Sivakrthik-Astrology

Sivakrthik-Astrology astrological information astrological exchange personal and horoscope benefit.

03/08/2025

#ஜோதிட தகவல்
குருவே நமக ஓம் கணபதியே நமக..!

அனைவருக்கும் வணக்கம்
இன்றைய ஜோதிட தகவல் பதிவில் எனது சிவா கார்த்திக் அஸ்ட்ரோலஜி என்கின்ற பக்கத்தில் பதிவுகள் போட்டு மிகவும் வெகு நாட்கள் ஆகின்றது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு புதிய பதிவு வாழ்க்கை எதை நோக்கி போனாலும் பகுதி சுவாசம் ஜோதிடமாக கொண்ட எனக்கு
ஜோதிடத்தின் மேல் ஒரு சில மதிப்பும் மரியாதையும் அக்கறையும் ஜோதிடத்தை மிகவும் கவனமாக பத்திரமாக கையாள வேண்டும் என்கின்ற அக்கரையும் பிரபஞ்சத்தின் வாயிலாக சில உணர்வுகள் உணர்த்தப்பட்டு கொண்டே இருக்கின்றது.,

மனிதனின் மூளை அனைத்தையும் எதிர்கொள்ளும் தன்மை உடையது இன்றைய ஏ ஐ டெக்னாலஜி அனைத்தையும் உருவாக்கியது மனிதனின் மூளை

மனிதனால் உலகில் முடியாதது எதுவும் இல்லை அதற்கு காரணம் கடவுள் மனிதனுக்கு கொடுத்த ஆற்றல் அவரின் சிந்திக்கும் திறன்

ஆனால் ஜோதிடம் என்கின்ற இந்த மிகப்பெரிய தெய்வீக கலை மனிதன் மூளைக்கு எட்டாத ஒரு அபரிவிதமான தெய்வீக கலை

எவ்வளவுதான் மூளை சிந்தித்தாலும் நேரடியாக கடவுளின் அனுகிரகம் விழாமல் இதில் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று

இதில் பொறுமை மற்றும் விட்டுப் பிடிக்கும் தன்மை மிகவும் அவசியம் ஜோதிடத்தில் பலன்கள் கோடிக்கணக்கில் கொட்டி கிடக்கின்றது இந்த பிரபஞ்சத்தில் ஒரு மனிதனைப் போல் ஒரு மனிதன் பிறப்பதில்லை என்பது எவ்வளவு சாத்தியமோ தனி ஒரு மனிதனின் ஜாதகத்தை அதில் உள்ள பலாபலன்களை மனதில் தெக்கி வைத்தோ அல்லது மூளையில் தேக்கி வைத்தோ மற்றொரு ஜாதகத்திற்கு சிக்சாக்காக பலன் சொல்லவே முடியாது.,

அப்படி சொன்னால் இந்த பிரபஞ்சம் உங்களை கண்டிப்பாக ஏமாற்றி விடும்

ராசியின் அடிப்படையில் பலன் எடுக்கும் பொழுது அந்த ராசி விழுந்த நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்

லக்ன அடிப்படையில் பலனெடுக்கும் பொழுது லக்னம் விழுந்த நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்

கிரகங்களின் அடிப்படையில் பலனெடுக்கும் பொழுது அந்த கிரகம் நின்ற நட்சத்திர பாகை உங்களை ஏமாற்றும்

அனைத்தையும் லக்னசந்தி ராசி சந்தி கிரக சந்தி என்று சொல்லிக்கொண்டு ஜோதிடரும் சந்தியில் இருக்க வேண்டியதுதான் வாடிக்கையாளரும் சந்தையில் நிற்க வேண்டியது தான்.

இவ்வுலகில் இந்த பிரபஞ்சத்தில் ஒரே லக்னத்தில் ஒரே ராசியில் ஏதோ ஒரு வெவ்வேறு மூலையில் வெவ்வேறு தேசத்தில் மனித பிறப்புகள் பிறந்து கொண்டே தான் இருக்கின்றன ஆனால் அவை அனைத்தும் ஒரு சேர இருப்பது இல்லை

ஜோதிடம் என்பது ஒளி சம்பந்தப்பட்டது ஆனால் நாம் கற்றறிந்த ஒளி ஒலி ஆகியவற்றை நம்மால் பார்க்கவும் கேட்கவும் முடியும்

ஆனால் இந்த ஜோதிடம் என்னும் ஒளியை நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியாது

இருப்பினும் அந்த ஒளியை பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் பலன் சொல்வதற்கு கண்டிப்பாக இறைவனின் கருணை மிகவும் அவசியம்

இங்கு தான் எவ்வளவு பெரிய ஜோதிடராக இருந்தாலும் தன் குடும்பத்தில் நடக்கப் போகும் நிகழ்வை நம்மால் கணிக்க முடியுமே தவிர அதை தடுக்கவும் மாற்றவும் முடியாது

இந்த பூவுலகில் மனிதர்கள் கஷ்டப்படுவதற்காகவே 99 சதவீதம் பிறக்கின்றார்கள் மற்றும் இறப்பதற்காகவே பிறக்கின்றார்கள் .

இதில் சந்தோஷம் விளம்பர இடைவேளை போல எப்போதெல்லாம் வரப்போகின்றது நாம் வாழப்போகும் இந்த 60 -70 வருடங்களில் என்பதை தான் பார்க்க வேண்டியிருக்கிறது இதுதான் ஜோதிடம்.

பக்கத்து வீட்டுக்காரன் வாங்கின கடனை உங்களால் எப்படி அடைக்க முடியாதோ அதேபோல் உங்களின் கர்மாவை உங்களுக்கு பிறந்தவரால் கூட அடைக்க முடியாது

மீண்டும் பிறந்து தான் அடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்

ஜோதிடர்கள் சாதாரண மனிதர்கள் தான் இந்த பூமியில் கடவுளே பிறந்தாலும் காலில் முள் குத்தினால் ரத்தம் வந்தே தீரும்

ஜோதிடம் என்பது இப்பொழுது கார்பரேட் கம்பெனி போல் ஆகிவிட்டது இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஜோதிட ஆற்றலை இப்பொழுது திரும்பி கொண்டு வர வேண்டும் என்றால் பலன் தவறினால் குறித்த நேரத்தில் நடக்கவில்லை என்றாலும் பணம் திருப்பி கொடுக்கப்படும் என்ற நிலை அனைத்து ஜோதிடர்களுக்கும் வருமே ஆனால் நூறு வருடங்களுக்குள் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஜோதிட பேராற்றல் கண்டிப்பாக வந்து விடும்.

இதை நான் பிரபஞ்சத்திடம் கோரிக்கையாக வைக்கின்றேன்.

இன்று முதல் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கு குறித்த நேரத்தில் பலன் நடக்கவில்லை என்றால் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எண்ணில் இருந்து ஆரம்பம் ஆகட்டும்.

அனைவரும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட எல்லாம் வல்ல சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்
Sivakarthik Vedic astrology
077087 84497

14/02/2025

#ஜோதிட தகவல்..

#பரிகாரத்தை பற்றி புரிதல்கள் பலருக்கு குறைவாக இருக்கின்றதோ என்று தோன்றுகிறது

ஜோதிடர் என்பவர் உங்களைப் போன்று ஒரு சராசரி மனிதர் தான் அவர் ஒன்றும் உங்களை படைத்தவர் அல்ல

உங்களை படைத்தவர் சொல்லும் பரிகாரம் மட்டுமே உங்களுக்கு கை கொடுக்கும் அதையும் பிரார்த்தம் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும்

படைத்தவன் படைத்த ஒருவரால் பரிகாரம் சொல்லவே முடியாது கிரக காரகத்துவத்தை வைத்து பரிகாரம் சொல்லி ஒரு சில ஜோதிடர்கள் வயிற்றுப் பிழைக்க வேண்டுமானால் சரணம் பாடலாம்

கிரகங்கள் இங்கே சாமானியர்கள் வசம் ஒருபோதும் அடிபணிவதில்லை

Sivakrthik-Astrology

077087 84497

26/01/2025

#ஜோதிட தகவல்..

