Hi-tech Hijama Centre

Hi-tech Hijama Centre Hijama was a common practice of the Prophet Muhammad صل الله عليه و سلم and his compan

16/08/2022

#தாளி_சாதி_சூரணம்

நுரையீரல் தொடர்பான , கப நோய்களுக்கு சிறந்த மருந்து

26 மூல பொருட்களை கொண்டது .

80 வகையான வலிகளை போக்கும் , 96 வகையான கப நோய்கள் தீரும் ..

கொரோனா இரண்டாம் அலையில் அரசு சித்த மருத்துவ குழுமத்தால் பரிந்துரை செய்யப்பட்டது

பல நோயாளிகளுக்கு மிக சிறந்த நிவாரணத்தை அளித்தது ..

#மூலப்_பொருட்களுக்கு

1. தாளிச பத்திரி
2. சுக்கு
3. மிளகு
4. திப்பிலி
5. அதிமதுரம்
6. ஏலக்காய்
7. இலவங்கம்
8. பெருங்காயம்
9. நெல்லிக்காய்
10. கோட்டம்
11. கருஞ்சீரகம்
12. சதகுப்பை
13 . ஓமம்
14. சீரகம்
15. கிராம்பு
16. ஜாதிபத்திரி
17. கர்கடசிங்கி
18. ஜாதிக்காய்
19. கடுக்காய்
20. தான்றிக்காய்
21. ஜடா மஞ்சள்
22. சிறு நாகப்பூ
23. சம்பக மொக்கு
24. வாய்விடங்கம்
25. இலவங்க பத்திரி
26. கொத்தமல்லி விதை
27. சர்க்கரை

#தீரும்_நோய்கள்

1. நாட்பட்ட சளி

2. தொடர் இருமல்

3. இளைப்பு

4. மூச்சு திணறல்

5. நுரையீரல் சளி

6. சைனஸ்

7. வாயு கோளாறு

8. உடல் வலி

9. மூக்கில் நீர் வடிதல்

10. சளியினால் உடல் அசதி

11. இருமலினால் சிறுநீர் சொட்டுதல்

12. நுரையீரல் , கல்லீரல் இரண்டில் உள்ள சளியை அகற்றும்.

13. சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை போக்கும்

14. கடும் சுரம் குறையும் .

15. முறை சுரம் தீரும்

16. பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிட்டால் குழந்தைக்கு கப தொல்லை நீங்கும் ..

17. உடல் எடையை குறைக்கும்.

18. நெஞ்செரிச்சல் நீங்கும் .

19. தொண்டை கட்டு, தொண்டை வலி நீங்கும் .

20. வயிறு உப்புசம் நீங்கும்

21. நாக்கு வறட்சி நீங்கும் .

22. சொரி , சிரங்கு குணமாகும்..

இன்னும் பல ..

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் *தாளிசாதி சூரணம்* மிக முக்கிய பங்கினை செய்கிறது

#உபயோகிக்கும்_முறை : 5 கிராம் அளவு காலை , மாலை இரு வேளையும் தேன் அல்லது வெந்நீரில் , அல்லது வாயில் இட்டு சப்பி சாப்பிட்டு வெந்நீர் சாப்பிடவும் ..

#விலை_விபரம் 100 கிராம் 120 ரூபாய்

#தொடர்புக்கு : 7010614323

#நோயற்ற_வாழ்விற்கு

 #பிரசவ_லேகியம் பெண்கள் பிரசவித்த பிறகு சாப்பிடும் லேகியம் .. 25 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது .. பா...
16/05/2022

#பிரசவ_லேகியம்

பெண்கள் பிரசவித்த பிறகு சாப்பிடும் லேகியம் ..

25 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது ..

பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் படி செய்யப்பட்டது ..

நீண்ட காலமாக பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியது .. ..

#மூலப்_பொருட்கள்

1. பெருங்காயம்
2. கிராம்பு
3. வால் மிளகு
4. தண்ணீர் விட்டான் கிழங்கு
5. சித்தரத்தை
6. கோஷ்ட்டம்
7. பூசணி விதை
8. அதிமதுரம்
9. இலவங்கம்
10. தாளிச பத்திரி
11. ஏலம்
12. வெற்றிலை
13. பரங்கி
14. ஜலமஞ்சரி
15. வாய் விடங்கம்
16. கருஞ்சீரகம்
17. சதக்குப்பை
18. சுக்கு
19. மிளகு
20. திப்பிலி
21. கலா பழம்
22. பரங்கி சக்கை
23. ஓமம்
24. சாதிக்காய்
25. நாட்டு சர்க்கரை
26. பசு நெய்
27. தேன்

#பயன்கள் :

1. பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் உடல் பலஹீனத்தை போக்கும்

2. #தாய்ப்_பால்_மிகுதியாக_சுரக்கும்

3. தொடர் இரத்த போக்கினால் உண்டாகும் உடல் சோர்வை போக்கும்.

4. கர்ப்பிணியாக இருக்கும் போது ஏற்பட்ட மூல நோய் ( சில பெண்களுக்கு மட்டும் ) கட்டுப்படும் ..

5. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு , இளமையை கூட்டும் ..

6. #ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்

7. மலசிக்கல் தீரும் ..

8. சளி இருமல் குணமாகும் ..

9. கை கால் குடைச்சல் தீரும்

10. பாலூட்டுவதின் மூலம் குழந்தை ஆரோக்யம் பெரும் .. ..

#சாப்பிடும்_முறை

காலை , இரவு அரை ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்..

#விலை_விபரம் : 125 கிராம் 120 ரூபாய் ..

#தொடர்புக்கு : 7010614323

#வயல்_மூலிகை_மருத்துவம்

24/04/2022
10/04/2022

#அடுக்கு_தேன்_அடை

இயற்கையான முறையில் எடுக்கப்பட்ட அடுக்கு தேனின் அடை

மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது ..

ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே கிடைக்க கூடியது. ..

குறைவான அளவில் கிடைக்கக்கூடியது , நிறைவான அளவில் பயன் கிடைக்கும் .. ..

#பயன்கள் :

1. பெண்களுக்கு மாதவிடாய் சீராகும் ..

2. அல்சர் நோயால் ஏற்படும் உபாதைகள் குணமாகும்

3. வெந்நீருடன் தேன் அடையிலிருந்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டால் உடல் எடை வெகுவாக குறையும் .

4. தேனுடன் எலும்பிசை சாறு விட்டு சாப்பிட்டால் குமட்டல் , வாந்தி , தலை சுற்றல் குணமாகும்

5. மாதுளை சாறுடன் , இந்த தேனை கலந்து சாப்பிட இரத்த அணுக்கள் குறைபாடு நீங்கும் .. ( குறிப்பாக பெண்களுக்கு )

6. தேன் அடையுடன், சுண்ணாம்பு கலந்து பழுக்காத கட்டிகள் மேல் தடவி வந்தால், அந்த புண் பழுத்து உடையும் .. .

7. மீன் எண்ணெயுடன் கலந்து சாப்பிட ஆறாத புண்கள் ஆரும்

8. பாலுடன் கலந்து சாப்பிட பித்தம் குறையும்

9. கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீர் இல் போட்டு காய்ச்சி வடிகட்டி , இந்த தேனை கலந்து சாப்பிட #வாத நோய்கள் குணமாகும்..

10. அஸ்வகந்தா கிழங்கு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட ஆண்மை பலத்தை அதிகரிக்கும் .....

#விலை_விபரம்: அரை கிலோ அடுக்கு தேன் அடையுடன் 750 ரூபாய்

#குறிப்பு : குறைவான அளவில் உள்ளதால் , உங்கள் பதிவை உறுதி செய்யுங்கள் .. பதிவு செய்த இரண்டாவது நாளில் தேன் அடை அனுப்பப்படும் .. ..

#தொடர்புக்கு : 7010614323

#வயல்_இயற்க்கை_அங்காடி
#கோவை

06/04/2022

#நன்னாரி_சர்பத்

( நன்னாரி மனப்பாகு )

நன்னாரி இல் இரண்டு வகை உண்டு

1. சிறு நன்னாரி
2. பெரு நன்னாரி

பெறு நன்னாரியை மாகாலிக் கிழங்கு என்று கூறுவார்கள் ..
இதை ஊர்காய் மற்றும் சமயலுக்காக பயன்படுத்துவார்கள் .. ..

நாம் பயன்படுத்தும் நன்னாரி சர்பத் சிறு நன்னாரி இல் தான் காய்ச்சி வேண்டும் .. ..

அப்படி காய்ச்சினால் தான் நன்னாரி யின் முழு பலன்களையும் அடைய முடியும் .. ..

இதை சித்த மருத்துவத்தில் #நன்னாரி_மணப்பாகு என்று அழைக்கிறார்கள் .. ..

நன்னாரி யிலிருந்து #தீநீர் எடுத்து அதன் பின்னர் , அந்த தீநீரை கொண்டு காய்சுவது தான் சரியான முறை .. ..

அதை நான் பருகும் பொது உடல் உஷ்ணம் குறையும் , கண் எரிச்சல் குறையும் , ஆசன வாயு எரிச்சல் குணமாகும் , சிறுநீரக பாதையில் ஏற்படும் புண் , எரிச்சல் போன்ற வற்றயும் , உடல் சூட்டால் ஏற்படும் உபாதைகளும் குணமாகும் .. ..

நம்மிடத்தில் பாரம்பரியமாக , #தீநீர் முறையில் காய்ச்சிய #நன்னாரி_சர்பத் கிடைக்கும்...

#விலை_விபரம் : 750 ml 115 ரூபாய் மட்டும் ..

#தொடர்புக்கு : 7010614323

#நோயற்ற_வாழ்விற்கு

05/04/2022

#கொய்யா_இலையின்_பயன்கள் !!

கொய்யா பழத்தின் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் இலை, பட்டை, கனி என அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம்...... கொய்யா பழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் பல மருத்துவ பயன்களை தன்னுள் இரகசியமாக கொண்டுள்ளது.

அப்படி என்ன என்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

கொய்யா இலையின் இரகசியம் :

கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, சி, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது.

30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், வயிற்றுபோக்கிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா இலையின் சாறு எடுத்து, அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.

எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.

மேலும் இதில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சு தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை சரி செய்ய கொய்யா இலையில் டீ செய்து சாப்பிடலாம். சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்.

கொய்யா இலையில் டீ போட்டு அருந்தும் பொழுது, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை un அழித்து, செரிமானம் நன்கு நடைபெறும்.

கொய்யா இலையில் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயமானது இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

கொய்யாவில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்டுகள் கட்டிகளின் வளர்ச்சிகளை தடுக்கின்றன. உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

இவ்வளவு நன்மைகள் உடைய கொய்யாவை வீட்டு தோட்டங்களில் எளிதாக வளர்க்கலாம்.

இதன் மருத்துவப்பயன்கள் அதிகம் என்பதால் நம் வீட்டு தோட்டத்தில் இதை வளர்ப்பது கூடவே மருத்துவரை வைத்திருப்பதற்கு சமம்.

#நோயற்ற_வாழ்விற்கு

17/03/2022

#தினமும்_மாதுளம்_பழம்_சாப்பிட_வேண்டும்.. ஏன் தெரியுமா?
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் !

👉 மாதுளம் பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழவகைகளில் ஒன்று. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாகிறது.

👉 உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளையில் உள்ள சத்துக்கள் என்னென்ன... அதன் பலன்கள் என்ன ??

#மாதுளம்_பழத்தில்_உள்ள_நன்மைகள் :

👉 மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடலுக்கு ஆரோக்கியமும், சக்தியும் உண்டாகும்.

👉 மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தசோகையை தடுக்க உதவுகிறது.

👉 மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உணவு செரிமானத்திற்கு நல்லது.

👉 உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

👉 மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

👉 மாதுளையை தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

👉 மாதுளை, வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்சனைகளை சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயை குறைப்பதற்கும் துணைபுரியும்.

👉 தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச்சாற்றை அருந்தினால், இரத்த அழுத்தம் குறையும்.

👉 ஒரு டம்ளர் அளவு மாதுளை பழச்சாற்றில், தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

👉 மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரு வேளை ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

👉 மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தினால் இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தமாகும், இரத்த விருத்தி உண்டாகும்.

👉 திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

👉 மாதுளம்பழம் அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை பயக்கும்..

#நோயற்ற_வாழ்விற்கு

15/03/2022
03/03/2022
27/02/2022

#உடைந்த_எழும்பைக்_கூட_ஒட்ட_வைக்கும்_மூலிகை:. #அதிர்ந்து_போன_மருத்துவர்கள்.
=================================


இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம் முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.

அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் #அருகாம்பச்சை என்றும், #சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் #அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.

இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.

இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு.முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.

இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.

இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.

பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.

ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்

#நோயற்ற_வாழ்விற்கு

Address

12/28, SMJ Plaza, 2nd Lane Beach
Chennai
600001

Opening Hours

Monday 6:30am - 5pm
Tuesday 6:30am - 5pm
Thursday 6:30am - 5pm
Sunday 6:30am - 5pm

Telephone

919840123304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hi-tech Hijama Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram