Tamil Aksobhya

Tamil Aksobhya For your birth karma prediction DM only 💐University certified Hathayoga Guru 🎉Panjangam, 😇Arudam.💐DeviUbasana,💐Psychic reading.🎉Fengshui 😇vasthu 💐lifecouch

அவசர நேரத்தில்‌ நிதானமாக இருக்க வேண்டும், ஆத்திரப்‌படும்‌ இடத்தில்‌ அமைதியாகவும்‌, தோல்வி கண்ட சமயத்தில்‌ சிந்தனை செய்து...
12/10/2025

அவசர நேரத்தில்‌ நிதானமாக இருக்க வேண்டும், ஆத்திரப்‌படும்‌ இடத்தில்‌ அமைதியாகவும்‌, தோல்வி கண்ட சமயத்தில்‌ சிந்தனை செய்தும்‌ வெற்றி கண்ட போது வாய்‌ ஜம்பம்‌ அடிக்காமலும்‌ வாழ வேண்டும், வாய்‌ சுவை தான்‌ வாழ்வென்று கருதாமல் உழைப்பில்‌ சுவை கண்டு உழைத்தவர்கள்‌ தான்‌ வாழ்க்கையில்‌
உயர்ந்திருக்கின்றார்கள்‌.

தவறான வெளிநிலைமைகள்‌ யாவும்‌ அகத்தின்‌ தோற்றங்கள் என்று ஒருவன்‌ அறிந்து கொண்டு உடலையும்‌, நாவையும்‌ ஆரம்பத்தில் இருந்தே ...
09/10/2025

தவறான வெளிநிலைமைகள்‌ யாவும்‌ அகத்தின்‌ தோற்றங்கள் என்று ஒருவன்‌
அறிந்து கொண்டு உடலையும்‌, நாவையும்‌ ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்படுத்த வேண்டிய அவசியகத்தைச்‌ தெளிவாகக்‌ காண்பான்‌. ஒரு உடல் சோம்பலாக உள்ளது என்றால் மனம்‌ சோம்பலில் உள்ளதென்பது தானே விளங்கும்‌ .
பேசும் வார்த்தைகள் அசிங்கம் என்றால் மனமும் அசுத்தமே !
வெளியே உள்ள நிலைமையை சீர் செய்ய முதலில் உள் உணர்வுகளை சீர் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த வேலைகளைச்செய்து முடிப்பதற்கு இன்றியமையாத பலமும்‌, ஊக்கமும்‌, உறுதியும்‌ உண்டாகும்.ஒருவன்‌ வாக்கின்‌ குற்றங்களை அழித்தால் அவனிடம்‌ உண்மை, வஞ்சகமின்மை, பணிவு, அன்பு, தன்னடக்கம்‌ என்னும்‌ ஒழுக்கங்கள்‌ வளர்ந்‌து வரும்.
வெற்றி தரும்.

ஒருவனது வாழ்க்கையின்‌ கேடுகள்‌ அவனது மனத்தின்‌ கேடுகளே, அவை அவனிடம் தான் உண்டாகின்றது.வெளியே இருந்து திடிரென்று வராது . ...
25/09/2025

ஒருவனது வாழ்க்கையின்‌ கேடுகள்‌ அவனது
மனத்தின்‌ கேடுகளே, அவை அவனிடம் தான்
உண்டாகின்றது.
வெளியே இருந்து திடிரென்று வராது . நாள்தோறும்‌, நாழிகை தோறும்‌, மாசற்ற நினைப்புக்களை நினைப்பதற்கும்‌, குற்றம் , சலனம் இவற்றில் விழக்கூடிய சக்தர்ப்பங்களில்‌ குற்றமும்‌ கலக்கமும் அற்ற செயல்களை செய்ய மனத்தைப்‌ பழக்கவேண்டும்‌.
கருங்கல்லில்‌
வேலை செய்கின்ற பொறுமையுள்ள சிற்பியைப் போன்று, சரியான வாழ்க்கையை ௮டைய வேண்டுகின்ற மனிதன்‌ தன் மனதையே கருங்கல்லாக ஆக்கி
அருமையான கனவுகளின்‌ இலட்சியத்தை ௮டையும்‌ வரையில்‌ ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வைராக்கியத்துடன் வேலை
செய்ய வேண்டும்‌.
Aksobhya Kavitha ✨ 💫 Jai varahi 🙏 💯

இரக்கப்படுகிற எவரும்‌ இந்தக்‌ காலத்தில்‌ ஏமாளி என்று தான்‌ அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும்‌ இரக்கம்‌ காட்டாமல்‌ எப்படி இரு...
23/09/2025

இரக்கப்படுகிற எவரும்‌ இந்தக்‌ காலத்தில்‌
ஏமாளி என்று தான்‌ அழைக்கப்படுகிறார்கள்.
ஆனாலும்‌ இரக்கம்‌ காட்டாமல்‌ எப்படி இருக்க
முடியும். மனிதர்கள் தெரிந்து கொண்டே எதிரே உள்ள குழியில்‌ விழுகிறோம் என்று புரிந்து கொண்டே பள்ளத்தில்‌ விழுந்து, சிரமப்பட்டு முயன்று மேலேறி
வந்து மீண்டும்‌ விழமுயன்று கொண்டிருக்கிறார்கள் .
இரக்கத்தின்‌ மறுபக்கம்‌ பல சமயங்களில் துன்பம்.
பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்.
சுயநலம் என்பது "தன்னை உணர்ந்து தனக்கு முதலில் மரியாதை செலுத்துவது".
Akshobhya Kavitha ✨🌟
Jai varahi 🙏

நாவை நன்றாக அடக்கி புத்திசாலித்தனமாகக்‌ கையாளும் போதும் தகுதியற்ற நினைப்புக்களை நாவில் ஓட விடாமல்‌ நிறுத்தும் போதும், சொ...
20/09/2025

நாவை நன்றாக அடக்கி புத்திசாலித்தனமாகக்‌ கையாளும் போதும் தகுதியற்ற நினைப்புக்களை நாவில் ஓட விடாமல்‌ நிறுத்தும் போதும், சொற்கள் தீங்கற்றதாகவும்‌, தூய்மையுள்ள தாகவும்‌ இனிமை வாய்ந்ததாவும்‌,
அருளுடையதாகவும்‌, காரியம் சம்பந்தமாக
அமைந்த பொழுதும்‌, மனத்தில் உள்ளதையும்‌ உண்மை தவிர வேறு ஒரு வார்த்தையையும்‌ பேசாத பொழுதும்‌, "ஒழுக்கவாக்கின்‌" ஐந்து சாதனங்களும்‌ செய்து முடிக்கப்பட்டவை ஆகும்.

18/09/2025

Jai varahi 🙏

“அறிவாளிகளால்‌ ஆகாத செயல்‌ ஏதுமில்லை! ஆனால்‌, அந்த அறிவாளிகள்‌ தம்முள்‌ ஒன்றுபட வேண்டும்‌ அறிவாளிகள்‌, ஒரு செயலை முடிக்க...
15/09/2025

“அறிவாளிகளால்‌ ஆகாத செயல்‌ ஏதுமில்லை!
ஆனால்‌, அந்த அறிவாளிகள்‌ தம்முள்‌ ஒன்றுபட வேண்டும்‌
அறிவாளிகள்‌, ஒரு செயலை முடிக்கப்‌ புகும்போது, இடை யிடையே உற்சாகம்‌ பெறுமாறு தம்மை ஊக்குவித்துக்‌ கொள்வர்‌!
ஆனால்‌, அறிவற்றோர்‌?
அறிவற்றோர்‌, முடிக்கவேண்டிய செயலை, முடிக்கவிடாமல்‌ இடையிலேயே கெடுத்துவிடுவர்‌!”
Aksobhya Kavitha ✨💫
Jai varahi 🙏💯✨

✨🌟💯 உன்னளவில்‌ நீ சந்தோஷம்‌ அடைய வேண்டு மென்றால்நீ உலகைப்பற்றியோ உறவைப்‌ பற்றியோ கவலைப்படக்‌ கூடாது. சிந்திக்கவும்‌ கூடா...
23/02/2025

✨🌟💯 உன்னளவில்‌ நீ சந்தோஷம்‌ அடைய வேண்டு
மென்றால்நீ உலகைப்பற்றியோ உறவைப்‌ பற்றியோ கவலைப்படக்‌ கூடாது. சிந்திக்கவும்‌ கூடாது. மற்றவர்கள்‌ , உன்னை சுற்றியிருப்பவர்கள்‌ சந்தோஷம்‌ பெற நீ உதவி செய்து வாழ விரும்பினால்‌, உன்னைப்‌ பற்றியும்‌ உன்‌ குடும்பத்தைப்‌ பற்றியும்‌
கவலைப்‌ படக்‌ கூடாது. சிந்திக்கவும்‌ கூடாது.
ஏனென்றால்‌ இரண்டும்‌ இரு துருவங்கள்‌.
ஜெய் வாராஹி 🙏

Address

Madurai

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 5pm

Telephone

+919092567833

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Aksobhya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamil Aksobhya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram