Sanjeevi Medicals

Sanjeevi Medicals Discount sales, Health awareness and Home delivery and so many services please support us thank you.��

02/10/2016

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி

சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான். ஆனா வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது. இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.

நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும். இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதனை பார்ப்ப்போம்...

கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை:

ஒரு கப் அளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.

இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.

அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது. மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

30/09/2016

இரத்தத்தை சுத்தமாக்கக் கூடிய சில இயற்கை வைத்திய முறைகள்..

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

1. பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

2. செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

3. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

4. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

5. நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.

6. ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும். 1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

7. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

8. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

9. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

10. திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும். திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.

29/09/2016

அல்சரை விரைவாக குணமாக்கும் பீட்ரூட் சாறு.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து சாறு எடுத்து குடித்து வந்தால் சீக்கிரமே நல்ல கலர் மாறுவதை உணரலாம். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். கோதுமை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

* தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும்.

* புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

* பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

* புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். பீட்ரூட் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும்.

* பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

28/09/2016

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல்
1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.
2. புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.

3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.

4. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும் நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.

5. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.

6. செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.

7. எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. காலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது. 6. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் உள்ளன.

8. உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும். கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

12/08/2016

ஜிஎஸ்டி என்றால்..?

நம் நாட்டில் ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர பல்வேறு வரிகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி போன்ற பல்வேறு வரிகள் உள்ளன. இதைத் தவிர்த்து, கல்வித் தீர்வை (Cess), சர்சார்ஜ் என்பது இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax). இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.



ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது எந்த வகையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது குறித்து வரி ஆலோசகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஜிஎஸ்டி ஏன் தேவை?

‘‘மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு வரிகளைச் செலுத்தும் தொகையின் அளவானது உற்பத்தி செலவைவிட அதிகமாக உள்ளது. இப்படி அதிகமாகச் செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். இதுமட்டும் இல்லாமல் வரிக்கு வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.



உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு ஆகும். இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களை பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு கிரெடிட் பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு ஜிஎஸ்டிதான். அனைவருக்கும் ஒரேவிதமான வரி விகிதம்தான் இருக்கும். ஜிஎஸ்டியில் 17 - 18% வரை வரி விதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி எந்த வகையில் உதவும்?

தற்போது பலவிதமான வரிகள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அரசு துறைகள் செயல்பட வேண்டி உள்ளது. இந்த துறைகளுக்கிடையே தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனங் களும் பல்வேறு வரி விதிப்பு இருப்பதால், பல சிக்கல்களைச் சந்திக்கிறது.

ஜிஎஸ்டி அமல் படுத்தும்போது கறுப்புப் பணம் குறையும். முறையான வரி செலுத் தாமல் சிறிய, நடுத்தர அளவில் தொழில் செய் பவர்கள் முறையாக வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். அதுவும் தவிர, முறையாக வரி செலுத்தி தொழில் செய்யும்போது அவர்களின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதனால் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வரித் தொகை அதிகரிக்கும்போது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை வேகமாக செய்ய முடியும். மதிப்பு கூட்டு வரி (VAT) வந்த பிறகு நிறைய நிறுவனங்கள் பல மாநிலங்களில் கிடங்குகளை திறக்கும் சூழ்நிலை உருவானது. ஜிஎஸ்டி வரும்போது இந்தக் கிடங்குகளின் தேவை இருக்காது. தொழிலுக்குத் தேவையான கிடங்குகள் மட்டுமே இருக்கும். இதனாலும் நிறுவனங்களின் செலவு வெகுவாகக் குறையும்.

யாருக்குப் பயன்?

ஒற்றை வரி விதிப்பு முறையின் காரணமாக உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால், அதே நேரத்தில் சேவைகளாக பெறும் வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதாவது, செல்போன், பொழுதுபோக்கு, இன்டர்நெட், இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹோட்டல், ஆலோசனை, போக்குவரத்து, ஏஎம்சி, கட்டுமானம், அழகு நிலையம், தீம் பார்க், கல்விக் கட்டணம் போன்ற சேவைகளுக்கான வரி விதிப்பு அதிகரிக்கும். தற்போது இதற்கு 14.5% செலுத்துகிறோம். ஜிஎஸ்டியில் 17 - 18% வரி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தனிநபரின் செலவு அதிகரிக்கும்.

பென்ஷன் வாங்குபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு அதிகமான சேவைகள் தேவைப்படும். அதாவது, ஹோட்டல் சாப்பாடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், செல்போன் பில், போக்குவரத்துக்கு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இது அனைத்துமே விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வருமானம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் முதியோர்களின் செலவும் அதிகரிக்கும்.

உடனடியாக விலை குறையாது!

சிஜிஎஸ்டி (Central GST), எஸ்ஜிஎஸ்டி (State GST), ஐஜிஎஸ்டி (Integrated GST) என மூன்று வகைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிக்கப்படும். இந்த வரி விதிப்பு முறையினால் உடனடியாக பொருள்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவு. ஜிஎஸ்டி அமல்படுத்தியபிறகு ஒரு வருடத்துக்குப் பணவீக்க விகிதம் அதிகரிக்கவே செய்யும். அதன்பிறகு கொஞ்சமாகப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்க விகிதமும் குறைந்துவிடும்.



மாநில அரசுகளின் வருமானம்?

அரசின் முக்கிய வருமானம் வரி விதிப்பின் மூலமாகத்தான் கிடைக்கிறது. மாநில அரசு வரியை நம்பிதான் இருக்கிறது. தற்போது சேவை வரி 15%, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது இந்த வரி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஜிஎஸ்டியில் 18% என வரி விதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் மத்திய அரசு 10%, மாநில அரசு 8% என வருமானத்தை பிரித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது மாநில அரசுக்கு 14.5% - 15% வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமான இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமான இழப்பை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கும். அதே சமயத்தில், முதன் முதலாக மாநிலங்களும் சேவைக்கான ஜிஎஸ்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டியின் பாதிப்பு அல்லது பயன் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும். பொதுவாக, உற்பத்தி அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைவாக இருக்கும். அதிக நுகர்வு இருக்கும் மாநிலங்களில் ஜிஎஸ்டி மூலமாக அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஜிஎஸ்டியில் மதுபானங்கள், புகையிலை ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது. ஆனால், இந்தப் பொருட்களுக்கு வேறு வரி விதிப்பு அதிகமாக இருக்கும். பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக் குள் இல்லை. இவற்றுக்கும் வேறு வகையான வரி விதிப்பு இருக்கும். தற்போதைய நிலையில் எந்தப் பொருட்களுக்கு எல்லாம் வரி இல்லையோ, அவற்றில் சிலவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரி விதிப்பும் இருக்காது. பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பு மாநில அரசுகளிடம்தான் இருக்கும்.’’ என்றார்.



ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். இதனால் நம்மால் பலவிதமான பொருட்களை வாங்கும் நிலை உருவாகும். நிறுவனங்களின் லாபம் கூடினால் அது முதலீடாக மாறும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக் கூடிய நிலை உருவாகும்.

08/08/2016

Friends please like my shop page 'Sanjeevi Medicals' Thank you.....

Address

47-E, DCK COMPLEX, NETHAJI BYE PASS Road. OPP TO ICICI BANK
Dharmapuri
636701

Opening Hours

Monday 9:30am - 10pm
Tuesday 9:30am - 10pm
Wednesday 9:30am - 10pm
Thursday 9:30am - 10pm
Friday 9:30am - 10pm
Saturday 9:30am - 10pm
Sunday 9:30am - 2pm
6pm - 10pm

Telephone

+914342266696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjeevi Medicals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sanjeevi Medicals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram