நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

  • Home
  • India
  • Theni
  • நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் இவ்வுலகின் தலைசிறந்த மருத்துவர் நம் உடல்தான் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு மருத்துவம் தேவைப்படாது.
(1)

இன்று மக்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பாக பல குழப்பங்கள் நிலவி வருகிறது. அவற்றை பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த முகநூல் பக்கத்தின் நோக்கம். "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" என்கிற உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதே எனது தலையாய பணி.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

வாரம் மூன்று முறை தேங்காய் பால்...ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது. வாரத்...
17/09/2025

வாரம் மூன்று முறை தேங்காய் பால்...

ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறை தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடல் பலம் கிடைக்கும். தேங்காய் பால் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்து, அடிக்கடி ஏற்படும் சளி தொல்லையை தடுக்கிறது.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்

16/09/2025

ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

தலையில் நரைமுடி மாற!இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் முடி உதிர்வு, நரைமுடி ப...
15/09/2025

தலையில் நரைமுடி மாற!

இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். போதிய ஊட்டச்சத்து இல்லாதது, மன அழுத்தம், உணவுப் பழக்கம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற உடல் சார்ந்த பல்வேறு காரணங்களால் தலைமுடிக்கு சேதம் உண்டாகலாம்.

இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க சந்தைகளில் கிடைக்கும் பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை விலை மதிப்பு மிக்கதாக இருக்கலாம். கெமிக்கல் அடங்கிய பொருள்களைக் கலந்திருக்கும் ஷாம்பூவை பயன்படுத்துவது தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெற்றிலையை அரைத்து தலையில் தொடர்ந்து தடவி வந்தால் தலையில் உள்ள புண்கள் ஆறுவதுடன், நரைமுடியும் மாறும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

விழிப்புணர்வு வினீத்

'நாம் குருநாதரைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, சரியான நேரத்தில், அவரே நம்மைத் தேடி வருவார், வழிநடத்துவார்' என்கிறது ஆன்மீக...
13/09/2025

'நாம் குருநாதரைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, சரியான நேரத்தில், அவரே நம்மைத் தேடி வருவார், வழிநடத்துவார்' என்கிறது ஆன்மீகம். அறிஞர் அண்ணாவின் வாழ்வில் அவ்வாறே நடந்தது. அதுகுறித்து விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்தப் பதிவு.

திருப்பு முனைகள் (தன்னம்பிக்கைத் தொடர்)

10. குரு

இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

1935: திருப்பூர் வாலிபர் மாநாடு.

பெயருக்குத் தகுந்ததுபோல், அந்த அரங்கம் முழுவதும் இளைஞர்கள் நிறைந்திருந்தார்கள். ஒவ்வொரு முகத்திலும் குரலிலும் புதுப்புதுக் கனவுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள்.

இந்தியா இன்னும் சுதந்தரம் அடைந்திருக்காத நேரம் அது. வெள்ளைக்காரனின் அடக்குமுறை, உள்ளூர் ஜாதி, மதம் சார்ந்த கொடுமைகள், பெண்களை ஒதுக்கிவைக்கும் மனப்போக்கு, அந்நியமோகம், ஹிந்தி ஆதிக்கம் என்று எத்தனையோ விஷயங்கள் நம் தமிழ்ச் சமூகத்தைச் சுரண்டிக்கொண்டிருந்தன.

ஒரு தவளையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்தால், அது உடனே துள்ளாது, துடிக்காது. காரணம், தண்ணீரின் வெதுவெது வெப்பநிலை அதற்கு இதமாக இருக்கும், அதை மீறி வெளியேறவேண்டும் என்று தோன்றாமல் அங்கேயே ஜாலியாக நீச்சலடித்துக்கொண்டிருக்கும்.

ஆனால், சிறிது நேரம் கழித்து, அதே தண்ணீர், கொதிக்கத் தொடங்கிவிடும், இப்போது தவளைக்கு உடம்பு சுடும், வலிக்கும், ஆனால் அதால் குதித்து வெளியேறமுடியாது, அப்படியே சாகவேண்டியதுதான்.

அதேபோல்தான், அன்றைய தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும், இப்படிப்பட்ட சமூகப் பிரச்னைகளைப் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை, 'என்ன பிரச்னை? எல்லாம் நன்றாகதானே இருக்கிறது?' என்றுதான் பேசினார்கள், நாளைக்கு அது நம்மையும் பாதிக்கலாம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியவில்லை.

இதுபோன்ற விஷயங்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பெரியவர்களே தயங்கும் சூழ்நிலையில், அந்த அரங்கில் குழுமியிருந்த இளைஞர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாகத் தெரிந்தார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் தைரியமாக எதிர்ப்போம் என்கிற அவர்களுடைய அணுகுமுறை, தீபோல் பரவிக்கொண்டிருந்தது.

அந்தத் திருப்பூர் வாலிபர் மாநாட்டின் சிறப்பு அம்சம், இளைஞர்களின் மேடைப் பேச்சு. அந்த வயதுக்கே உரிய துள்ளல், துடிப்புடன், அவர்களுடைய மொழியில் சமூக முன்னேற்றம், மாற்றம் பற்றிய கருத்துகள் சொல்லப்படும்போது, அது இன்னும் பலரைக் கவர்ந்து இழுத்தது, கை தட்டச் செய்தது.

மாநாட்டின் ஒரு பகுதியாக, அந்த இளைஞர் மேடையேறினார். குள்ளமான உருவம், சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம்.

அவருடைய உருவமோ, உடை அலங்காரமோ விசேஷமாக இல்லை. மக்களை ஈர்க்கும்படியான எந்தக் கவர்ச்சியும் அவரிடம் இல்லை. அவரைச் சாதாரணமாகப் பார்க்கிறவர்கள், 'இவர் என்ன பெரிதாகப் பேசிவிடப்போகிறார்?' என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், அவர் மேடையேறித் தன்னுடைய பேச்சைத் தொடங்கிய மறுகணம், நிலைமை மாறிவிட்டது. அந்த கணீர் குரலை முதன்முறை கேட்டதுமே, இந்த இளைஞரிடம் ஏதோ விசேஷம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

தான் பேசத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பிலிருந்து அவர் இம்மியளவும் பிசகவில்லை. கேட்கச் சுகமான அடுக்குமொழிகளின் துணையோடு, எல்லோருக்கும் புரியும்படியான மொழியில், ஆதாரப்பூர்வமான வாதங்களை நேர்த்தியாகப் பட்டியலிட்டு அவர் பேசப்பேச, அதுவரை முற்போக்குச் சிந்தனை இல்லாதவர்களுக்கும்கூட நரம்பு துடித்தது.

சில நிமிடங்களுக்குள், அங்கிருந்த எல்லோரையும் கட்டிப்போட்டுவிட்டார் அந்த இளைஞர். அவர் பேசி முடித்தபோது, அரங்கில் எழுந்த கைதட்டல் ஒலி நெடுநேரத்துக்கு அடங்கவில்லை.

தன் பேச்சால், ஒரு சின்னப் புயலையே உருவாக்கிவிட்ட அந்த இளைஞருக்கு, அங்கே ஒரு சின்ன ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களில் முக்கியமான ஒருவர், மாநாட்டுக்கு வந்திருந்த பிரபலம், ஈ.வெ. ராமசாமி பெரியார்!

ஈரோட்டைச் சேர்ந்த தந்தை பெரியார், அன்றும், இன்றும் தமிழக அரசியலில் ஓர் உன்னத ஆளுமையாகத் திகழ்கிறவர். அப்போது அவர், திராவிடர்கள், முக்கியமாகத் தமிழர்கள் சுயமரியாதை உணர்வு பெறவேண்டும் என்பதற்காகவே ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தச் சமூகம் திருந்த வேண்டுமென்றால், இன்றைய தலைமுறைமட்டும் மாறினால் போதாது, நாளைய தலைமுறையினரையும் ஈர்க்கவேண்டும், அவர்களிடையே ஒரு சிந்தனை மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார் தந்தை பெரியார்.

அதனால்தான், பக்கத்து நகரமான ஈரோட்டைச் சேர்ந்த அவர், இந்தத் திருப்பூர் வாலிபர் மாநாட்டுக்கு ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார். இங்கிருக்கும் இளைஞர்களின் புதுச் சிந்தனையும் செயல்வேகமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

குறிப்பாக, இப்போது மேடையேறிப் பேசிய அந்த இளைஞர், பெரியாரை மொத்தமாக ஈர்த்துவிட்டார். அவருடைய பேச்சின் அழகு, சிந்தனையின் தெளிவைப் பார்க்கிறபோது, இவரைப்போன்ற இளைஞர்களிடம்தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கவேண்டும் என்று உற்சாகமாக நினைத்தார் பெரியார்.

அன்றைய கூட்டத்தின் முடிவில், பெரியாரும் அந்த இளைஞரும் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. இந்தச் சந்திப்பு, அவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய சந்தோஷம்.

பெரியாருக்கு, தன்னைப்போலவே சிந்திக்கக்கூடிய, வேகமும், விவேகமும் நிறைந்த ஒருவரைச் சந்திக்கும் மகிழ்ச்சி. அவருக்கு எதிரே நின்றிருந்த அந்த இளைஞருக்கோ, தந்தை பெரியாரை நேரில் சந்தித்துப் பேசுகிற பரவசம்!

ஏற்கெனவே, தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் பலவற்றை வாசித்து, அதனால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தார் அந்த இளைஞர். ஆகவே, மிகுந்த பணிவு, மரியாதையுடன், 'ஐயா, என் பெயர் சி. என். அண்ணாத்துரை' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

'என்ன செய்கிறாய் அண்ணாத்துரை?' அன்போடு விசாரித்தார் பெரியார்.

'படிக்கிறேன் ஐயா' என்றார் அண்ணாத்துரை. அப்போது அவர் பி.ஏ. ஹானர்ஸ் பரீட்சை எழுதிவிட்டு, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

'அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?' ஆர்வமாகக் கேட்டார் பெரியார், 'எங்காவது உத்தியோகம் பார்க்கப்போகிறாயா?'

'இல்லை' என்று உடனடியாகவும், உறுதியோடும் சொன்னார் அண்ணாத்துரை, 'எனக்கு வேலை பார்க்கும் விருப்பம் இல்லை. நான் பொதுவாழ்வில் ஈடுபட விரும்புகிறேன்'

அவர் இப்படிச் சொன்னதும், பெரியாரின் உற்சாகம் இருமடங்காகிவிட்டது. இளைஞர்கள் பொதுவாழ்க்கைக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது இந்த அண்ணாத்துரையைத் தனது முதன்மைச் சீடராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டார்.

அன்றுமுதல், அரசியல், சமூகப் பணிகளில்மட்டுமின்றி, தனிப்பட்டமுறையிலும் அண்ணாத்துரை தந்தை பெரியாரின் மகன்போல மாறிவிட்டார். பெரியாருடன் பயணம் செய்வது, அவருடைய பத்திரிகைகளைக் கவனித்துக்கொள்வது, கட்சி விவகாரங்களில் ஈடுபடுவது என ஓர் அழுத்தமான அரசியல் அடித்தளம் அவருக்கு அமைந்தது.

பெரியாரின் வழிநடத்துதலில், அண்ணாத்துரை தனித்துவம் நிறைந்த ஓர் அரசியல் தலைவராக உருவானார். தனது திராவிடர் கழகத்தின் பல முக்கியப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து மகிழ்ந்தார் தந்தை பெரியார்.

பின்னாள்களில், அண்ணாத்துரை, பெரியார் இருவருக்கும் இடையே பல சிறிய, பெரிய கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. எனினும், அவையெல்லாம் அவர்களிடையே இருந்த தந்தை மகன், குரு சீடர் உறவுகளைப் பாதிக்கவில்லை.

தனது வாழ்நாள்முழுவதும், தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா' என்று அன்போடு அழைக்கிறது. 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த அவர், அதனைப் படிப்படியாக வளர்த்து, அரசாங்கம் அமைத்தார். சிறப்பான ஆட்சி நடத்தி மக்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்தார்.

ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும்கூட, தங்களுடைய முழுத் திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு, ஒரு சரியான ஆசிரியர், வழிகாட்டி தேவைப்படுகிறார்.

ஆனால் அதேசமயம், 'நாம் குருநாதரைத் தேடிச் செல்லவேண்டியதில்லை, சரியான நேரத்தில், அவரே நம்மைத் தேடி வருவார், வழிநடத்துவார்' என்கிறது ஆன்மீகம்.

தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர்கள் இருவரையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழகச் சமுதாயத்துக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது!

தொடரும்...

நன்றி - என். சொக்கன் மற்றும் முத்தாரம் இதழ்

திருப்பு முனைகள் - தன்னம்பிக்கை தொடரில் வெளியாகும் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைந்து இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

கற்போம் கற்பிப்போம்!

சரித்திரம் தெரிந்து கொள்வோம்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்



விழிப்புணர்வு வினீத்

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

சில சமயங்களில், நாம் கஷ்டப்பட்டு உழைத்தும்கூட, அதற்குச் சரியான பலன் கிடைப்பதில்லை. நம்முடைய முயற்சிகள் வீணாகப்போகிறதே என...
10/09/2025

சில சமயங்களில், நாம் கஷ்டப்பட்டு உழைத்தும்கூட, அதற்குச் சரியான பலன் கிடைப்பதில்லை. நம்முடைய முயற்சிகள் வீணாகப்போகிறதே என்று வருந்துகிறோம், சோர்வடைகிறோம். அப்போதெல்லாம், பெர்னார்ட் ஷாவை நினைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கும், ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படும் ஒரே இலக்கிய மேதை, பெர்னார்ட் ஷாதான்!

திருப்பு முனைகள் (தன்னம்பிக்கைத் தொடர்)

09. உழைப்பு எனும் வைரம்

இந்தப் பதிவை ஆடியோ வடிவில் Youtube இல் கேட்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

'யார் இந்தப் பையன்?'

வில்லியம் ஆர்ச்சர், அந்த இளைஞனுக்கு அருகே நகர்ந்து உட்கார்ந்தார். அவனையே ஆர்வத்தோடு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அந்த இளைஞன், தன் கையிலிருந்த புத்தகத்திலிருந்து கொஞ்சம்கூட பார்வையை அகற்றவில்லை. 'இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்காகதான் நான் பிறந்தேன்' என்பதுபோல் கண்ணையும் மனத்தையும் அங்கேயே பதித்துவைத்திருந்தான் அவன்.

அதுதான், அதுதான் வில்லியம் ஆர்ச்சருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த வயசுப் பையன்களெல்லாம் வேடிக்கை, வெட்டிப் பேச்சுகளில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கையில், இவன் ஒருவனாவது, புத்தகத்தில் கவனம் செலுத்துகிறானே!

அதைவிட ஆச்சர்யம், இந்த இளைஞன் படிக்கும் புத்தகங்கள். கதை, கவிதை என்று பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கம்யூனிஸம், கலை, இலக்கியம், நாடகம் போன்ற தலைப்புகளில் நல்ல, கனமான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறான், இந்த வயதில், இப்படி ஓர் ஆர்வம் எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை.

வில்லியம் ஆர்ச்சர் அந்த இளைஞனைப் பல நாள்களாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த நூலகத்துக்கு வரும்போதெல்லாம், அவன் அதே மேஜையில் உட்கார்ந்து எதையாவது படித்துக் கொண்டிருப்பான். ஒழுங்கில்லாத தலைமுடி, அழுக்குப் படிந்த ஆடைகள், ஆனால் கண்ணில் மட்டும் சூரிய வெளிச்சம்.

கையில் ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டான் என்றால், அவனுடைய உலகம் தனி. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பான் அவன்.

சிறந்த எழுத்தாளர், கலை விமர்சகரான வில்லியம் ஆர்ச்சர், அந்த இளைஞனுடன் ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனால் எப்படியோ, அவன்மீது அவருக்கு ஓர் அக்கறை பிறந்திருந்தது. எப்படியாவது, அவனைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார் அவர்.

சீக்கிரத்திலேயே, அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நண்பர் வீட்டில், அதே இளைஞனை எதேச்சையாகச் சந்தித்தார் வில்லியம் ஆர்ச்சர். யாரோ, அவனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

'மிஸ்டர் ஆர்ச்சர், இவர் பெயர் பெர்னார்ட் ஷா'

'ஹலோ' என்றார் வில்லியம் ஆர்ச்சர், 'நான் உங்களை நூலகத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்'

அந்த முதல் சந்திப்பில், பெர்னார்ட் ஷா அதிகம் பேசவில்லை. ஆனால், அதன்பிறகு அவர்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தார்கள், பல்வேறு விஷயங்களைப்பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டார்கள்., தகவல்கள், அனுபவங்கள், உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அப்போதுதான், வில்லியம் ஆர்ச்சருக்கு ஒரு விஷயம் தெரியவந்தது, பெர்னார்ட் ஷா நல்ல வாசகர்மட்டுமில்லை, எழுத்தாளரும்கூட! ஏற்கெனவே சில நாவல்கள் எழுதியிருக்கிறார். ஆனால் பாவம், ஒன்றுகூடப் பிரசுரம் ஆகவில்லை.

வில்லியம் ஆர்ச்சருக்கு, நாவல்களில் ஆர்வம் இல்லை. ஆனால், நாடகங்கள் என்றால் கொள்ளை பிரியம்.

புகழ் பெற்ற டானிஷ் மொழி எழுத்தாளர் இப்ஸனின் சில மேடை நாடகங்களை, வில்லியம் ஆர்ச்சர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். இந்த விஷயத்தை அவர் சொன்னபோது, பெர்னார்ட் ஷா உற்சாகமாகிவிட்டார், இப்ஸனின் நாடகங்கள்பற்றிப் பல விஷயங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் ஷா.

திடீரென்று ஒருநாள், பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு சந்தேகம், 'மிஸ்டர். ஆர்ச்சர், நீங்கள் ஏன் சொந்தமாக நாடகங்கள் எழுதவில்லை?'

'ம்ஹூம், அது எனக்குச் சரிப்பட்டு வராது' என்றார் வில்லியம் ஆர்ச்சர், 'மேடை நாடகத்துக்குக் கதை எழுதுவது என்றால் பிரமாதமாக ஜமாய்த்துவிடுவேன், ஆனால், எனக்கு வசனம் எழுத வராது'

வில்லியம் ஆர்ச்சர் இப்படிச் சொன்னதும், பெர்னார்ட் ஷா முகத்தில் ஏதோ மாற்றம். சட்டென்று தீவிர யோசனையில் ஆழ்ந்தார் அவர்.

காரணம், பெர்னார்ட் ஷாவுக்கு ரொம்ப நாளாகவே, மேடை நாடகம் எழுதவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால், அதற்குச் சரியான கதை அமையவில்லை.
'பேசாமல், நாம் இருவரும் இணைந்து ஒரு நாடகம் எழுதினால் என்ன?'

அதாவது, நாடகத்துக்கான கதை, கட்டமைப்பு விவகாரங்களையெல்லாம் வில்லியம் ஆர்ச்சர் பார்த்துக்கொள்வார், அதற்கு வசனம் எழுதித் தரவேண்டியது பெர்னார்ட் ஷாவின் பொறுப்பு.

உடனடியாக, அவர்கள் இருவரும் உற்சாகத்துடன் வேலையில் இறங்கினார்கள். ஒரு சுவாரஸ்யமான கதையைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு காட்சியாக பெர்னார்ட் ஷாவுக்கு விவரித்தார் வில்லியம் ஆர்ச்சர்.

அவர் பேசப் பேச மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார் பெர்னார்ட் ஷா. வில்லியம் ஆர்ச்சர் காட்சிகளை விவரிக்கையில், அவருக்குள் வசனங்கள் தானாக ஓட ஆரம்பித்திருந்தன.

மறுநாள், நூலகத்தில் பெர்னார்ட் ஷா கையில் புத்தகம் எதுவும் இல்லை. அதற்குபதிலாக, நாடக வசனங்களை விறுவிறுவென்று எழுதித் தள்ள ஆரம்பித்திருந்தார்.

ஆறு வாரங்கள் கழித்து, வில்லியம் ஆர்ச்சர்முன் வந்து நின்றார் பெர்னார்ட் ஷா, 'நாடகத்தில் பாதி எழுதிவிட்டேன். ஆனால், ஒரு பிரச்னை'
'என்னாச்சு?'

'நீங்கள் சொன்ன கதை அதற்குள் தீர்ந்துபோய்விட்டது' என்று பரிதாபமாகச் சொன்னார் பெர்னார்ட் ஷா, 'தயவுசெய்து, இன்னும் கொஞ்சம் கதையை உருவாக்கிச் சொல்லுங்களேன்'

வில்லியம் ஆர்ச்சருக்குக் கோபம் வந்துவிட்டது. முடிந்துபோன கதையை இன்னும் நீட்டுவதா? சான்ஸே இல்லை என்று மறுத்துவிட்டார்.

அவ்வளவுதான். வில்லியம் ஆர்ச்சர் பெர்னார்ட் ஷா கூட்டணி அத்துடன் முறிந்தது. அவர்கள் இணைந்து எழுதுவதாக முடிவு செய்திருந்த நாடகம், அரைகுறையாகக் கிடப்பில் போடப்பட்டது.

அதன்பிறகு, பெர்னார்ட் ஷாவுக்கு அரசியல், சமூக சேவை ஆர்வம் வந்தது, துண்டுப் பிரசுரங்கள், பிரசார நூல்கள் எழுதினார், மேடை நிகழ்ச்சிகளில் பேசிப் பிரபலமடைந்தார். ஆனால் அந்த நாடகம் மட்டும், அப்படியே புழுதி படிந்து கிடந்தது.

ஏழு வருடங்கள் கழித்து, லண்டனில் ஒரு புதிய நாடக நிறுவனம் தொடங்கப்பட்டது. அதற்கு ஒரு நாடகம் எழுதித் தரமுடியுமா என்று பெர்னார்ட் ஷாவைக் கேட்டார்கள்.

அப்போதுதான், பெர்னார்ட் ஷாவுக்குத் தன்னுடைய பழைய நாடகத்தின் நினைவு வந்தது. எங்கோ கிடந்த அந்தப் பிரதியை தூசு தட்டி எடுத்து, வாசித்துப் பார்த்தார்.

பரவாயில்லை, எழுதியவரை நன்றாகதான் இருக்கிறது. கொஞ்சம் அங்கே இங்கே தட்டிக் கொட்டிச் சரி செய்தால், நல்ல நாடகமாக உருவாகிவிடும் என்று யோசித்தார் பெர்னார்ட் ஷா.

உடனடியாக, பேனாவும் கையுமாக உட்கார்ந்துவிட்டார் பெர்னார்ட் ஷா. இத்தனை வருட இடைவெளியே தெரியாமல் மளமளவென்று அந்த நாடகத்தைத் தொடர்ந்து எழுதி முடித்துவிட்டார்.

1885ம் ஆண்டில் பெர்னார்ட் ஷா எழுதத் தொடங்கிய அந்த நாடகத்தின் பெயர், 'Widowers Houses'. பின்னர் அது எழுதி முடிக்கப்பட்டு அரங்கேறியபோது, வருடம் 1892.

முழுசாக ஏழு வருடங்கள், பெர்னார்ட் ஷாவின் முதல் நாடகம் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது. ஆனாலும், அவர் தன்னுடைய திறமையை ஒட்டடை படிய விடவில்லை. பின்னர் சரியான வாய்ப்பு வந்தபோது, அந்தப் பழைய நாடகத்தை எழுதி முடித்துப் பயன்படுத்திக்கொண்டார்.

அந்தத் திருப்பு முனைதான், பெர்னாட் ஷாவின் நாடக வாழ்க்கையைத் தொடங்கிவைத்தது. அதன்பிறகு, அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, உலகின் தலைசிறந்த நாடக எழுத்தாளர்களில் ஒருவராகப் புகழ் பெற்று, அதற்காக நோபல் இலக்கியப் பரிசையும் வென்றார் பெர்னார்ட் ஷா. இன்றைக்கும், ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படும் ஒரே இலக்கிய மேதை, அவர்தான்!

சில சமயங்களில், நாம் கஷ்டப்பட்டு உழைத்தும்கூட, அதற்குச் சரியான பலன் கிடைப்பதில்லை. நம்முடைய முயற்சிகள் வீணாகப்போகிறதே என்று வருந்துகிறோம், சோர்வடைகிறோம்.

அப்போதெல்லாம், பெர்னார்ட் ஷாவை நினைத்துக்கொள்ளுங்கள். வெளிச்சம் புகாத கறுப்புப் பெட்டிக்குள் புதைத்துவைத்தாலும்கூட, வைரம் தனது ஜொலிஜொலிப்பை இழப்பதில்லை, மீண்டும் அதைத் திறந்துபார்த்தால், அதே பழைய ஒளியுடன் மிளிர்ந்துநிற்கிறது, நம்முடைய உழைப்பும், அப்படிதான்!

தொடரும்...

திருப்பு முனைகள் - தன்னம்பிக்கை தொடரில் வெளியாகும் அனைத்து பாகங்களையும் ஒருங்கிணைந்து இணையத்தில் பார்க்க விரும்பினால் Comment பகுதிக்குச் செல்லுங்கள்.

நன்றி - என். சொக்கன் மற்றும் முத்தாரம் இதழ்

கற்போம் கற்பிப்போம்!

சரித்திரம் தெரிந்து கொள்வோம்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்

09/09/2025

நலம் தரும் நாடி சுத்தி : மூன்றாம் சுற்று - உடல் கழிவுகள் நீக்கும்

ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்!

விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி

மூன்றாம் சுற்று - உடல் கழிவுகள் நீக்கும்

நோய் எதிர்ப்பாற்றல்

இந்த மூன்றாவது சுற்று பயிற்சியில் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். அதனால் சுறு சுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.

இதயம் பாதுகாக்கப்படும்

ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்குகிறன்றது. நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும்.

கழிவுகள்

உடலில் கழிவுகள் மலமாக, சிறுநீராக, வியர்வையாக, கார்பன் டை ஆக்சைடாக வெளியேறும். இதில் எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் நோயின்றி வாழலாம்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம் நன்றாக இயங்கும். இரத்தம் சுத்திகரிப்பு அடையும். மூளை செல்களுக்கு நன்கு இரத்த ஓட்டம் பாயும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறலாம்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள் வளரும்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்



#நாடிசுத்தி

சுவையான மாதுளம் பழத்தை கண்டுபிடிக்கும் முறை! சுவையானதுபூவின் மேல்பகுதி (காம்பு) சற்று விரிந்து, லேசாக காய்ந்திருந்தால், ...
08/09/2025

சுவையான மாதுளம் பழத்தை கண்டுபிடிக்கும் முறை!

சுவையானது

பூவின் மேல்பகுதி (காம்பு) சற்று விரிந்து, லேசாக காய்ந்திருந்தால், அது பழம் பழுத்ததற்கான அறிகுறியாகும்.

சுவையற்றது

பூவின் மேல்பகுதி (காம்பு) இறுக்கமாகவும், பச்சையாகவும் இருந்தால், அது காய் அல்லது பழம் இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம்.

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்

சுவையான டிராகன் பழத்தை கண்டுபிடிக்கும் முறை! சுவையானதுஇலைகளுக்கு இடையே அதிக இடைவெளி, தொட்டுப் பார்த்தால் லேசாக மென்மையாக...
07/09/2025

சுவையான டிராகன் பழத்தை கண்டுபிடிக்கும் முறை!

சுவையானது

இலைகளுக்கு இடையே அதிக இடைவெளி, தொட்டுப் பார்த்தால் லேசாக மென்மையாக இருக்கும்.

சுவையற்றது

இலைகள் நெருக்கமாகவும், மெல்லியதாகவும், அழுத்தினால் மிகவும் கடினமாகவோ அல்லது கொழ கொழப்பாகவோ இருக்கும்.

கற்போம் கற்பிப்போம்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்



நாட்டு மருந்து

சுவையான கிர்ணி அல்லது முலாம் பழத்தை கண்டுபிடிக்கும் முறை! சுவையானதுபழத்தின் தொப்புள் பகுதி பழுப்பு நிறமாக இருப்பது, அது ...
07/09/2025

சுவையான கிர்ணி அல்லது முலாம் பழத்தை கண்டுபிடிக்கும் முறை!

சுவையானது

பழத்தின் தொப்புள் பகுதி பழுப்பு நிறமாக இருப்பது, அது இயற்கையாக பழுத்ததற்கான அடையாளம். மேலும், பழத்தின் பூ இருந்த கீழ் முனையை அழுத்தினால் லேசாக மென்மையாக இருக்கும்.

சுவையற்றது

தொப்புள் பச்சையாக இருப்பது, அது காய் என்பதற்கான அடையாளம். மேலும், பழம் முழுவதும் மிகவும் கடினமாக இருக்கும்.

கற்போம் கற்பிப்போம்!

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

விழிப்புணர்வு வினீத்

07/09/2025

நலம் தரும் நாடி சுத்தி : இரண்டாம் சுற்று - வலது இடது மூளை நன்கு இயங்கச் செய்யும்

ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்!

விளக்கம்: யோகக்கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி

சூரிய கலை - உடல் உஷ்ணம் சமப்படும்

மனிதனின் ஆரோக்கியம், நமது உடல் உஷ்ணத்தை மையமாக வைத்து உள்ளது. உடல் உஷ்ணம் சமப்படுத்த இந்த சூரிய கலை நாடி சுத்தி (வலது நாசி) பயன்படுகின்றது. அதிகமான உஷ்ணம் சமப்படும்.

சந்திர கலை - உடல் குளிர்ச்சி

உடலில் அதிக குளிர்ச்சியினால் ஏற்படும் சைனஸ், மூக்கடைப்பு நீங்கும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா நீங்கும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடிக்காது.

வலது இடது மூளை

வலது மூளை. இடது மூளை நன்கு இயங்கும். நேர்மறை எண்ணங்கள் வளரும்.

மாணவர்களுக்கு

இந்த நாடி சுத்தி மாணவர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். ஞாபக திறன் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பாற்றல்

நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.



விழிப்புணர்வு வினீத்

நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

#நாடிசுத்தி

கல் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்!
06/09/2025

கல் தோன்றி மன் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்!

Address

Theni

Telephone

+919840980224

Website

https://reghahealthcare.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram