Vadamalayan Hospitals, Madurai

Vadamalayan Hospitals, Madurai Vadamalayan Hospitals – Serving South Tamil Nadu since the 1930s. Ethical, compassionate, patient-first care.

A trusted super speciality hospital with an integrated cancer center, advanced cardiac care, and 24/7 emergency services in Madurai & Dindigul.

மைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும்.  உணவில் ஸ்போர் (Spore) எ...
04/02/2026

மைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும். உணவில் ஸ்போர் (Spore) என ஒன்று இருக்கும். அதாவது, அதை பாக்டீரியாவின் குழந்தை எனலாம். முதல்முறை சமைக்கும்போது, அந்தச் சூட்டில் அந்த ஸ்போர் செயலிழந்து விடும். சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அந்த ஸ்போர் மீண்டும் பாக்டீரியாவாக உருவெடுக்கும். பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். எனவே அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும்போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி, சிக்கன் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

மருத்துவ மொழியில் இதை 'எக்கிமோசிஸ்' (Ecchymosis) அல்லது 'கன்டூஷன்' (Contusion) என்று சொல்வோம்.  ஏதோ பிரச்னைக்காக நீங்கள்...
04/02/2026

மருத்துவ மொழியில் இதை 'எக்கிமோசிஸ்' (Ecchymosis) அல்லது 'கன்டூஷன்' (Contusion) என்று சொல்வோம். ஏதோ பிரச்னைக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வலி நிவாரணிகள், சிலவகை புற்றுநோய்கள் போன்றவற்றால்கூட இப்படி வரலாம். ரத்தம் உறைவதில் பலருக்கும் பிரச்னைகள் இருக்கக்கூடும். 'ஹீமோஃபிலியா' (Hemophilia) அல்லது 'வான் வில்லிபிராண்ட் டிசீஸ்' (Von Willebrand disease) போன்ற பிரச்னைகள் இருக்கலாம். இந்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் மிகச் சுலபமாக ரத்தம் கட்டும் தன்மை வரும். இன்னும் சிலருக்கு பரம்பரைத்தன்மை காரணமாகவும் இப்படி வரலாம். லேசாக அடிபட்டாலோ, இடித்துக்கொண்டாலோகூட அந்தப் பகுதி சருமத்தில் ரத்தம் கட்டிக் கொள்ளும். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே குறைபாடு உள்ளவர்களுக்கும் இப்படி நிகழலாம். ரத்தம் உறைவதைத் தடுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கு இந்தப் பிரச்னை சற்று குறைவாக இருக்கக்கூடும்.

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ...
04/02/2026

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் ( Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும்.

விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிட...
04/02/2026

விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதால் வரலாம். அதிக காரமுள்ள உணவுகளால் வரலாம். மது அருந்துவதால் வரலாம். சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம். திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும். சாப்பிடும்போது சிலர் நிறைய காற்றை விழுங்குவார்கள். குறிப்பாக சூயிங்கம் மெல்லும்போது இப்படி நடக்கும். அதனாலும் விக்கல் வரலாம். அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு விக்கல் அடிக்கடி வரும். மனரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் க...
04/02/2026

பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம். குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள். வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது. கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம். ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது. எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம்.

மூளை என்பது 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தால் ஆனது. ஆனால், இன்று பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால், இதய ஆரோக்கியம் என்ற பெயரில் க...
04/02/2026

மூளை என்பது 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தால் ஆனது. ஆனால், இன்று பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால், இதய ஆரோக்கியம் என்ற பெயரில் கொழுப்பு குறைவாக அல்லது அறவே கொழுப்பு இல்லாமல்தான் சாப்பிடுகிறார்கள். அப்படி கொழுப்பு குறைவாகச் சாப்பிடுவது மூளைக்கு நல்லதல்ல. எனவே, கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவதைத் தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். மீன், பாதாம், அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. மூளையில் 75 சதவிகித அளவு நீர்ச்சத்து இருக்கும். அதைத் தக்கவைக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆற்றல் குறைவது, அதீத தூக்கம், சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக முடி உதிர்வது, எதிலும் கவனம் செலுத்த முடியாதது, எளிமையான வேல...
04/02/2026

ஆற்றல் குறைவது, அதீத தூக்கம், சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக முடி உதிர்வது, எதிலும் கவனம் செலுத்த முடியாதது, எளிமையான வேலைகளைச் செய்தாலோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்கினாலோ மூச்சு வாங்குவது, கண்களும் நகங்களும் வெளிறி இருப்பது, கூந்தல் மெலிவது என அனைத்துமே ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம். வயது வாரியாக ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்களால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். எனவே, மருத்துவரை அணுகி, உங்கள் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து ஆலோசனை பெறுங்கள். முட்டை, எலுமிச்சைப்பழ ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்தும், இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள். முட்டை, பருப்பு, கெட்டியான சாம்பார், பருப்பு சேர்த்த தோசை, சன்னா- காய்கறிக் கூட்டு, கறுப்பு அரிசி, பருப்புடன் கீரை, நிறைய காய்கறிகள் சேர்த்த சிவப்பு அவல் உப்புமா, முட்டை சேர்த்த கட்டி ரோல், பனீர், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, எலும்பு சூப் போன்றவற்றை உங்கள் மெனுவில் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு சிறுநீரகங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதில் பாதிப்பிருக்காது. காலை...
04/02/2026

உங்களுக்கு சிறுநீரகங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதில் பாதிப்பிருக்காது. காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதைவிடவும், நாள் முழுவதும் நம் உடல் நீர்வறட்சியின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது. உங்களுக்கு சிறுநீரக பாதிப்போ, ரத்த அழுத்தமோ, நீரிழிவோ, இதயநோய்களோ, கணைய பாதிப்போ இருந்தால் ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. இந்தப் பிரச்னைகள் உள்ளவர்கள் இப்படி ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் தலைச்சுற்றலோ, மயக்கமோ வரலாம்.

சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை என்றால் என்ன?
04/02/2026

சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை என்றால் என்ன?

40 வயதைக் கடந்ததும் பலருக்கும் அருகிலுள்ள எழுத்துகளைப் படிப்பது, நெருக்கத்தில் உள்ள காட்சிகளைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட...
03/02/2026

40 வயதைக் கடந்ததும் பலருக்கும் அருகிலுள்ள எழுத்துகளைப் படிப்பது, நெருக்கத்தில் உள்ள காட்சிகளைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படும். அந்தப் பிரச்னைக்கு `ப்ரெஸ்பயோபியா' (Presbyopia) என்று பெயர். `சாளேஸ்வரம்' என்று சொல்லப்படுகிற அதே பிரச்னைதான் இது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கத்தில் உள்ள காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரியும். அதுவே, தூர வைத்துப் பார்க்கும்போது பார்வை தெளிவாக இருக்கும். நடுத்தர வயதைத் தொடும்போது நம் கண்களில் உள்ள லென்ஸானது தடிமனாகிவிடும். அதன்பிறகு அதனால் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு தெளிவான பார்வைக்கு ப்ளஸ் பவர் உள்ள கண்ணாடிகள் தேவைப்படும். இந்த ப்ளஸ் பவரானது, 60 வயது வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப கண்ணாடியை மாற்றினால் பார்வை தெளிவாக இருக்கும்.

மாதவிடாயின்போது உடற்பயிற்சிகள் செய்யலாமா என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தது. சிலருக்கு இந்த நாள்களில் ...
03/02/2026

மாதவிடாயின்போது உடற்பயிற்சிகள் செய்யலாமா என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தது. சிலருக்கு இந்த நாள்களில் பயிற்சி செய்வதால் வலி குறைவதாக உணரலாம். உடற்பயிற்சியின்போது ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராகப் பரவுவதாலும், மனநலம் மேம்படுவதாலும் வலி குறையும். சிலருக்கு பீரியட்ஸ் நாள்களில் ஓய்வு அவசியப்படலாம். அதற்காக படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு செய்கிற வேலைகள் வலியை அதிகரிக்கலாம் என்பதால் அப்படிப்பட்ட வேலைகளைத் தவிர்க்கலாம். ளவோடு செய்யப்படுகிற உடற்பயிற்சியால் வலி ஓரளவுக்கு குறையும்.

03/02/2026

🎗️ உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4 🎗️
இன்று ஒரு எளிய பரிசோதனை… நாளை உங்கள் உயிரைக் காப்பாற்றலாம்!
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,
வடமலையான் மருத்துவமனை சார்பில்
சிறப்பு தடுப்பு சுகாதார பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
📅 தேதி: பிப்ரவரி 4 முதல் 11 வரை (ஞாயிறு தவிர)
💰 சிறப்பு கட்டணம்: வெறும் ₹750/- மட்டும்*
🩺 பரிசோதனை பேக்கேஜில் அடங்கியவை:
✅ மேமோகிராம் (Mammogram)
✅ பேப் ஸ்மியர் (Pap Smear)
✅ நிபுணர் மருத்துவர் ஆலோசனை
🎁 கூடுதல் சிறப்பு சலுகைகள்:
✨ PET CT & வயிற்று ஸ்கேன் பரிசோதனைகளுக்கு 25% தள்ளுபடி
✨ அனைத்து முழு உடல் பரிசோதனை பேக்கேஜ்களுக்கும் 25% தள்ளுபடி
👉 ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்களை காப்பாற்றும்!
பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த பரிசோதனை திட்டத்தை தவற விடாதீர்கள்.
📞 முன்பதிவிற்கு:
📍 மதுரை – 95665 91238
📍 திண்டுக்கல் – 73970 11222
இன்றே உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
* நிபந்தனைகள் பொருந்தும்
🌐 மேலும் தகவலுக்கு: www.vadamalayanhospitals.com
#உலகபுற்றுநோய்தினம் #புற்றுநோய்விழிப்புணர்வு #தடுப்புமருத்துவம் #சுகாதாரபரிசோதனை
#வடமலையான்_மருத்துவமனை #ஆரம்பகண்டறிதல் #பெண்கள்ஆரோக்கியம்
#ஆரோக்கியம்முதலாவது #மதுரை #திண்டுக்கல்

Vadamalayan Hospitals – Serving South Tamil Nadu since the 1930s. A trusted super speciality hospital with an integrated cancer center, advanced cardiac care, and 24/7 emergency services in Madurai & Dindigul. Ethical, compassionate, patient-first care.

Address

15/1, Jawahar Road, Chokkikulam
Madurai
625002

Alerts

Be the first to know and let us send you an email when Vadamalayan Hospitals, Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vadamalayan Hospitals, Madurai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

VADAMALAYAN - CELEBRATING THE VIVACITY OF LIFE!

Vadamalayan Hospitals Pvt Ltd is the No.1 Multi-Specialty Hospital in Madurai today. It was founded by Dr.P.Vadamalayan – the visionary medical professional - who practiced ‘evidence-based medicine’ to provide ethical, timely and effective treatment to the ailing population. His indomitable spirit, indefatigable industry and child-like enthusiasm coupled with the burning desire to be of service to the people, rooted firmly on the pristine foundation of selflessness, saw him establishing Vadamalayan Hospitals in the early 1950s, initially in the form of a 10-bedded clinic, yet with modern equipment like 300 MA-Xray machine which were totally unknown then to the people of Madurai – the temple town. The seed that Dr.Vadamalayan had sown today has grown into a matchless 265-bedded multi-specialty hospital in terms of infrastructure, facilities, medical expertise and healthcare services. The hospital is manned by about 100 doctors drawn from varied medical streams and in their tasks they’re assisted by over 1000 support staff, including paramedic and administrative personnel. The hospital believes in CME initiatives to keep abreast of the revolutionary changes sweeping across the medical world. It’s the aspiration of Vadamalayan to emerge as the Hospital of Choice by providing high quality healthcare services to all sections of the society. In sync with its vision, Vadamalayan is also committed to the mission of delivering compassionate and patient-centered care consistent with the outlook and philosophy of ‘evidence-based medicine.’