Swastham

Swastham Swastham - An Institute of holistic studies and research

23/10/2017

நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறேன்..
என்னை..

09/05/2017
09/05/2017
ஸ்வஸ்தம் நிகழ்வில் பங்கேற்றோரின் ஒரு பகுதியினர்
09/05/2017

ஸ்வஸ்தம் நிகழ்வில் பங்கேற்றோரின் ஒரு பகுதியினர்

ஸ்வஸ்தம்-குறும்படத் துவக்க விழா
09/05/2017

ஸ்வஸ்தம்-குறும்படத் துவக்க விழா

ஸ்வஸ்தம் பாராட்டு நிகழ்வுவிருந்தினர் கௌரவிப்பு
09/05/2017

ஸ்வஸ்தம் பாராட்டு நிகழ்வு
விருந்தினர் கௌரவிப்பு

05/05/2017
31/01/2017

சர்வ வல்லமை பெற்ற மனிதர்களுக்கு மட்டும் புரியும்..
சிவ.கதிரவன்

முதன் முதலாக ஒரு வார்த்தையால் உங்களை யாரவது வசை பாடினால் என்ன செய்வீர்கள்? கேட்ட உடன் தடுமாற்றம் வரும், கோபம் வரும். பின்பு உங்களை வசைபாடியவரை எதிர்கொள்ள நீங்கள் உங்களுக்குள் தயாராகி விடுவீர்கள், தேவை ஏற்பட்டால் அவருடன் திரும்ப வசைப்பாடவோ தாக்குதல் தொடுக்கவோ கூட முடிவுடன் இருப்பீர்கள். இதுதான் இயல்பு. அதைப் போல புதிய பாதையில் பயணிக்க தேவை ஏற்பட்டால் முதன் முதலில் தடுமாற்றம் அடைந்தாலும் பின் உங்கள் அனுபவத்தின் வாயிலாக அடுத்தடுத்த பயணங்களில் நீங்கள் தயாராகிவிடுவீர்கள். பழக்கமில்லாத உணவை உட்கொள்ள நெருக்கடி ஏற்பட்டால் உணவு உடலுக்குள் சென்றவுடன் உடல் உணவுப்பொருளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் அல்லது புறந்தள்ளும்; இங்கு உடல் என்பதும் நீங்களே. இவ்வாறு உங்கள் சூழலில் பழக்கமில்லாது எதிர்ப்படுகிற எல்லா முரண்பாடுகளில் வாழ்ந்து பின் முரண்பாடுகளை உங்களுக்கான வாய்ப்பாக்கிக் கொண்டு வாழும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள்.. இக்கருத்தில் என்னுடன் உடன்பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லாவிடில் இது உங்களுக்குரிய பதிவு அன்று...

முரண்பாடுகளை வாய்ப்புகளாக மாற்றும் வல்லமையுள்ள உங்களையும் உங்கள் வல்லமையின் தரத்தையும் நம்பாமல் உங்களுக்கு வசதியாக உள்ள எல்லாவற்றையும் புறம் தள்ளி முரண்பாடுகளை உருவாக்குவது எவ்வாறு சரி? நல்ல உணவை உட்கொள்ளும் உங்களிடம் அதற்கு மாற்றாக முரண்பட்ட உணவை தருவதும் உங்களின் பாதையில் குழப்பத்தை ஏற்படுத்தி முரண்பாடை உருவாக்குவதும் அமைதியாக இருக்கும் உங்களை செயற்கையாக பதற்றம் அடையச்செய்வதும் உங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையன்றி வேறில்லை. ஏனெனில் வளர்ச்சியில் ஏற்படும் முரண்பாடுகளை வாய்ப்பாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள் நீங்கள்.

கதை இவ்வாறிருக்க, தற்பொழுது நிகழும் தடுப்பூசி வழங்கும் செயல்பாடு பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.

உங்களுக்கு நவீனம் ஒரு வாழ்க்கை முறையை பகிர்ந்தளிக்கிறது. உங்களில் பெரும்பான்மையினர் பின்பற்றத் துவங்கியவுடன் மீதமுள்ளோர் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். ஒரு வழியாக ஒரு சமூகம் முழுவதும் தமது வாழ்க்கை முறையை நவீனத்தின் பெயரால் மாற்றிக்கொண்டவுடன். நவீனம் மெதுவாகச்சொல்லத் துவங்கியுள்ளது.. "எம் வாழ்க்கை முறையில் வாழும் உங்களுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளதாக எங்கள் ஆய்வுகள் கூறுகின்றன, எனவே நோய்களில் இருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள எங்களின் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்"... என்று, இதில் விருப்பம் இல்லாதவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்கிற பெருந்தன்மை வேறு..

இந்த தடுப்பூசி பற்றிய செய்திகள் வரத் துவங்கியவுடன் அதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்கிற விவாதம் நடக்கதொடங்கி விடுகிறது. அதில் வருங்காலதில் ஏற்படும் நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று நம்பிக்கை பேச்சுவார்தைகள் கேட்கின்றன. அதில் சொல்லப்படும் அறிவியல் கதையாடல் பற்றி அப்புறம் பேசலாம்.. முதலில் நோய் ஏற்படாத போது ஏன் மருந்து உட்கொள்ள வேண்டும்? ஒரு வேளை முன் காப்பு நடவடிக்கை எனில் உடலை பலப்படுதிடும் உணவு பரிந்துரைதானே புத்திசாலித்தனமானது? என்று சிந்திக்க வேண்டும்..

இன்னும் ஒருபுறம் தடுப்பூசியின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நிகழ்கின்றன.அதில் தடுப்பூசி நல்லது, கெட்டது என்ற வாதங்கள் நடக்கின்றன. நவீனத்தின் பெயரால் அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசிகள் எப்படியாக இருந்தாலும் நவினம் மீது எனக்குள்ள கேள்வி உங்களின் மரபை சூறையாடாத நவினம் உண்டா? உங்களின் வாழ்வின் வளமையை கேலி செய்து அதன் விளைவாகதன்னை விற்றுக்கொள்ளும் விஞ்ஞான யுக்திகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களின் உப்பை கேலி செய்துதான் நவினம் பற்பசைகளை விற்றது. உங்களின் மஞ்சள் கிழங்குகளை கிண்டல் செய்துதான் உங்கள் பெண்களுக்கு வாசனை சோப்புகள் தரப்பட்டன. இப்படியாக உங்கள் கதராடைகள் குழாய் சொக்காய்களாகவும் மண் பாத்திரங்கள் ப்ளாஷ்டிக் குடங்களாகவும் விளைநிலங்கள் கட்டிடங்களாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்னும் மாறவும் செய்யும்.. இவை யாவற்றையும் சிறப்பாக செய்வது இன்று தடுப்பூசி தந்து உங்களைக் காக்கும் விஞ்ஞான வகையறாக்கள்.. இவர்கள் இப்பொழுது உங்கள் நலனை கெலி செய்து மருந்தை முன் வைக்கிறார்கள் என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

இந்த நினைவூட்டல் போதுமா என்று தெரியவில்லை.. ஆனால் எனக்கு முன்பே முன்னோடிகள் பலர் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கின்றனர். நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றனர். நீங்கள் எங்களுக்கும் சரி சரி என தலையாட்டிவிட்டு நவினத்தியும் அனுமதிக்கின்றீர்கள். அதன் பலனாகத்தான் விதவிதமான நோய்களை உங்கள் சமூகம் சுமந்து சுற்றுகிறது.. நினைவூட்டல் பற்றி தெரிந்து கொள்பவர்களும் தேடுபவர்களும் நலம் பெற வல்லமையுள்ளவர்கள். ஒரு வேளை இந்த நினைவூட்டல் உங்களுக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை...
இது சர்வ வல்லமை பெற்ற மனிதர்களுக்கு மட்டும் புரியும்..

17/11/2016

வருத்தப்படாதீர்கள்! நிறைய வேலை இருக்கிறது! - சிவ.கதிரவன்.

"ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே" என்று வாழ்கிற மனிதரைப் பற்றியும், "ஓசியில பாவாடை கொடுத்தா எனக்கு இரண்டு, என் புருசனுக்கு ரெண்டு." என்று வாழ்கிற பெண்களைப் பற்றியும் தமிழகத்தில் பழமொழிகளும் கிராம சொல்வடைகளும் இருந்து வருகின்றன. இந்த பழமொழிகளைப் படித்தவுடன் உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் விட்டுவிடுங்கள். இந்த பழமொழிகளுக்கும் இந்த பதிவிற்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விடாதிர்கள், இந்த பழமொழி தனி; இந்த பதிவு தனி.

அறிவியல் வளர்ச்சி நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது என்று நம்பி கொண்டிருந்த வேளையில் நிறைய வசதிகளை அனுபவித்தோம். நீங்கள் நின்ற இடத்தில் உங்களால் உங்களுக்கு வேண்டியவரோடு தொடர்பு கொண்டு பேச முடியும் - இது அறிவியல் கொடுத்தது. நீங்கள் நின்ற இடத்திலிருந்து உங்கள் உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்த்துக்கொள்ள முடியும். இதுவும் அறிவியல் கொடுத்தது. ஆயிரக்கணக்கான மைல் தூரத்தை சில மணி நேரங்களில் கடந்து விடமுடியும் - இதுவும் அறிவியல் கொடுத்தது. ஆறு மாத பயிர்களை சில நாட்களில் அறுவடை செய்ய முடியும், இதுவும் அறிவியல் கொடுத்தது. குறுகிய காலத்தில் கோழிகறி பெறுக்குவது, கொழுப்பு காரணமாக அதிகப்பால் பெறுவது, எங்கோ நடக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் கருத்து சொல்வது என்று உள்ளங்கைக்குள் உணவையும் உலகத்தையும் கொண்டு வந்திருப்பது அறிவியல். அறிவியலின் இத்தகைய வளர்ச்சியால் கொண்டாட்டங்களுக்கு குறைபாடில்லை.. உங்களது தலைமுடி நிறம் மாற், உங்கள் முகம் பளபளப்பாக, உங்கள் ஆடைகள் மிளிர என எல்லா நுட்பங்களும் உங்களைப் பூரிக்கவைத்துக் கொண்டேயிருக்கின்றன. இவ்வளவு விசாலமான அறிவியல் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள உங்கள் பணத்தை அட்டைளாக மாற்றி உங்களிடமே கொடுத்திருப்பதும் அறிவியலின் கண்டுபிடிப்புதான். நீங்கள் எல்லா சுகபோகங்களையும் உலக அளவில் ஒப்பிட்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் குழுவில் உள்ளவ்ர்களின் கோளாறினால் உங்கள் அறிவியல் வேலை செய்ய முடியவில்லை. உலகப் பொதுவில் இருக்கும் அறிவியலிற்கு ஒரு குழு செய்யும் நல்லெண்ண நடவடிக்கை பற்றியெல்லாம் தெரியாது. வலிந்து வலிந்து உங்களை வசதியாக்கி விட்டு உங்கள் குழுவில் சிலர் செய்யும் தவறுகளால் ஸ்தம்பித்துப் போவது குழுவின் பற்றாக்குறையா அல்லது அறிவியலின் பற்றாக்குறையா என்று நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

உங்கள் குழு நீதி பற்றியும் நேர்மை பற்றியும் பதுக்கல் பற்றியும் கள்ளப்பணம் பற்றியும் சுற்றி சுற்றிப் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. எனது ஆச்சரியத்திற்குக் காரணம் நீதி, நேர்மை, கள்ளப்பணம், பதுக்கல் இவை எல்லாம் உங்களுக்குத் தெரியாமல் நடக்கவில்லை. இவை வழிமாறிப் போனதற்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. விலைவாசி உயர்வைப் பற்றி பொங்கும் நடிகரின் திரைப்படத்தை அதிக விலை சீட்டு எடுத்து திரையரங்குகளுக்குள் ஆரவாரம் செய்யும் போது கிழிக்கப்பட்டசீட்டுகள் உங்களைப்பார்த்து சிரிப்பதைக் க்வனித்திருக்கிறீர்களா? பொதுப் பயணத்தில் உங்களுக்கு மட்டும் இருக்கை வசதிகேட்டு ரகசிய ஒப்பந்தம் போடுவதற்கு அதிக விலை கொடுப்பவர்களை ஒவ்வொரு தீபாவளிக்கும் பயண வேளைகளில் பார்க்கமுடியும். நல்ல சம்பளம் கிடைக்கிற அரசு வேலையில் இருந்துகொண்டு ஆஃபர் பொருட்களைத் தேடி வாங்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். இவர்களெல்லாம் உங்கள் குழுவில் இருப்பது என்னைப் போலவே உங்களுக்கும் தெரியும் என்பதால் நீங்கள் நீதி நேர்மை பற்றி பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அரசாங்கம் கள்ளப் பணத்தைத் தடுக்க வெண்டுமென்று வாய் திறக்க ஆரம்பித்தவுடன் தேசமே உயரப் போவதாக கண்ணை மூடிக் கற்பனை செய்கிறீர்கள். நீங்கள் பார்க்கும் நபர்கள் அனைவரிடமும் திரும்பத் திரும்ப தேச நலன் பற்றியும் புலம்பித் தவிக்கிறீர்கள். சுய நினைவின்றி பழக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் இப்போது உங்களை அடிமை போல வேலை வாங்குகிறது. நீங்கள் கையில் வைத்திருக்கும் அட்டைகள், உங்கள் குழந்தையின் பசிக்கும் வயிற்றைப் பார்த்து உணவை வாங்கித் தர வழியில்லாமல் பல்லிளிக்கின்றன. பேரழிவிற்குப் பிறகு நிவாரணம் வாங்கும் இல்லாதோர் கூட்டம் போல வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறீர்கள். தேசம் நலமாக நாம் கஸ்டங்களை எல்லாம் தாங்கத்தானே வேண்டுமென்று ஆறுதல் போல புலம்பிக்கொள்ளவதைத் தவிர உங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை..

மிக எளிய நான்கு கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். கறுப்பு பணம் என்பது என்ன? அரசு கணக்கில் வரி கட்டாத பணம், ஏன் வரி கட்ட முடியவில்லை? முறையான உழைப்பில் வரவில்லையென்றால் எவ்வாறு வரி கட்டுவது? அனைவரும் முறையான வழியில் சம்பாதிக்க தயாராகிவிட்டீகளா? இந்தக் கேள்விகள் உங்களுக்குப் புரியவில்லை என்றால் கூட முயற்சித்து யோசியுங்கள். பல்கலை கழகங்கள் - பாடத்திட்டங்களையும் கல்லூரிகளையும் அனுமதிக்க லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் உண்டு. குறைந்த அரசுக் கட்டணம் இருந்தாலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் பாடசாலைகள் உண்டு. பெரிய பாடசாலைகளில் தன் பிள்ளைகளை படிக்கவைக்க முயற்சிக்கும் பெற்றோரும் அரசு ஊழியர்களும் உண்டு. தன் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்கும் மற்றவர் போல தன் குடும்பத்தை வாழ வைக்கும் முயற்சியில் பணம் சேர்க்கும் குறுக்குவழியை தேர்வு செய்யும் ஒரு கூட்டம் உங்கள் குழுவில் நிறைந்திருக்கிறது. இந்த குறுக்கு வழியில் பாய்கிற கூட்டம் சீராகாமல் கறுப்பு பணம் சீராகாது. இந்த கூட்டதில் நீங்கள் உறுப்பினர் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

இவ்வாறாக உங்கள் குழுவின் நலம் பற்றி தொடர்ந்து சிந்தித்து பேசி உங்களோடு சண்டையிட்ட, கோபம் கொண்ட நிறைய அறிவாளிகளையும் போராளிகளையும் உங்கள் குழு சந்தித்திருக்கிறது. உங்கள் குழுவின் நலனுக்காக அறிவாளிகளும் போராளிகளும் போட்ட சத்ததில் உங்கள் குழுவிற்கு கோபமோ, ரோசமோ, வருத்தமோ வந்ததில்லை. எனவே இப்போதும் வருத்தப்படாதீர்கள். நிறைய வேலை இருக்கிறது.

21/10/2016

இப்படி ஒரு கனவு வந்துள்ளது.
சிவ.கதிரவன்.

உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கை இல்லை என்றால் இதனை படிக்க வேண்டாம். ஏனெனில் கனவுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த உரையாடலை எவ்வளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலின் காரணமாக பகிர்ந்து கொள்கிறேன். எனவே கனவு பற்றி பேச்சு வருவதால் உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கை இல்லை என்றால் இதனை படிக்க வேண்டாம்.

கனவிற்குள் செல்வோம்.

கனவின் நாயகர் நம் நண்பர் திருவாளர் டியூப் லைட் அவர்கள். அவர் ஒரு கலவையான ஆள், அப்படியென்றால் இப்படிதான் என்று அவரை வகைப்படுத்த முடியாது. கோபம் கவலை பயம் என எல்லா உணர்ச்சிகளும் உடையவர். பணம் பணம் என்று பணத்திற்கு பின்னால் ஓடுவார், திடீரென்று பணமெல்லாம் தேவை இல்லை என்று தத்துவம் பேசுவார். சில மாதம் அரசு வேலை, சில நாட்கள் தனியார் வேலை, கொஞ்சநாள் ஒப்பந்த வேலை என்று பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர் இப்படி ஒரு கலவையான ஆள்தான் டீயூப் லைட். ஒரு நாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் பேசுகிறார்

அந்த உரையாடல்...

டீயூப் லைட்: ஹலோ
ஒரு பெண்குரல்: ஹலோ நாங்கள் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தில இருந்து பேசுகிறோம், என் பெயர் துர்தேவதை.. எங்க கம்பெனியின் சில ஆஃப்ர் பற்றி உங்களிடம் பேச வேண்டும் இப்போது பேசலாமா. .

டீயூப் லைட்: சொல்லுங்கள் பேசலாம்.
துர்தேவதை.: நீங்கள் பயன்படுத்தும் எங்கள் சேவைகளில் சில புதிய ஆஃபர் வந்துள்ளது. மேலும் உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது.உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?

டீயூப் லைட்: கண்டிப்பாக, நான் என்ன செய்யவேண்டும்?
துர்தேவதை.: மகிழ்ச்சி. அப்படியென்றால் உங்கள் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு அலுவலகம் வாருங்கள்,
டீயூப் லைட்: உடனே வருகிறேன்.
துர்தேவதை.: நல்லது வாருங்கள்.

திருவாளர் டீயூப் லைட் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தின் அலுவலகம் வருகிறார். அது ஒரு மழை நேரம் அலுவலகத்தில் அழகானப் பணிப்பெண்கள் வரவேற்கின்றனர். பணிப்பெண்கள் விபரம் கேட்டு அமர வைக்கின்றனர். அமர்ந்துள்ளார்

டீயூப்லைட் அழைக்கப்படுகிறார்.
அவருடன் பணிப்பெண் பேசுகிறார். வணக்கம் நாந்தான் துர்தேவதை என்கிறாள். அப்பெண் நிறைய அலங்காரங்களும் நிறைய வாசனைகளும் பூசியிருந்தாள்..

அவர்களின் உரையாடல்..

துர்தேவதை : திரு ட்யூப்லைட் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி...
டீயூப் லைட்: வணக்கம்.உங்கள் ஆபிஸில் இருந்து வரச்சொன்னாங்க. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துவந்துருக்கேன்.

துர்தேவதை : ஆமாம் ஸார், உங்களுக்கு ஏற்கனவே எல்லாம் தெரிஞ்சு இருக்கும். ஏன்னா நீங்கள் எங்கள் துஷ்ப்ரயோகம் நிறுவனத்தின் சுமார் 287 பொருட்களை இலவசமாகவும் ஆஃப்ர்லேயும் வாங்கி பயன்படுத்தி இருக்கிங்கிங்க. நீங்க எங்களோட முக்கியமான கஷ்டமர்..

டீயூப் லைட்: ஆமாம் எப்படி உங்களால் இவ்வளவு இலவசங்கள் ஆஃப்ர்கள் தரமுடிகிறது.?
துர்தேவதை : அதுவா எங்கள் நிறுவனத்தலைவர் நிறையத் தொழில் செய்து வருகிறார். உலகில் உள்ள எல்லாத்தொழில்களும் எங்கள் தலைவருக்குத் தெரியும். அதில் வரும் லாபங்களை பிறதொழில்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்கிக்கொள்வார். அவருக்கு நல்லதொழில் கெட்டதொழில் என்றெல்லாம் தெரியாது. எல்லாமும் தொழில்தான். அதன் லாபம்தான் இலக்கு...
என்றவாறு ஏதோ புத்தகங்களை அடுக்கி கொண்டே பேசினாள்.

டீயூப் லைட்: நல்லது சொல்லுங்கள்
துர்தேவதை : ஆமாம். திரு டீயூப் லைட். இது வரை நீங்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு நாளையுடன் ஆஃபர் முடிக்கிறது. எனவே நீங்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு பணம் கட்ட வேண்டும். அதில் கட்டிய ரசீது எண்ணில் ஒன்றை தேர்வு செய்து வெளி நாட்டுச்சுற்றுலா அனுப்புவோம்.. பணம் கட்டிவிடுகிறீர்களா? மிஸ்டர் டீயூப்.. (அதான் டீயூப் லைட்டின் சுருக்கம்)...

டீயூப் லைட் சரி எவ்வளவு கட்ட வேண்டும்?
சிரித்த முகத்துடன் ஒரு தாளை அவனிடம் நீட்டும் போது டீயூப் லைட் முகம் அதிர்ச்சி அடைந்தது.

துர்தேவதை : சொல்லுங்கள் மிஸ்டர் டீயூப். எவ்வளவு பணம் கட்ட முடியும்? வேற என்ன சந்தேகம்?
டீயூப் லைட்:இல்லை இவ்வளவு பணம் போட்டுருக்கு,,, அதான் எனக்கு வேண்டாம் என சிலவற்றை நிறுத்திக்கொள்ளட்டுமா...

துர்தேவதை : தாராளமாக.. ஆனால் இவ்வள்வு நாள் பயன்படுத்தி பழகியிருக்கீங்களே மிஸ்டர்..
டீயூப் லைட்:ஆமாம் ஆனால் அதிகமாக செலவு வரும் போலவே?.. நான் தேவையற்றதை நிறுத்திக் கொள்கிறேன்.

துர்தேவதை :நல்லது உங்கள் விருப்பம் போலஸ் செய்யலாம். ஆனால் உங்களுக்கு வெளி நாட்டுப் பயணம் கிடைக்காது. சரியா.. இந்தவாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் மிஸ்டர் டீயூப்...
டீயூப் லைட்: சரிதான் ஆனால் உங்கள் விலை எனது பட்ஜெட்டில் அடங்காது.. நான் நிறுத்திக்கொள்கிறேன். பரவாயில்லை. உங்கள் விலையை பார்க்க எனக்கு ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது...

துர்தேவதை : ஹாஹா.. மிஸ்டர் டீயூப் நீங்கள் அதெல்லாம் செய்ய வேண்டாம். ஏன் இவ்வளவு பயம்? ஓய்வாக இருங்கள். நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வோம்..
டீயூப் லைட்:ஓய்வைக் கழிக்கத்தான் இத்தனையும் வாங்கினேன். இப்போது அதுவே கழுத்தை பிடிக்கிறது. இலலை எனக்கு வேண்டாம். எல்லாவற்றையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்...

துர்தேவதை : நல்லது. உங்கள் விருப்பம்..ஆனால் நீங்கள் புறப்படும் முன் தனிப்பட்டமுறையில் நான் பேசலாமா? நீங்கள் சம்மதித்தால்,,
டீயூப் லைட்: எந்த பொருளும் விற்க வில்லை எனில் பேசுங்கள்...

துர்தேவதை :நன்றி மிஸ்டர் டீயூப்லைட். விருப்பம் இல்லாத வேலையில் தான் சோர்வும் களைப்பும் ஏற்படும் என உங்களின் மனிதர்களும் புனிதர்களும் சொல்கிறார்கள்... ஏன் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையும் வெலையும் விருப்பமாக இல்லையா?
டீயூப் லைட் அமைதியாக யொசிக்கிறார்...

துர்தேவதை : மனிதன் வாழ பணம் தேவையில்லை. நீங்கள் சேர்க்கும் எல்லாப்பணமும் ஆஃப்ரில் எங்களிடம் செலவு செய்யத்தான்.. இன்னும் பத்துஆண்டுகளில் உங்களின் எல்லாப்பணமும் எங்களிடம் கட்டவேண்டியது வரும் என எங்கள் நிறுவனம் நடத்திய சர்வே சொல்கிறது...உங்களால் எதுவும் செய்யமுடியாது...
டீயூப் லைட்: அதெப்படி நான் உங்கள் நிறுவனத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன செய்வீர்கள்..

துர்தேவதை : ஹாஹாஹா... நாங்கள் இல்லை என்றால் வேறு நிறுவனம்.. அது ஒரு விசயமல்ல... மிஸ்டர்.. நாங்கள் உங்களுக்கு முதலில் இலவசமும் ஆஃபரும் தருவோம்.. பின் நீங்கள் பழகியவுடன் உங்களைப் பார்த்துக்கொள்வோம்.. அவ்வளவுதான்...
டீயூப் லைட் : புரியலயே..

துர்தேவதை : உங்களுக்கு புரியாது.. இப்போது நீங்கள் எங்களிடம் பயன் படுத்தியுள்ள சேவை 200க்கும் மேல்.. நீங்கள் உண்ணும் உணவு நாங்கள் தந்தது, உங்கள் பற்பசை,உங்கள் தண்ணீர், உங்களின் தேநீர், அதில் உள்ள சர்க்கரை, அதை ஊற்றும் கோப்பை, அமரும் நாற்க்காலிகள், சாப்பிடும் தட்டு எல்லாமும் நாங்கள் உங்களுக்கு பழக்கியதே... ஒரு நேரத்தில் ஒரு செனல் தான் பார்க்கமுடியும் என்றாலும் 80 செனல் பார்க்க பணம் கட்டவைத்துள்ளோம். ஒருவரிடம் மட்டுமே பேசத் தெரிந்த உங்களுக்கு 2 செல் போன். 3,4 சிம் கார்டு,, நாங்கள் கொடுத்தது...
டீயூப் லைட் : சரிதான்..

துர்தேவதை : என்ன சரிதான் எல்லாவற்றையும் இலவசத்தில் தான் பழகினீர்கள்.. உங்களின் மகன் வாகனம் கேட்ப்பது நாங்கள் சொல்லிக் கொடுத்தது. உங்கள் செல்லமகளின் தலை முடியில இருந்து கால் வரை பூசும் அத்தனையும் எங்களிடமே கற்றாள். இன்னும் யார் என்ன சாப்பிடவேண்டும் எப்படி சாப்பிடவேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் தீர்மானம் செய்வது நாங்கள்தான்...
டீயூப் லைட் :.....

துர்தேவதை : இன்னும் உங்கள் குழந்தையைக் கொஞ்சுவது எப்படி என உங்கள் தலைமுறை எங்களிடம் பார்த்துக் கற்றுக்கொள்ளும்.. நாங்கள் சொல்லும் படிதான் வளர்ப்பார்கள் சுயமாக பிள்ளை வளர்ப்பதை உங்கள் சமூகத்திடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.. இன்னொன்று சொல்லவா...
டீயூப் லைட் :ம்ம்ம்...

துர்தேவதை : நீங்கள் உங்களின் காதலியைக் கொஞ்சுவதும் மனைவியுடன் உறவு கொள்வதும் கூட நாங்கள் காண்பிக்கும் படங்களின் வழியாக நடக்கும்.. எங்களின் ஆபாசப்படங்கள் உங்களின் காதலை ஆபாசப்படுத்தும்.. எங்களின் பரிந்துரைகள் உங்களின் இரவு நேர ரகசிய உரையாடலாக மாறும்... உங்களை முழுவதுமாக எங்களின் இலவசங்கள் மாற்றிவிடும்...
டீயூப் லைட் :ஓ..

துர்தேவதை : நீங்கள் விரும்பினாலும் மருத்தாலும் உங்கள் சிந்தனையை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்.. உங்கள் மரபு, வாழ்வியல், காதல் வீரம், அறம், கலவி, மகிழ்ச்சி என எல்லாவற்றையும் நாங்கள் தரும் இலவசங்க்களுக்குள் தொலைத்து விடுவீர்கள் மறந்து விடுவீர்கள்...

வெளியில் பெய்யும் மழைக்கு இடையே 'டம்' என்ற இடி சத்தம். நான் தூக்கம் விழித்துவிட்டேன்.. கனவில் அவர்களின் பேச்சு என்ன ஆனதென்று தெரியவில்லை... எனக்கும் கனவுகள் பற்றி ஒன்றும் கவலை இல்லை.. ஆனால் எனக்கு இப்படி ஒரு கனவு வந்துள்ளது...

17/10/2016

பரிவு என்பதை பழகிக்கொள்வோம்..
சிவ.கதிரவன்

உடலோடு பரிவாக இருப்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு பரிவாக இருப்பது என்பது என்ன, என்று தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. பரிவு என்பதை இந்த சமுதாயம் பல விதமாக விளக்கிச் சொல்கிறது. நாம் பரிவுடன் இருப்பதை முதலில் புரிந்துகொள்வோம்.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படை இயல்பு, தான் எப்பொதும் சௌகர்யமாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும் என்பதே. எல்லா உயிர்களும் தம்மிடம் உள்ள உடலைக் கொண்டு நலத்தை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்கின்றன. நானும் நீங்களும் கூட அப்படித்தான். நாற்காலியில் நீங்கள் அமர்வது வசதிக்குறைவாக இருந்தால் ஒரு அசௌரிய உணர்வு ஏற்பட்டு தரையில் அமர்ந்து கொள்வீர்கள். நீங்கள் நெருக்கமான கூட்டத்தில் இருந்தால் நகர்ந்து வரும் உந்துதலை உடல் அறிவிக்கும், பொருத்தமில்லாத உணவை உட்கொள்ளும் பொழுது வேண்டாம் என அறிவித்து முகம் சுழிப்பதும் கூட உடலின் இயல்புதான். இவ்வாறு உடல் தம்மை நலமாக வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளயும் எப்பொதும் செய்து கொண்டே இருக்கும், இதைப் புரிந்து கொள்வது தான் உடலை கவனிப்பவரின் முதல் செயல். இவ்வாறான புரிதல் எல்லா உயிர்களின் எல்லா முயற்சியும் தம்மிடம் உள்ள உடலைக் கொண்டு நலத்தை நிலை நிறுத்திக் கொள்ளவதுதான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.

தும்மல் வருவதும் இருமல் வருவதும் கை கால் வலிப்பதும் என எல்லா மாற்றங்களுக்குமான உடலின் நோக்கம் அமைதியாகவும் நலமாகவும் இருப்பது என்பதே. அமைதியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக உடல் இயங்குகிறது என்று புரிந்து கொண்டு நிகழும் மாற்றங்களை கவனிப்பதும் அதனை நமது மனக்குழப்பங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்வதும்தான் உடலைப் புரிந்து கொள்ளும் அடுத்த படி.

இவ்வாறான உடலின் செயல்பாடு மொத்தமும் நலம் பெறும் முயற்சிதான் என்று புரிந்தவுடன் உங்களை அறியாமலேயே உடல் மீது நேசம் பிறந்துவிடும். தும்மல் ,இருமல்,வலிகள் உள்ளிட்ட எல்லா செயல்களும் கொண்டாட்டமாக மாறிவிடும். அப்புறம் கொண்டாட்டத்தை மட்டும் அள்ளி கொடுக்கும் உடலை பரிவுடன் பார்த்துக் கொள்வீர்கள்.

உங்களுக்குள் உடலின் செயல்கள் கொண்டாட்டம் என்பது புரிந்தவுடன் உடலோடு பரிவுடன் இருப்பதை விட வேறு என்னதான் செய்ய முடியும்?....

Address

Chekkadi Street
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when Swastham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Swastham:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram