Healing Point Acupuncture & Holistic Healing Clinic Dr. Abdul Razith

  • Home
  • India
  • Nagercoil
  • Healing Point Acupuncture & Holistic Healing Clinic Dr. Abdul Razith

Healing Point Acupuncture & Holistic Healing Clinic Dr. Abdul Razith Acupuncture

மூட் ஸ்விங்ஸ்( Mood swings)  பெண்கள் காரணமே இல்லாமல் திடீரென மூட் அவுட் ஆவதும், கோபம், எரிச்சல், அழுகை என்று தன்னை வருத்...
31/12/2017

மூட் ஸ்விங்ஸ்( Mood swings)

பெண்கள் காரணமே இல்லாமல் திடீரென மூட் அவுட் ஆவதும், கோபம், எரிச்சல், அழுகை என்று தன்னை வருத்தி, தன் அன்புக்கு உரியவர்களைப் படுத்தியெடுத்துவிட்டு, பின்னர் தானாகவே சகஜமாகி, சரியாகிவிடுதையும் பார்த்திருப்போம். இந்த மூட் ஸ்விங்ஸ், அடிக்கடி அவர்களுக்கு நிகழும். காரணம்... அவர்களின் மாதவிலக்கு நாட்களை ஒட்டி நிகழும் ஹார்மோன் மாற்றங்கள்.

என்ன நிகழ்கிறது பெண்ணுக்குள்?

ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி, பொதுவாக 28 நாட்கள். அந்த சுழற்சியில் அவள் ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். குறிப்பாக, எஸ்ட்ரோஜன் ஹார்மோன். மாதவிலக்கு முடிந்த நாளில் இருந்து சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன் லெவல், இரண்டு வாரங்களில் உச்சம் தொட்டிருக்கும். கருமுட்டை வெளியானதுக்குப் (ஓவுலேஷன் - Ovulation ) பிறகான மூன்றாவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோனின் லெவல் வடிய ஆரம்பிக்கும். மேலும், புரொஜெஸ்டிரானின் ஹார்மோன் லெவலிலும் மாற்றங்கள் ஏற்படும். நான்காவது வாரத்தில், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் படிப்படியாகச் சரியும். இதுதான், மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் நாட்கள்.

சுழற்சியின் இறுதி வாரம், 21 - 28 நாட்கள் வரையிலான முன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்கள், பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. அந்நிலைதான் மூட் ஸ்விங்ஸ். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும்.

ஹார்மோன்களின் விளைவாக உணர்ச்சிகள் அவளை உயரத்தில் எடுத்துச்சென்று நிறுத்தி, பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு என விளையாடும். ஆத்திரம், மனச்சோர்வு என இருவேறு மனநிலைகளில் பந்தாடப்படுவாள். மிகச் சிலருக்கு இந்த மூட் ஸ்விங்ஸின் வீரியம் மிகக் கடுமையானதாக இருக்கும். தற்கொலை மனநிலைவரை இழுத்துச் செல்லும். அப்படியானவர்கள், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்ணின் நுண் உணர்வுகளோடு விளையாடும் இந்த மூட் ஸ்விங்ஸ் ஆட்டம், ஒரு வாரம், நான்கு நாட்கள், இரண்டு நாட்கள், ஒரு நாள் என ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் உடல்நிலையைப் பொருத்து நீடிக்கும்; சில மணி நேரங்களில்கூட தோன்றி மறையலாம். அவளுக்கு மாதவிலக்கு ஆரம்பிக்கும் நாளில், ஹார்மோன்களின் லெவல் முற்றிலும் வடிந்து சமதளத்துக்கு வருவதுடன், அவளின் அத்தனை மன ஊசலாட்டங்களும் அந்த நாளில் சட்டென மறைந்துபோகும். பின் மாதவிலக்கு முடிவில் இருந்து, மீண்டும் படிப்படியாக எஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் அதிகரிக்கும் விளையாட்டு ஆரம்பமாகும்.

மாதம் ஒருமுறை மூட் ஸ்விங்ஸ்!

காதலியோ, மனைவியோ மாதம் ஒருமுறை காரணமே இல்லாமல் கத்தினாலும், கண்ணீர்விட்டாலும் கைகோத்து அவளை அதிலிருந்து கரைசேர்க்க வேண்டியதில், ஆண்களுக்கும் பொறுப்புண்டு. அவளைப்படுத்தும் ஊசலாட்டம் அவளால் தவிர்க்க முடியாத, அவள் கைமீறிய விஷயம். அதைப் புரிதலுடன் பொறுத்துக்கொள்ளும் அன்பே, அந்நாட்களுக்கான மருந்து.

07/08/2017

LV 3 is one of the most commonly used acupuncture point in clinical practice, because combined with Li 4, it's a powerful combo! These 4 points or "4 Gates" move Qi & Blood, therefore open the gates to let everything flow :)
- LV 3 Moves Lv Qi for PMS, depression, moodiness, Breast tenderness, bloating, rib pain, moving pain, cold hands and feet.
- Clears Damp-heat in the lower Jiao for urinary or external genitalia issues, as well as itching in the area.
- Cools blood for red & swollen eyes, and tendons inflammations.
- Sedate Lv Yang for dizziness, vertigo, and post stroke mouth deviation.

If you enjoyed my graphic, check out my illustrated guide for acupuncture points here: https://bit.ly/2XdY4Zs

11/03/2017

டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை எப்படி தடுப்பது? Breathing the smoke from diesel, living under Asbestos are one among the reasons for lung cancer. How to prevent this?

04/02/2017

நெஞ்சு எரிச்சல் ஏன்? ( தடுக்க சில வழிகள் ):-

வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது.

புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சலா? பிரச்னையே நம்மிடம் தான்...

'உணவு உண்டதும் நம்மில் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது வழக்கம். மக்கள் தொகையில் 30 முதல் 50 சதவீதம் பேருக்கு நெஞ்சு எரிச்சல் உள்ளது. இவர்களில் 100ல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாகவும்இ மீதிப் பேருக்கு மழைக் காலக் காளான் போல் வரும்.

காரணம் என்ன?

நெஞ்சு எரிச்சலுக்கு அடிப்படைக் காரணம் இரைப்பையில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவை இல்லாமல் நுழைவது தான்.

உணவுக் குழாயின் தசைகள் காரமானஇ சூடானஇ குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்பலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பானஇ காரமானஇ கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ் முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலை போல "தொள தொள' வென்று தொங்கி விடும். விளைவுஇ இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக் குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். "அல்சர்' எனப்படும் இரைப் பைப் புண் உள்ளவர் களுக்கு இப்படித் தான் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

இறுக்கமான உடையால்:

வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள் கர்ப்பிணிகள் இறுக்கமாக உடை அணிபவர்கள் வயிற்றில் கட்டியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகியோருக்கு நெஞ்சு எரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

வழக்கமாக பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வர். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலம் மேலேறி நெஞ்சு எரிச்சலை உண்டாக்கிவிடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட இதற்காகவே காத்திருந்தது போல் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் படையெடுக்க அங்கு புண் உண்டாகி நெஞ்சு எரிச்சல் தொல்லை கொடுக்கும்.

பலருக்கு உணவு சாப்பிட்ட உடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?:

அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே அகநோக்கி (எண்டோஸ்கோப்) மற்றும் இதய மின்னலை வரைபடம் (இ.சி.ஜி.இ) பரிசோதனை செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும். ஆரம்ப நிலையில் உள்ள நெஞ்சு எரிச்சலை மிக எளிதில் குணப்படுத்தி விடலாம்.

இதனைத் தடுக்க சில வழிகள்:

1. இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம்.

2. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது.

3. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை துண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. துங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

4. வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும்.

5. சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை துõண்டுவதால், எடையை குறைக்கலாம்.

6. உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது.

7. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை.

8. மசாலா கலந்தஇ எண்ணெய் மிகுந்தஇ கொழுப்பு நிறைந்தஇ புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதை விட மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.

31/10/2016

பூண்டு ஆண்கள் தினமும் 2-3 பற்கள் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். இல்லாவிட்டால், அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வந்தாலும், இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.  

பக்கவாதத்தில் இருப்பவரை உடனே காப்பாற்ற!உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அ...
06/10/2016

பக்கவாதத்தில் இருப்பவரை உடனே காப்பாற்ற!

உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அதில் சில சாதாரணமானதாகவும், இன்னும் சில விசித்திரமானதாகவும் இருக்கும். பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் மருத்துவ முறைகள் சற்று வேறுபடும். இருப்பினும் அவை நல்ல பலனைத் தருபவையாக இருக்கும்.
அந்த வகையில் பக்கவாதத்தால் அவஸ்தைப்படும் போது, அதிலிருந்து உடனடியாக விடுபட ஓர் அற்புதமான வழி உள்ளது. அந்த வழி என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் அது நல்ல பலனைத் தருமாம்.

பக்கவாதத்தினால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கூர்மையான ஊசி உதவும்.

அந்த சிறு ஊசி எப்படி பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக பக்கவாதத்தின் போது, மூளையின் இரத்த தந்துகிகள் படிப்படியாக நீட்சியடையும். இந்த நேரத்தில் நல்ல ஓய்வு அவசியம். இம்மாதிரியான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களை நகரவிடாமல் தடுக்க வேண்டும். ஒருவேளை நகர்ந்தால், இரத்த தந்துகிகள் வெடித்து, மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த மாதிரியான நேரத்தில் வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும். ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.

பக்கவாதத்தின் போது வாய் ஒரு பக்கமாக இழுத்தால், அப்போது காதுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் காதுகளை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு ஊசியை எடுத்து, காதுகளின் மென்மையான பகுதியில் இரண்டு துளி இரத்தம் வெளியேறுமாறு குத்த வேண்டும். இந்த செயல்களால் ஒருவரை பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

இது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் இது சீனாவில் பக்கவாதத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமாகும். இந்த முறையால் 100 சதவீதம் நன்மையைப் பெறக்கூடுமாம்.

எந்த மருந்தும் தேவையில்லை முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும் முடக்காற்றான் .!வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து த...
18/05/2016

எந்த மருந்தும் தேவையில்லை முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும் முடக்காற்றான் .!

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
*இரவில் நெல்லிக்காய்களை
தண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வள ரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். *இரவில் நெல்லிக்காய்களை தண்ணீ ரில் ஊறப்போ...

03/05/2016

Point Localization: Below the zygomatic arch between the condylar and coronoid process. TCM Actions: Expels Wind from the face. Remove channel obstruction. Benefits the ear. Indications: Trigeminal neuralgia. Facial paralysis. Deviation of eyes and mouth. Pain in the jaw and tooth. Trismus. Swelling…

Address

East Of Tower
Nagercoil
629001

Opening Hours

Monday 10am - 1am
Tuesday 10am - 1am
Wednesday 10am - 1am
Thursday 10am - 1am
Friday 10am - 1am
Saturday 10am - 1am

Telephone

+91 9842792674

Alerts

Be the first to know and let us send you an email when Healing Point Acupuncture & Holistic Healing Clinic Dr. Abdul Razith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing Point Acupuncture & Holistic Healing Clinic Dr. Abdul Razith:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram