16/10/2017
,
காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க...
தற்போது தமிழகத்தில் ஏராளமானோர் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை எலும்பு முறிவுக் காய்ச்சல் என்றும் அழைப்பார்கள். கொசுக்கள் மூலம் பரவும் இக்காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் உயிரை விட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரை விடுவதற்கு காரணம், அதற்கு எவ்வித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாதது தான்.
மேலும் பலருக்கு டெங்குவின் அறிகுறிகள் சரியாக தெரியாமல் இருப்பதும் ஓர் காரணம். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் டெங்குவின் கொடிய தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
பொதுவாக காய்ச்சல் வந்தால், பலரும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ஏதோ ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்வோம். டெங்கு காய்ச்சல் கூட ஆரம்பத்தில் காய்ச்சலில் தான் ஆரம்பிக்கும்.
அதன் தீவிரம் அதிகரிக்கும் போது, பாதிப்பும் அதிகம் இருக்கும். சரி, இப்போது டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும், அதனை தடுப்பது எப்படி, அதற்கான சிகிச்சை என்ன என்பதையும் பற்றிக் காண்போம்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
* 2-7 நாட்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் (104 F -105 F)
* கடுமையான தலை வலி
* கண்களுக்கு பின்புற வலிடெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
* கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
* மிகுதியான சோர்வு
* குமட்டல்வாந்தி
* சரும அரிப்பு (காய்ச்சல் வந்த 2-5 நாட்களுக்குள் ஏற்படும்)
* மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு
டெங்கு முற்றிய நிலையில்... ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் இருந்தால், காய்ச்சல் முடிந்த பின்னர், இந்த அறிகுறிகள் தென்படும். அதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இது மிகவும் ஆபத்தானது. இரத்தத்தில் உள்ள தண்ணீர் கசியும் போது தட்டையணுக்களின் அளவு குறையும்.
தட்டையணுக்கள் குறைந்து, உடல் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், செயலிழந்துவிடும். மேலும் தாழ் இரத்த அழுத்தம், சுவாச சிக்கல், வயிறு புடைத்தல், இரையக குடலியப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுதல் போன்றவை ஏற்படும். இன்னும் தீவிரமான நிலையில், கடுமையான வயிற்று வலி, சுயநினைவு இழத்தல், வலிப்பு, சொறி, தாழ் இதயத்துடிப்பு போன்றவை உண்டாகும்.
யாரைத் தாக்கும் டெங்கு காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் தாக்கும். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் டெங்கு காய்ச்சல் விரைவில் தாக்கும். எனவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்
சுற்றுச்சூழல் சுத்தம் அவசியம் தற்போது மழை அதிகம் பெய்து, அதனால் வீட்டைச் சுற்றி நீர்த்தேங்கியுள்ளது. நீர்த்தேக்கங்களில் தான் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும் என்பதை மறக்காதீர்கள். ஆகவே உங்களுக்கு டெங்கு வராமல் இருக்க வேண்டுமெனில்,
வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயல்வதோடு, வீட்டைச் சுற்றி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த
கொசு கடிக்காமல் இருக்க... சருமத்தை முழுவதும் மூடக்கூடிய ஆடைகளை அணிவது, தூங்கும் போது கொசுவலைகளை உபயோகிப்பது, வீட்டில் கொசுக்கள் வருவதைத் தடுக்கும் செடிகளை வளர்ப்பது, கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவை கொசுக்கடிப்பதில் இருந்து நல்ல பாதுகாப்புத் தரும்.
டெங்கு காய்ச்சல் சிகிச்சை டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், நம் சித்த மருத்துவத்தில் இதற்கு ஓர் தீர்வு இருப்பது தெரிய வந்துள்ளது. அது என்னவெனில் பப்பாளி இலைச்சாற்றினை காலை, மாலை என இரண்டு வேளை அருந்துவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள தட்டையணுக்களின் அளவு குறையாமல் இருக்குமாம்
நில வேம்பு கஷாயம் தயாரிப்பது எப்படி:-
நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கஷாயம் யார் யாருக்கு எப்படி வழங்கினால் நல்லது
டெங்கு காய்ச்சல் நோய் கட்டுப்படுத்த நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.
இந்த கஷாயம் 5 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணம் எடுத்துக்கொண்டு, 200ml நீர் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
நீர், 100ml ஆக சுண்டிய பின், இறக்கி ஆற வைத்து வடித்து விட வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம்.
ஆனால் வயதிற்கேற்றாற் போன்று வழங்க வேண்டும்.
பெரியவர்களுக்கு, 30 முதல் 60 மில்லி வரையிலும்; ஒரு வயது முதல் 3 வயது வரை, 2.5 மில்லி லிட்டரும், 3 வயது முதல் 5 வயது வரை, 5 மில்லி லிட்டரும், 5 வயது முதல் ஏழு வயது வரை, 10 மில்லி லிட்டரும், 7 வயது முதல் 14 வயது வரை, 20 மில்லி லிட்டரும், 14 வயதுக்கு மேல், 30 மில்லி லிட்டரும் வழங்கலாம்.
குடல் புண் உள்ளவர்கள் உணவுக்கு பின் அருந்தலாம்.
கர்ப்பிணி பெண்கள் வாந்தி அல்லது வாந்தி உணர்வு இருப்பின் மாதுளை பழச்சாறு அருந்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
மது மேக நோய்க்கு மருத்துவம் மேற்கொண்டு வருபவர்கள் உணவுக்கு பின் அருந்தவும்.
. இவை அனைத்து சித்த மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது
Dr.S.Tamizharasan B.S.M.S.,