துவதாக கூறினார். இது பாராட்டிற்குரியது. அவ்வபோது, மலம் இலக்கியாக உள்ள இது போன்ற மூலிகை மாத்திரையை மருத்துவர் ஆலோசனை படி பயன்படுத்துவது முக்கியம்.

மேலும், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு, முதல் காரணம் மலத்தில் ஏற்படும் மாற்றமே. சிலருக்கு கடினமாகி மலச்சிக்களாக இருக்கும். சிலருக்கு அடிக்கடி லூஸ் மோஷன் ஆக போகும். இது இரண்டுமே மூலம் பிரச்சனையை அதிகரிக்கும்.

எந்த வகையான மருத்துவ முறையை பின்பற்றினாலும், உணவினை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் மருந்தின் மூலமே சரி செய்து விடலாம் என்று எண்ணுவது தவறான செயல். மேலும் சர்ஜரி செய்தாலும், மீண்டும் வேறு ஒரு இரத்த நாளங்களில், உங்கள் உணவியல் மாற்றத்தால் மூலம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்தும் நீர்ச்சதும் அதிகம் இருந்தால் மூலப்பிரச்சனை படிப்படியாக குறையும்.
உப்பு, புளி, காரம் குறைப்பதே சிறந்த அருமருந்தாகும்.
மேலும் ஆயுர்வேதத்தில் பல்வேறு உள் மருந்துகளும், வெளிப்புற சிகிச்சைகளும் உள்ளது. பக்க விளைவுகள் அற்ற ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்வதில், எந்த ஒரு தாமதமும் இன்றி, உங்கள் உடலின் ஆரோக்கியத்தை காக்க அனைவரிடமும் விழிப்புணர்வு தேவை.

அறிவோம் ஆயுர்வேதம்
Dr.SUBHA. BAMS, DMDPN.
AVN AROGYA AYURVEDA HOSPITAL, MADURAI.
Cell : 7339008816.
இலவச ஆலோசனைகளுக்கு வாட்சப் வழி தொடர்பு கொள்ளலாம்

Address

Avn Ayurveda Hospital
Madurai

Telephone

+917339008816

Website

Alerts

Be the first to know and let us send you an email when நோயும் தீர்வும் - Dr Subha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram