03/08/2025
#ஜோதிட தகவல்
குருவே நமக ஓம் கணபதியே நமக..!
அனைவருக்கும் வணக்கம்
இன்றைய ஜோதிட தகவல் பதிவில் எனது சிவா கார்த்திக் அஸ்ட்ரோலஜி என்கின்ற பக்கத்தில் பதிவுகள் போட்டு மிகவும் வெகு நாட்கள் ஆகின்றது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு புதிய பதிவு வாழ்க்கை எதை நோக்கி போனாலும் பகுதி சுவாசம் ஜோதிடமாக கொண்ட எனக்கு
ஜோதிடத்தின் மேல் ஒரு சில மதிப்பும் மரியாதையும் அக்கறையும் ஜோதிடத்தை மிகவும் கவனமாக பத்திரமாக கையாள வேண்டும் என்கின்ற அக்கரையும் பிரபஞ்சத்தின் வாயிலாக சில உணர்வுகள் உணர்த்தப்பட்டு கொண்டே இருக்கின்றது.,
மனிதனின் மூளை அனைத்தையும் எதிர்கொள்ளும் தன்மை உடையது இன்றைய ஏ ஐ டெக்னாலஜி அனைத்தையும் உருவாக்கியது மனிதனின் மூளை
மனிதனால் உலகில் முடியாதது எதுவும் இல்லை அதற்கு காரணம் கடவுள் மனிதனுக்கு கொடுத்த ஆற்றல் அவரின் சிந்திக்கும் திறன்
ஆனால் ஜோதிடம் என்கின்ற இந்த மிகப்பெரிய தெய்வீக கலை மனிதன் மூளைக்கு எட்டாத ஒரு அபரிவிதமான தெய்வீக கலை
எவ்வளவுதான் மூளை சிந்தித்தாலும் நேரடியாக கடவுளின் அனுகிரகம் விழாமல் இதில் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று
இதில் பொறுமை மற்றும் விட்டுப் பிடிக்கும் தன்மை மிகவும் அவசியம் ஜோதிடத்தில் பலன்கள் கோடிக்கணக்கில் கொட்டி கிடக்கின்றது இந்த பிரபஞ்சத்தில் ஒரு மனிதனைப் போல் ஒரு மனிதன் பிறப்பதில்லை என்பது எவ்வளவு சாத்தியமோ தனி ஒரு மனிதனின் ஜாதகத்தை அதில் உள்ள பலாபலன்களை மனதில் தெக்கி வைத்தோ அல்லது மூளையில் தேக்கி வைத்தோ மற்றொரு ஜாதகத்திற்கு சிக்சாக்காக பலன் சொல்லவே முடியாது.,
அப்படி சொன்னால் இந்த பிரபஞ்சம் உங்களை கண்டிப்பாக ஏமாற்றி விடும்
ராசியின் அடிப்படையில் பலன் எடுக்கும் பொழுது அந்த ராசி விழுந்த நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்
லக்ன அடிப்படையில் பலனெடுக்கும் பொழுது லக்னம் விழுந்த நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்
கிரகங்களின் அடிப்படையில் பலனெடுக்கும் பொழுது அந்த கிரகம் நின்ற நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்
அனைத்தையும் லக்னசந்தி ராசி சந்தி கிரக சந்தி என்று சொல்லிக்கொண்டு ஜோதிடரும் சந்தியில் இருக்க வேண்டியதுதான் வாடிக்கையாளரும் சந்தையில் நிற்க வேண்டியது தான்.
இவ்வுலகில் இந்த பிரபஞ்சத்தில் ஒரே லக்னத்தில் ஒரே ராசியில் ஏதோ ஒரு வெவ்வேறு மூலையில் வெவ்வேறு தேசத்தில் மனித பிறப்புகள் பிறந்து கொண்டே தான் இருக்கின்றன ஆனால் அவை அனைத்தும் ஒரு சேர இருப்பது இல்லை
ஜோதிடம் என்பது ஒளி சம்பந்தப்பட்டது ஆனால் நாம் கற்றறிந்த ஒளி ஒலி ஆகியவற்றை நம்மால் பார்க்கவும் கேட்கவும் முடியும்
ஆனால் இந்த ஜோதிடம் என்னும் ஒளியை நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியாது
இருப்பினும் அந்த ஒளியை பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் பலன் சொல்வதற்கு கண்டிப்பாக இறைவனின் கருணை மிகவும் அவசியம்
இங்கு தான் எவ்வளவு பெரிய ஜோதிடராக இருந்தாலும் தன் குடும்பத்தில் நடக்கப் போகும் நிகழ்வை நம்மால் கணிக்க முடியுமே தவிர அதை தடுக்கவும் மாற்றவும் முடியாது
இந்த பூவுலகில் மனிதர்கள் கஷ்டப்படுவதற்காகவே 99 சதவீதம் பிறக்கின்றார்கள் மற்றும் இறப்பதற்காகவே பிறக்கின்றார்கள் .
இதில் சந்தோஷம் விளம்பர இடைவேளை போல எப்போதெல்லாம் வரப்போகின்றது நாம் வாழப்போகும் இந்த 60 -70 வருடங்களில் என்பதை தான் பார்க்க வேண்டியிருக்கிறது இதுதான் ஜோதிடம்.
பக்கத்து வீட்டுக்காரன் வாங்கின கடனை உங்களால் எப்படி அடைக்க முடியாதோ அதேபோல் உங்களின் கர்மாவை உங்களுக்கு பிறந்தவரால் கூட அடைக்க முடியாது
மீண்டும் பிறந்து தான் அடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்
ஜோதிடர்கள் சாதாரண மனிதர்கள் தான் இந்த பூமியில் கடவுளே பிறந்தாலும் காலில் முள் குத்தினால் ரத்தம் வந்தே தீரும்
ஜோதிடம் என்பது இப்பொழுது கார்பரேட் கம்பெனி போல் ஆகிவிட்டது இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஜோதிட ஆற்றலை இப்பொழுது திரும்பி கொண்டு வர வேண்டும் என்றால் பலன் தவறினால் குறித்த நேரத்தில் நடக்கவில்லை என்றாலும் பணம் திருப்பி கொடுக்கப்படும் என்ற நிலை அனைத்து ஜோதிடர்களுக்கும் வருமே ஆனால் நூறு வருடங்களுக்குள் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஜோதிட பேராற்றல் கண்டிப்பாக வந்து விடும்.
இதை நான் பிரபஞ்சத்திடம் கோரிக்கையாக வைக்கின்றேன்.
இன்று முதல் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் பலன் நடக்கவில்லை என்றால் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எண்ணில் இருந்து ஆரம்பம் ஆகட்டும்.
அனைவரும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட எல்லாம் வல்ல சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்
Sivakarthik Vedic astrology
077087 84497