RAJAN Clinic

RAJAN Clinic COMPREHENSIVE FAMILY CARE....
MEET YOUR 'FAMILY' DOCTOR.

15/11/2022
இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்..!💐🔥🔥
23/10/2022

இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்..!💐🔥🔥

Be Watchful..
04/08/2022

Be Watchful..

🎉💕💐🎉🌙🌙☪️
03/05/2022

🎉💕💐🎉🌙🌙☪️

நீரிழிவு நோயாளிகளும் நோன்பும்/விரதமும் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் ...
07/04/2022

நீரிழிவு நோயாளிகளும் நோன்பும்/விரதமும்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் நோன்பு/ விரதம் வைக்கலாமா?

நீரிழிவு குறைபாடு என்பது
மாவுச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச்சத்து ஆகியவற்றை கிரகிப்பதில் ஏற்படும் பிரச்சனை என்று கொள்ளலாம்

அதிலும் மாவுச்சத்து எனும் CARBOHYDRATESஐ கிரகிப்பதில் மிகப்பெரும் குறைபாடு ஏற்படுகிறது

எனவே ஒருவர் மாவுச்சத்து உணவை உண்ணும் போது ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் கூடும்

ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடும் போது கணையம் (pancreas)
"இன்சுலின்"
எனும் ஹார்மோனை சுரக்கும்

நீரிழிவு நோயாளிகளில் இத்தகைய இன்சுலின் சுரப்பும் சரியாக இருக்காது(Insulin deficiency )
சுரந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யாது. ( Insulin Resistance)

எனவே ரத்த க்ளூகோஸ் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்.
இதைத்தான் "டயாபடிஸ்" என்கிறோம்

இதை சரி செய்ய

இன்சுலினை சுரக்க வைக்க ( Secretagogues)
அல்லது
சுரக்கப்பட்ட இன்சுலினை முறையாக வேலை( Insulin sensitizers) செய்ய வைக்க தேவையான மாத்திரைகள் வழங்கப்படும்

கடந்த மூன்று மாதங்களாக ரத்த க்ளூகோஸ் அளவுகள் சராசரியான Hba1c 7 க்கு கீழும்
கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சையில் மாற்றங்கள் இல்லாமல் இருந்தால் தங்களின் மருத்துவரின் அறிவுரையின் படி நோன்பு நோற்பது குறித்து முடிவெடுக்கலாம்.

Hba1c அளவுகள் 8 க்கு மேல் இருப்பின் உங்களுக்கு சராசரி ரத்த க்ளூகோஸ் அளவுகள் எப்போதும் 200க்கு மேல் இருக்கும் என்று பொருள்
இது சரியான பராமரிப்பு அன்று.

இத்தகையோர் நோன்பு வைப்பது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

அதிலும் Hb1c 10க்கு மேல் இருப்பின் நோன்பு வைப்பது உடலுக்கு தீமைகளை உருவாக்கலாம்.

இவர்கள் பெரும்பாலும் இன்சுலின் அல்லது இன்சுலினை ஒத்த பலமான மருந்துகளில் இருப்பார்கள்.
மேலும் டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நோன்பு வைத்தல் ஆபத்தில் முடியலாம்.

நீரிழிவு நோயாளிகள்
நோன்பு வைக்கும் போது
மாத்திரைகள் எடுக்கலாமா?

நீரிழிவிற்கு வழங்கப்படும் மாத்திரைகள் ரத்த க்ளூகோஸ் அளவுகளைக் குறைக்கும்.
இவற்றை HYPOGLYCEMIC DRUGS என்று அழைக்கிறோம்.

இத்தகைய மாத்திரைகளை
காலை உணவான சஹருடன் எடுக்கக்கூடாது.

எடுத்தால் மதிய நேரத்தில் ரத்த சர்க்கரை அளவுகள் ஆபத்தான அளவில் குறைந்து ஹைப்போக்ளைசீமியா ஏற்படும் வாய்ப்பு உண்டு

ஹைப்போக்ளைசீமியா குறித்து விகடன் மின்னிதழுக்கு நான் எழுதிய எனது இந்த பதிவையும் ஹைப்போகிளைசீமியா ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக்குறித்த பதிவையும் படித்துவிடுங்கள்

https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2Fdoctor-explains-the-symptoms-and-first-aid-of-low-blood-sugar-hypoglycaemia

எனவே நீரிழிவு மாத்திரைகளை
மாலை நோன்பு திறக்கும் போது உண்ணும் உணவுடன் எடுப்பதே சரி

நீரிழிவு நோயாளிகள் சஹர் உணவை எவ்வாறு அமைத்துக்கொள்ளலாம் ?

ஒரு கைப்பிடி கஞ்சி வடிகட்டப்பட்ட சோறு (75 கிராம் சோறு)
+
ஒரு கைப்பிடி காய்கறி ( 75 கிராம் )
+
ஒரு கைப்படி கீரை (75 கிராம்)
+
ஒரு கைப்பிடி மாமிசம் (75 கிராம்)
+
2 முட்டைகள்
+
150 மில்லி மோர்
+
1500 மில்லி தண்ணீர்

இது மாவுச்சத்து குறைவான உணவு
இதன் மூலம் ரத்த சர்க்கரை ரொம்பவும் ஏறாது - ஆபத்தான அளவிலும் குறையாது என்று நம்புகிறேன்

கட்டாயம் காலை சஹர் இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாத்திரை போடக்கூடாது

நீரிழிவு நோயாளிகளின் இஃப்தார் எப்படி இருக்கலாம்?

200 கிராம் காய்கறிகள் போட்டு செய்த சூப்
அதில் 10 கிராம் வெண்ணெய் கலந்து
பட்டர் வெஜ் சூப் பருகி நோன்பை விடலாம்

காளிபிளவர் ஹலிம் செய்து பருகலாம்.

கூடவே கடற்பாசி ( இனிப்பு இல்லாமல் ) பருகலாம்/ உண்ணலாம்

முட்டை ஆம்லெட் உண்ணலாம்

பேலியோ பனீர் வடை செய்து சாப்பிடலாம்.

உடனே இரவு மாத்திரை போட்டு விட வேண்டும்.

கட்டாயம் நோன்புக்கஞ்சி குடித்து தான் நோன்பை விட வேண்டும் என்று இல்லை.
மீண்டும் கூறுகிறேன்
நான் கூறும் இந்த அறிவுரைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு என்றே எழுதப்பட்டாலும் இதை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள்
நோன்பு திறக்க
பேரீச்சம் பழம் வேண்டாம் . அது சர்க்கரை அளவுகளை அதிகமாக ஏற்றும் இயல்புடயைது.

டம்ளர் தண்ணீர் கொண்டு நோன்பு திறக்கலாம்.
பேரீச்சம் பழம் எடுத்தே ஆக வேண்டும் என்றால் அரைப்பழம் அல்லது கால் பழம் எடுத்து நோன்பு விடுங்கள்

இரவு உணவாக

100 கிராம் மாமிசம் /மீன்
+
3 தோசைகள்
அல்லது
3 சப்பாத்திகள்
அல்லது
3 இட்லி உண்ணலாம்

கூட ஒரு லிட்டர் தண்ணீர் பருகவும்

நீரிழிவு நோயாளிகளும் சரி ஏனையோரும் சரி கட்டாயம் இந்த நோன்பு மாதத்தில்

இனிப்பு கலந்து பானங்கள்
எண்ணெயில் பொறித்த உணவுகள்
பேக்கரி பண்டங்கள் போன்றவற்றை தவிர்த்து

ஆரோக்கியமாக நோன்பு நோற்கலாம்

நமது நோன்புகளை இறைவன் ஏற்பானாக

உடலுக்கும்
உள்ளத்துக்கும் உகந்த நோன்புகளாக
அவை அமையட்டும்

நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

ஹைப்போகிளைசீமியா குறித்த அறிய இந்த பதிவை படிக்கவும்

https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2Fdoctor-explains-the-symptoms-and-first-aid-of-low-blood-sugar-hypoglycaemia

"ஹைப்போ" என்றால் குறைவு, "க்ளைசீமியா" என்றால் ரத்த க்ளூகோஸ் அளவு என்று பொருள், ஹைபோகைசீமியாவில் மூன்று படிநிலைகள...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐🎉🌞🌾🌾
14/01/2022

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்💐💐🎉🌞🌾🌾

30/10/2021

🏋️‍♀️🏋️‍♀️ஜிம் செல்வதால் தான் இதய செயலிழப்பு ஏற்படுகிறதா???💔💔

சமீப காலங்களில் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன

இதை வைத்து ஜிம்களில் பயிற்சி செய்வது ஆபத்தானதா?
ஜிம்களில் பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆபத்தானதா? என்பது போன்ற ஐயங்கள் எழுகின்றன.

இதற்கான விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறேன்

ஜிம் எனும் உடற்பயிற்சிக்கூடத்தில் சிறப்பான முறையில் அங்கம் அங்கமாக தசைகளுக்கு வலுசேர்க்குமாறு தேகப்பயிற்சி வழங்கப்படுகின்றது.

அங்கு இதற்கென பிரத்யேக பயிற்சியாளர் இருப்பார். அவர் பயிற்சி எடுக்க வந்தவருக்குரிய பயிற்சிகளை முறையாகக் கற்றுக்கொடுப்பார்.

இதுவே ஜிம்கள் இயங்கும் முறை.

இதில் மிகக்குறைவான சதவிகிதம் பேர்
தங்களுக்கு ஆறடுக்கு வயிற்றுப்பகுதி வேண்டும் என்றும்
ஆணழகன் போட்டியில் பங்குபெற வேண்டும் என்றும் வருவார்கள்.

பெரும்பான்மை நபர்கள் எடை குறைப்புக்கும்
கூடவே தசைகளை வலுப்படுத்தவும் எடை தூக்கும் பயிற்சி, நடைப்பயிற்சி போன்வற்றில் பங்கு பெறுவார்கள்.

செய்திகளில் பெரிதாகப் பேசப்படுவதாலேயே மனணங்களுள் சில ஜிம்களில் நடந்ததால்
ஜிம் சென்றாலே இதயம் பாதிக்கும் என்ற எண்ணத்திற்கு வருவது தவறாகும்.

உடற்பயிற்சி , விளையாட்டு போன்றவற்றிக்கு முக்கியத்துவமே அளிக்காத நம் நாட்டில் இது போன்ற அவநம்பிக்கைகள் இன்னும் ஆபத்திலே தான் போய் முடியும்.

பெருநகரங்களிலும் சரி
சிற்றூர்களிலும் சரி
இப்போது தான் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று தங்களால் ஆகுமானவரை தேகப்பயிற்சி செய்யத்துவங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக பெரும்பான்மை பெண்களுக்கு பொதுவெளியில் நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செல்ல இயலாமல் இருக்கும் நிலையில் பெண்களுக்கும் இந்ந உடல் பயிற்சி கூடங்கள் மிகத்தேவையான ஒன்றாக இருக்கின்றன.

தாங்கள் உடற்பயிற்சிக்கூடங்களை உபயோகித்து தேகப்பயிற்சி செய்பவராயின் அதை அச்சமின்றி தொடருங்கள்

பின்வரும் யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்

1. தங்களின் வயதென்ன? தங்களின் உடல் எடை என்ன? தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ( நீரிழிவு , ரத்த கொதிப்பு, இதய நோய் , சிறுநீரக நோய்) என்ன? போன்றவற்றை உங்களது மருத்துவரிடம் கூறி அவரிடம் தாங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து கருத்துக் கேளுங்கள்.

2. தங்களுக்கு உதவி புரியும் தேகப்பயிற்சியாளரிடமும் தங்களுக்கு இருக்கும் இணை நோய்கள் குறித்து கூறுங்கள்.

3. இதய நோய் இருப்பவர்கள் இதயத்துடிப்பை ஓரளவுக்கு மேல் ஏற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். எனவே மிதமான உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள்.

4. அதீத உடல் சோர்வுடனும் மனச்சோர்வுடனும் ஜிம்மிற்குச் செல்லாதீர்கள்.
புத்துணர்வான எண்ணத்துடனும் தேகத்துடனும் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் நோய்வாய்பட்டிருக்கும் போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.
உண்ணாநோன்பில் இருக்கும் போது குறிப்பாக தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு பிடிக்கும் போது அதீத உடற்பயிற்சி தேவையற்றது.நோன்பை முறித்து விட்டு பிறகு உடற்பயிற்சி செய்யுங்கள்

5. நன்றாக வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு எப்போதும் உடற்பயிற்சி செய்யக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் அதிக நேரம் வலுவான உடற்பயிற்சி செய்யக்கூடாது. ஹைப்போ க்ளைசீமியா எனும் ரத்த க்ளூகோஸ் அளவுகள் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு.

6. உடல் தரும் அபாய சமிக்ஞைகளான
தலைசுற்றல் , குமட்டல் , வியர்த்துப்போதல் , படபடவென்று வருவது இவற்றை உதாசீனப்படுத்தாமல் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால்
இதய நோய் சிறப்பு நிபுணரிடம் ஒபினியன் வாங்க வேண்டும். எக்கோ ஸ்கேன் , ஈசிஜி எடுத்துப்பார்க்க வேண்டும்.


7. தாங்கள் இணை நோய்களான நீரிழிவு , இதய நோய் , ரத்த கொதிப்பு போன்றவற்றிற்கு செய்து வரும் மருத்துவத்தை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

8. உடற் பயிற்சியை சிறிதிலிருந்து பெரிதாக
எளிதானதில் இருந்து கடினமானதாக
குறைவான நேரத்தில் இருந்து நீண்ட நேரம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு நேரம் கொடுத்துக்கூட்ட வேண்டும்.
அதீத சுமையை திடீரென்று உடல் மீது ஏற்றக்கூடாது.

9. குறைவான காலத்தில் மிக அதிகமாக உடலை ஏற்றுவதோ
அதே குறைவான காலத்தில் மிக அதிமாக உடலைக் குறைக்க முயல்வதோ ஆபத்தில் முடியலாம். குறுக்கு வழியில் உடலை ஏற்றுவதற்கும் வலிமையைக் கூட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் ஆபத்தானவை என்பதை அறிக.
இயன்ற அளவு இயற்கையான உணவு முறையில் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கச் செய்வது சிறந்தது. மீறி புரதச்சத்து பொடிகள் தேவை என்றால் அதை மருத்துவ கண்காணிப்பில் எடுப்பது சிறந்தது.

10. 30+ வயதாகியிருக்கும் மக்கள் கட்டாயம் வருடம் ஒருமுறை இணைநோய்களை கண்டறியும் பரிசோதனைகளை செய்து கொள்வது சிறந்தது. காரணம் பல பேர் தங்களுக்கு ரத்த கொதிப்பு இருப்பதையோ
நீரிழிவு இருப்பதையோ அறியாமலே இருக்கிறார்கள். கூடவே மறைந்து இதய நோயும் இருக்கலாம். எனவே தயவு கூர்ந்து வருடாந்திர பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இன்னும் உங்களின் குடும்பத்தில் தாய் தந்தை ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு இதய நோய் இருந்தாலோ அவர்களுக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்திருந்தாலோ தாங்கள் இன்னும் கவனத்துடன் இதயத்தைப் பேண வேண்டும்.

இறுதியாக எனது கருத்து.

ஜிம்களால் இதய நோய் வரும் வாய்ப்பு மட்டுப்படுமே அன்றி கூடுவதில்லை

ஆயினும் ஒருவருக்கு ஏற்கனவே இதய நோய் இருப்பின் அவர் அதை அறியாமல் அல்லது அறிந்தே அதைப் புறக்கணித்து தொடர்ந்து
இதயத்தின் வேலையைக் கூட்டும் உடற்பயிற்சிகளைச் செய்தால் இதயம் பாதிப்படையவே செய்யும்.

உங்கள் உடலுக்கு ஏற்ற உடற் பயிற்சியை
உரிய கவனத்துடன் தொடர்ந்து செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஜிம்களில் உடற்பயிற்சி செய்யும் போது இறந்த சொற்ப உயிர்களைப் பற்றியே அதிகம் பேச்சு வரும்.

ஆனால் இன்னும் அதிகமான உயிர்கள் வீட்டில் உறங்கும் வேளையில் சென்று கொண்டிருக்கின்றன.
அவற்றைப்பற்றி யாரும் பேச மாட்டோம்.

அச்சமின்றி தேகத்தை வலுப்படுத்துங்கள்.
உடலினை உறுதி செய்தால்
வாழ்வு வளம் பெறும்
By -- டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

This is known as one of medicine’s most incredible moments. In 1922, at the University of Toronto, scientists went to a ...
23/10/2021

This is known as one of medicine’s most incredible moments. In 1922, at the University of Toronto, scientists went to a hospital ward with children who were comatose and dying from diabetic keto-acidosis. Imagine a room full of parents sitting at the bedside waiting for the inevitable death of their child. The scientists went from bed to bed and injected the children with the new purified extract - insulin. As they began to inject the last comatose child, the first child injected began to awaken. One by one, all of the children awoke from their diabetic comas. A room of death and gloom, became a place of joy and hope. Thank You Dr. Banting and Dr. Best!

Address

Ashok Nagar
Natham
624401

Alerts

Be the first to know and let us send you an email when RAJAN Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RAJAN Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category