#கேள்வி

ஒரு கிரகம் நீச்சமாகி வக்கிரமாகும் பொழுது உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

#பதில்

முடியாது முதலில் நீச்சம் என்பதை இரண்டு வகைகளாக பிரிக்க வேண்டும் சனி செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் நீச்சம் அடையும் பொழுது கிடைக்கின்ற ஒரு வித நன்மை சுப கிரகங்களான குரு சுக்கிரன் நீச்சம் அடையும் பொழுது கிடைப்பதில்லை .,

பாவ கிரகங்களான சனி செவ்வாய் நீச்சமடைந்து சுப கிரகங்களால் சுபத்துவ படுத்தப்படும் பொழுது இந்தப் பாவ கிரகங்கள் தனது முழுமையான கொடூர குணத்தை மாற்றி சுப கிரகங்களுக்கு இணையாக நல்ல பலனை வழங்குகின்றது.,

அடுத்தபடியாக சுப கிரகங்களான குரு சுக்கிரன் நீச்சமடைந்து பாவ கிரகங்களால் மேலும் பாவத்துவப்படுத்தப்படும் பொழுது அசுப கிரகங்களுக்கு நிகரான கெடுபயன்களை கொடுப்பதற்கு தயங்குவது இல்லை.,

அடுத்தபடியாக #வக்ரம் கிரகங்களின் ஒட்டுமொத்த கதிர்வீச்சுகள் ஒரு மனிதனை ஆட்கொள்கின்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கிரகங்கள் வக்கிரமே அடைய கூடாது என்பதுதான் உண்மையும் கூட

'ஆனால் மிகப் பெரிய ஆளுமையும் மிகப்பெரிய அபரிவிதமான ஈர்ப்பு சக்தியை கொண்ட சூரியன் தன்னை சுற்றும் மிதவை கிரகங்களை தனது சுற்றுப்பாதைக்குள் நுழையும் பொழுது மிகவும் ஆக்ரோஷமாக இழுக்க தொடங்குகிறது இதனாலே மற்ற கிரகங்கள் ஸ்தம்பித்து போய் வக்ர நிலைக்கு தள்ளப்படுகின்றது வக்கிரத்தை பற்றி மேலும் சுவாஸ் சுவாரஸ்யமான சில புரிதல்கள் என்னிடம் இருக்கின்றது அதை வீடியோ வழியாக கண்டிப்பாக வழங்க இருக்கின்றேன் .!

கிரகங்கள் வக்ரம் என்றால் வக்கிரம் தான் வக்ரம் போன்று மாயத் தோற்றம் இன்று சிலர் சொல்கிறார்கள் அது முற்றிலும் அவர்களுக்கு வக்கிரத்தை பற்றி புரிதல்கள் வரவில்லை என்று தான் அர்த்தம்.

வக்ரம் என்பது கிரகங்களின் ஒருவித பலவீனம் வக்கிரம் பெற்ற கிரகம் எப்படி செயல்படுகின்றது என்றால் ஒரு மனிதன் தனது ஒரு நாள் இயல்பு வாழ்க்கையையே போராடி வாழ்கிறான் என்பதற்கு சமம்.

நீச்சம் 25 சதவீதம் பலவீனம் வக்கிரம் 25 சதவீதம் பலவீனம்
ஏன் நீச்சத்திற்கும் 25 சதவீதம் கொடுத்து இருக்கின்றேன் என்றால் நீச்சமான கிரகம் ஒன்றும் செத்துப் போய் விடுவதில்லை.
Sivakrthik-Astrology

077087 84497

24/01/2025

#ஜோதிட தகவல்..

குருவே நமக ஓம் கம் கணபதியே நமக.!

#சந்திரனின் சூட்சமங்கள்..

ஜோதிடம் என்று எடுத்துக் கொண்டாலே சந்திரனுக்கு முதன்மை அமைப்பு கொடுத்து விட வேண்டும் ஆம் சந்திரன் இல்லையேல் இந்த பூமி இல்லை இந்த பூமி இல்லை என்றால் ஜோதிடத்தையும் சேர்த்து எதுவுமே இல்லை

சந்திரனுக்கு மட்டும் ஜோதிடத்தில் 120 க்கு 120 ஆற்றல் பங்கு கொடுத்தே தீர வேண்டும் ஆம் இது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த தசா புத்தி காலங்களாகும்

(கிரகங்களின் கலப்பு ஒலிகளை நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு வகையில் வெவ்வேறு விதமாக செயல்பட வைப்பது இந்த சந்திரன் மட்டுமே தயவு செய்து இந்த வரியை மட்டும் இன்னொரு முறை படித்து பாருங்கள் இது மிகப்பெரிய விஷயம். )

உங்கள் ஆத்மாவை பார்க்கவோ உணரவோ எப்படி முடியாதோ இதே போன்று தான் இறைவனை பார்க்கவோ உணரவோ முடியாது மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு அவரது ஆத்மாவோடு மட்டுமே தொடர்பு படுத்தப்பட்டுள்ளது

மற்றபடி நாம் அனைவரும் சராசரி மனிதனாக வாழ்வை இயக்குவதற்கு கிரகங்களே துணை புரிகிறது கிரகங்களே நம்மை இயக்குகின்றது கிரகங்கள் என்று சொல்வது நான் ஒட்டுமொத்த கிரகங்களையும் அதாவது ஒன்பது கிரகங்களையும் சொல்கின்றேன் இந்த ஒன்பது கிரகங்களும் தன்னிச்சையாக ஒரு மனிதனை இயக்கி விட முடியாது இந்த ஒன்பது கிரகங்களும் சந்திரனின் வழியாக நம்மை இயக்குகின்றது இது மிகப்பெரிய விஷயம் இதிலிருந்தே தெரியும் ஜோதிடத்தில் சந்திரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றது என்று.

முதலில் பரிகாரம் என்ற ஒன்று இங்கு கிடையவே கிடையாது என்பதை நான் இந்த இடத்தில் அணி தரமாக பதிவு செய்து கொள்கின்றேன்.

கிரகங்கள் நமக்கு என்ன கொடுக்க இருக்கின்றதோ அதை கொடுத்தே தீரும் எதை கெடுக்க நினைக்கின்றதோ அதைக் கெடுத்தே தீரும் எதை தடுக்க நினைக்கின்றதோ அதை தடுத்தே தீரும் இது முற்றிலும் மாறாத விதி.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் கர்மாவின் அடிப்படையில் கிரகங்கள் கொடுப்பதை கொடுத்தே தீரும் கிரகங்கள் பரிகாரம் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவது கிடையாது.

இறைவனால் இந்த பிரபஞ்சத்தை இயக்குவதற்கு உறுதுணை புரியும் கிரகங்கள் தனது கடமைகளை 100% சரியாக செய்து முடிக்கும் இதில் பரிகாரத்திற்கு வேலையே இல்லை.

இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டால் நான் மீண்டும் சந்திரனுக்கே வந்து விடுவேன்

விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று ஆம்

இந்த ஒட்டுமொத்த கிரகங்களின் தாக்கத்தை பரிகாரம் செய்து தக்க வைத்துக் கொள்வதை விட மனோ காரகனான சந்திரனின் 100% ஆளுமையில் இருக்கக்கூடிய நம் மனதை கட்டுப்படுத்துவது மிக சிறந்த பரிகாரம் வேறொரு எந்த பரிகாரமும் நமக்கு கை கொடுக்கப் போவதில்லை.

தவறு என்று மனம் சொல்லியும் அதை செய்வது ஆபத்து என்று மனம் சொல்லியும் அதை செய்வது
இந்த இரண்டு விஷயத்திலும் மனதை கட்டுப்படுத்தினால் இதுவே அனைவருக்கும் மிகப்பெரிய பரிகாரம் வாழ்நாள் பரிகாரம்.

மிகவும் சிம்பிளாக சொல்லப்போனால் விதியை மதி வென்று உயிர் கொடுத்தது மதியை விதிவென்று உயிர் பிரித்தது மனிதனின் பிறப்பு இறப்பு இதற்குள்ளே அடங்கிவிட்டது.

மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தில் தொடர்வோம்
அனைவரும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட எல்லாம் வல்ல சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.!
Sivakrthik-Astrology

077087 84497

 #ஜோதிட தகவல் சூரியன் ஆறு மற்றும் எட்டுக்கு அதிபதிகளாகி லக்ன பாகங்களுக்கு ஆறாம் பாவகம் மற்றும் எட்டாம் பாகம் தொடர்புகளை ...
20/09/2024

#ஜோதிட தகவல்

சூரியன் ஆறு மற்றும் எட்டுக்கு அதிபதிகளாகி லக்ன பாகங்களுக்கு ஆறாம் பாவகம் மற்றும் எட்டாம் பாகம் தொடர்புகளை பெற்று எந்த நிலையிலும் எந்த லக்னத்திற்கும் ஆறாம் பாகம் எட்டாம் பாவகம் தொடர்புகளை சுபத்துவமாக பெரும்பொழுது,

"அரசு மற்றும் அரசியல் சார்ந்த துறைகளில் வெளியில் பெருமையாக காலரை தூக்கிக்கொண்டு சொல்ல முடியாத அளவில் வருமானம் வரும்.

சுபத்துவ சனியின் தொடர்பில் வரும் வருமானம்.
வெளியில் எந்த அளவுக்கு சொல்ல முடியாத அளவில் இருக்குமோ இதே அளவில் மேற் சொன்ன முதன்மை கிரகமான சூரியனின் அமைப்புகளும் இருக்கும்.

உதாரணமாக மகர லக்னத்திற்கு சூரியன் அஷ்டமாதிபதியாகி ஆறாம் இடத்தில் குருவின் பார்வையில் சிம்மமும் சூரியனும் கும்பத்தில் இருக்கும் குருவால் பார்க்கப்படும் பொழுது மேற் சொன்ன இந்த அமைப்பு உறுதியாக இருக்கும்.

குறிப்பு:லக்னம் மற்றும் லக்னாதிபதி கூடுதலாக தசா புத்தி அமைப்புகளை பொறுத்து.
sivakarthik astrology 077087 84497

21/05/2024

தனிப்பட்ட நபரின் ஜாதகத்தை பாடலாக எழுதினார் புலிப்பாணி அன்று தனிப்பட்ட நபரின் ஜாதகத்தை கட்டமாக போட்டு விளக்குகின்றோம் இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஜோதிடராக இருக்கும் நாம்.

21/05/2024

30 -40, வருட அனுபவம் இருந்தாலும் ஜோதிடத்திற்கு அது குழந்தை பருவம் தான்

14/05/2024

எட்டாம் இடத்தை குரு பார்க்க திருமணமான தம்பதியர்களுக்கு வெளிமாநிலம் வெளிநாடு உல்லாசமாக செல்லும் பொழுது குழந்தை கருத்தரிக்கும்

08/05/2024

#ஜோதிட தகவல்..

#ஜோதிடத்தில் கோச்சார பலன் தேவை தானா?

கண்டிப்பாக தேவை தசா புத்தியின் அடிப்படையில் தான் பலன்கள் ஒளிந்து இருக்கின்றது என்றாலும் அந்த தசாபுத்தி பலன்கள் ஜாதகருக்கு முழுமையாக கிடைப்பது கோச்சாரத்தின் வழியாகத்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

"ஜோதிடத்தில் இதுதான் உண்மை மற்றவை எல்லாம் பொய் என்று எதுவுமே இல்லை.

"கிரகப் பயிற்சியிலும் இந்த உண்மைகள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றது.,

லக்னாதிபதி வலுவிழந்தும் லக்னத்திற்கு பங்கம் ஏற்படும் அவயோக தசா புத்திகள் நடைமுறையில் இருக்கும் பொழுது ராசியை கோச்சாரத்தில் குரு பார்க்கும் நிலையில் ஜாதகர் மிகப்பெரிய பேரிடரை எதிர் கொள்ள மாட்டார்.

"இதைத்தான் போர் வீரனுக்கு கவச உடையை போல் குரு தனது பார்வையால் பாதுகாக்கிறார் என்பதற்கான பொருள்.

விதிகெட்டால்
மதியை பார்த்து பலன் சொல் என்பது இதற்குள்ளே தான் ஒளிந்து இருக்கின்றது

குருவின் பார்வை விலகிய மறுகணமே விதியானது தனது வேலையை சிறப்பாக செய்து முடிக்கும்

"குறுகிய காலபலன் சொல்லும் பொழுது கோச்சாரம் மிகவும் அவசியமான ஒன்றாகும் .

"இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ஒரு ஆதிபத்தியத்தோடு மட்டுமே அதிக தொடர்பை பெறும் நிலையில் அந்த ஆதிபத்திய பலனை 75% செய்யும் என்று படித்திருப்பீர்கள் மீதம் 25 சதவீதம் மறு அதிபத்திய பலனை எப்பொழுது செய்யும் தசையின் முற்பகுதி செய்யுமா பிற்பகுதி செய்யுமா மத்தியில் செய்யுமா என்று கேட்டால் இங்கு அதிகபட்சம் பலரிடம் இதற்கு பதில் இருக்காது

"இதற்குத்தான் நீங்கள் கோச்சாரத்தை எடுத்து பலன் சொல்ல வேண்டும் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கோச்சாரத்தில் எந்த ஆதிபத்தியத்தோடு தொடர்பு பெறுகின்றதோ அதன் தசை மற்றும் புத்தியில் அந்த ஆதிபத்திய பலனையே செய்யும்.

"தசா புத்தி மற்றும் கோச்சாரம் இரண்டுமே நிகருக்கு நிகரான ஒன்றாகும் இன்றைய கோச்சாரமே எதிர்கால தசா புத்தியை நிர்ணயம் செய்கின்றது.

பிறக்கும் பொழுது பிறக்கக் கூடாத நேரத்தில் பிறந்து விட்டாள் எந்த கடவுள் பெயரை உங்கள் பெயராக வைத்தாலும் மற்றும் எந்த என் நம்பர் அடிப்படையிலும் நட்சத்திர அடிப்படையிலும் பெயர் வைத்துக் கொண்டாலும் நம்மால் எதையுமே மாற்ற முடியாது.

அனைவரும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட எல்லாம் வல்ல சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் 🙏

sivakarthik- vedic- astrologer

077087 84497

27/04/2024

நம் முன்னோர்கள் முன்னரே அறிந்த ஒரு விஷயம் தான் மேற்கு நாடுகளில் அவர்கள் கண்டுபிடித்தது போல் வேறு பெயரிட்டு நமக்கே திரும்பி வந்து இருக்கின்றது., ஆங்கிலத்தில் ஹவர் என்று சொல்லப்படும் ஒரு மணி நேரம் என்கின்ற கால அளவு தமிழில் ஹோரை என்றும் சமஸ்கிருதத்தில் ஹோரா என்றும் சொல்லப்படுவதும், "இந்த ஜோதிட சொல் தான்.

தான் கண்டுபிடித்ததை பதிவு செய்ய தவறியதால் இந்திய சமுதாயம் இழந்த பெருமைகள் ஏராளம் அவற்றில் முதன்மையானது நமது இந்திய பாரம்பரிய ஜோதிடம்.

 #குரோதி வருடம் தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி ராசிபலன் தொடர்ச்சி..🌸துலாம் ராசியில் இருந்து மீன ராசி வரை தொடர்க...
14/04/2024

#குரோதி வருடம் தமிழ் புத்தாண்டு மற்றும் குரு பெயர்ச்சி ராசிபலன் தொடர்ச்சி..

🌸துலாம் ராசியில் இருந்து மீன ராசி வரை தொடர்கின்றது

#துலாம் ராசி

நேர்மையும் பண்பான அணுகுமுறையும் உடைய துலாம் ராசி நேயர்களே ஆணுக்கு நிகரான சாதனைகள் புரியக்கூடிய வலிமையான துலாம் ராசி தாய்மார்களே இந்த வருடம் உங்களுக்கு மிகவும் அற்புதமான வருடம் ஆக அமையும் கடந்த ஒரு வருடமாக ராசியை குரு பார்த்து வந்த நிலையில் நீங்கள் நன்றாக தான் இருந்தீர்கள் ஆனால் மூன்று ஆறுக்கு அதிபதியான குரு பகவான் உங்களை மேலும் நேர்மை நேர்மை என்று சொல்லி கடன்களை சுமத்தி இருப்பார் தொழில் மற்றும் குடும்ப வளர்ச்சிக்காக வாங்கிய கடன்கள் அனைத்தும் சுலபமாக அடையும் வருடமாக இந்த வருடம் இருக்கும் உங்களிடம் கடன் வாங்கியவர்கள் ஒரு வருடமாக டிமிக்கி கொடுத்து வந்தவர்கள் அனைவரும் தானாக கடனை திருப்பி கொடுப்பார்கள் வெளிநாடு மற்றும் பங்கு சந்தைகள் மூலம் ஆதாயம் உண்டு.

#விருச்சக ராசி

மேஷ ராசியை போன்று கோபத்தை வெளிப்படையாக காட்டத் தெரியாத அன்பர்களே சுய கவுரவத்திற்காக தங்களையே வருத்திக் கொள்ளவும் தயக்கம் காட்டாத விருச்சக ராசி நேயர்களே தாயை முதன்மையாக முதன்மை தெய்வமாக வணங்குவதை கடமையாக கருதும் நண்பர்களே

பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்கள் ஜான் ஏறினால் முழம் சருக்குகின்றது என்பதை போன்றுதான் இருந்து வருகிறீர்கள் வீடு கட்டி அப்படியே நிற்கின்றது. வீட்டில் லோன் நிலுவையில் நிற்கின்றது இதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் வருடம் தொடங்கிய மூன்று மாதத்திற்கு பிறகு சர சரவென்று உங்களுக்கு சாதகமாக அமையும் 30 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமணம் கைகூடும். வேலை மாற்றம் ஏற்படும் உடல் ஆரோக்கியம் சீராகும் .

#தனுசு ராசி

குறைந்த வயதிலேயே நிறைந்த பக்குவங்களை அடையக்கூடிய தனுசு ராசி நேயர்களே என் நிலையிலும் தன்னிலையை விட்டுக் கொடுக்காத தைரியமான்களே மரியாதை கொடுப்பவர்களிடம் மட்டுமே நட்பை தொடர்பவர்கள்ளே,.

'கடந்த சில வருடமாக தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் வாழ்க்கை துணை அமைப்பிலும் துணையைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பிலும் பிடிவாதமாக இருந்தீர்கள் இந்த அமைப்புகள் அனைத்தும் மாறி தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள தொடங்குவீர்கள் உங்களுக்கு தகுதியானவரை தீர்க்கமாக தேர்வு செய்வீர்கள் நகைகளை வாங்கி சேமிக்க தொடங்குவீர்கள் மனதார தானம் தர்மம் செய்வீர்கள் சொகுசான வீட்டு உபயோகப் பொருட்கள் அதிகம் வாங்குவீர்கள் தகப்பனார் வழியில் ஆதாயம் உண்டு அரசு வேலை அமையும்.

#மகர ராசி

தொழில் யுத்திகளை கையாள தெரிந்த மகர ராசி நேயர்களே சில வருடங்கள் வேலை செய்து அந்த வேலையவே தொழிலாக மாற்றும் வல்லமை படைத்த அன்பர்களே உங்களின் ஜென்ம சனி தாக்கத்திலிருந்து இன்னும் நீங்கள் விடுபடவில்லை வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போவதற்கு பொருளாதாரம் முட்டுக்கட்டையாக நிற்கின்றது

இந்த அமைப்புகள் அனைத்தும் இந்த ஆண்டின் பிற்பகுதி மாறும் சில நிலைகளில் அப்படியே இந்த ஆண்டின் பிற்பகுதி தர்மகர்மாதிபதி யோகம் செயல்பட ஆரம்பித்து வேலை தொழில் திருமணம் போன்ற அமைப்புகள் கைகூடிவரும் .

#கும்ப ராசி

எதிலும் நிதானமாக எதிர் கருத்துகளை உள்வாங்கி நிதானமாக பதில் அளிக்கும் வல்லமை படைத்தவர்களே ஆற்றில் போட்டாலும் அளந்து போடுபவர்கள்நீங்கள் சட்டங்களுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுக்கும் அன்பர்கள்.

உங்கள் ஜென்ம ராசியில் சனி போய்க் கொண்டு இருப்பதால் வயதுக்கு ஏற்றார் போல் மன அழுத்தத்தில் இருக்கின்றீர்கள் பரிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு பணம் விரயம் தான் ஏற்படும் மனிதனின் கர்மாவின் அடிப்படையில் தான் அவர் ஜனனம் நிகழ்கின்றது என்பதற்கு இணங்க பரிகாரம் எப்பொழுதுமே நமது வாழ்வை மாற்றாது இந்த கும்ப ராசிக்கு என்று ஒரு தனித்துவம் என்னவென்றால் ஜென்ம சனியின் முதல் சுற்று மட்டும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அடுத்தடுத்த சுற்றுகளை எதிர்கொள்ளும் தன்மை இயல்பாகவே அவர்களிடம் இருக்கும் வேலையை விட வேண்டாம் கிடைத்த வேலைக்கு போவது நல்லது சிவ வழிபாடு மன நிம்மதி தரும் .

#மீன ராசி

நேர்மையை கடைப்பிடிக்க தவறாதவர்கள் நேரத்திற்கு சாப்பிடுவதையும் நேரத்திற்கு தூங்குவதையும் கடமையாக கருதுபவர்கள் கடல் சார்ந்த பயணங்களில் ஆர்வம் உள்ளவர்கள் தொழில் ஆர்வம் உள்ளவர்கள்

இந்த வருடம் உங்களுக்கு நஷ்டமும் இல்லாத லாபமும் இல்லாத ஆண்டாக இருக்கும் கடந்த சில வருடங்களாக சம்பாதித்ததை இப்பொழுது முதலீடு செய்யும் அமைப்புகள் உருவாகும் அனாவசிய செலவுகள் இருக்காது முயற்சிகள் கைகொடுக்கும் வாழ்க்கை துணை ஆதரவு மற்றும் உதவிகள் அமையும் பூர்வீக நன்மை உண்டு.
அனைவரும் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட எல்லாம் வல்ல சிவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் நன்றி வணக்கம்.
sivakarthik astrology village astrologer
077087 84497

Address

Mayiladuthurai

Telephone

+917708784497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivakrthik-Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sivakrthik-Astrology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram