Vidhya Siddha Pharmacy

Vidhya Siddha Pharmacy SELLING SIDDHA, AYURVEDA, UNANI MEDICINES

03/01/2026

பழங்களின் மருத்துவ குணங்கள்:-
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.

11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.

இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

12. கொய்யாப்பழம் :- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம்.

விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

13. பப்பாளி :- மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது.

இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும்.
பகிர்வு வித்யா சித்தா பார்மசி8489982168

03/01/2026

பழங்களின் மருத்துவ குணங்கள்:-
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.

11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.

இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

12. கொய்யாப்பழம் :- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம்.

விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

13. பப்பாளி :- மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது.

இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன

02/01/2026

*நாயுருவி.*
*********************

அதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் காணப்படும் இந்தச்செடிகளின் மேல் உள்ள முட்கள் சூழ்ந்த கதிர்கள், ஆடைகளில் ஓட்டும் இயல்புடையதால், யாரும் இதன் அருகில் செல்லமாட்டார்கள்.

ஆனால், நாயுருவி மனிதருக்கு செய்யும் அரும்பெரும் நலன்களை அறிந்தால், உடைகளில் என்ன, உடலில் கூட ஒட்டிக்கொள்ளட்டும் என நினைப்பார்கள்.

நாயுருவியின் பொதுவான மருத்துவ குணங்கள் சிறுநீரை அதிகரிக்கும், உடல் நலிவைப்போக்கும் மற்றும் உடலையும் மனதையும் பொலிவாக்கும்.

நாயுருவி பேஸ்ட் மற்றும் பிரஷ்

முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா?

நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது.

சூடான மற்றும் குளிர் பானங்கள், புகை மற்றும் புலால் தவிர்த்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாயுருவி வேரில் பல் துலக்கிவர, மனம் தெளிவடைந்து, முகம் பொலிவாகும், பேச்சில் வசீகரம் பிறக்கும் என்கின்றன சித்த நூல்கள்.

சில மேஜிக் ஷோக்களில், மேஜிசியன் வாயில் ட்யூப்லைட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கடித்து, துப்புவதை பார்த்திருப்பீர்கள், அவர்களின் அத்தகைய அதிசயிக்கவைக்கும் திறனுக்கு செந்நாயுருவி இலைகளே காரணம். செந்நாயுருவி இலைகள் கண்ணாடிகளை அறுக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த இலைகளை வாயில் நன்கு மென்று வைத்துக்கொண்டே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், பாறையையே துளைத்து செல்லும் வலுவுடையது செந்நாயுருவி என்று நாம் இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள்.

நாயுருவி அரிசி:
நாயுருவி செடிகளில் உள்ள கதிர்களில் உள்ளவையே நாயுருவி அரிசி எனப்படுகின்றன. இவற்றை சேகரித்து, அரிசி போல சமைத்து சாப்பிட்டு வர, நாட்கள் ஓடினாலும் பசி எடுக்காது, உடலும் தெம்பாக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம். மீண்டும் பசியெடுக்க, மிளகு சீரகம் வறுத்து, நீரில் கொதிக்கவைத்து பருகிவரலாம்.

மேலும், இத்துடன் தினையரிசி, மூங்கிலரிசி சேர்த்து இடித்து, இந்த கலவையை தினமும், கஞ்சி செய்து பருகிவர, உடல் அபார ஆற்றல்மிகுந்த சக்தியைப்பெறும், உடல் பொலிவுண்டாகும்.

சித்தர்கள் அஷ்டகர்ம மூலிகை எனும் இந்த நாயுருவி மூலிகை மூலம்தான், உடல் சோர்வு பசி, நீங்கி காடு மலைகளில் இருந்தார்கள், இதனால் செந்நாயுருவிக்கு முனிவர்க்கெல்லாம் முனிவர் எனப்பொருள்படும் வகையில் மாமுனி எனும் பெயரும் உண்டு.

நாயுருவியில் சிகப்பு வண்ணத்தில் செடிகளின் தண்டுகள் காணப்படுவதை பெண்பால் என்றும், அதையே உயரிய மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனிதனின் உடல் வியாதிகள் மட்டுமல்ல மன வியாதிகளுக்கும் மருந்தாகிறது.

அனைத்து பாதிப்புகளும் விலகும் :
அஷ்டகர்ம மூலிகை எனப்படும் குணத்தால் செந்நாயுருவி வேரை, தொழில் வளம், செல்வம் சேர வசியப்பொருளாக, அக்காலத்தில் பயன்படுத்தினர்.

செந்நாயுருவி வேரை பாலில் கொதிக்கவைத்து, நிழலில் உலர்த்தி, பின்னர் தூளாக்கி, தினமும் இரவுவேளைகளில், பாலில் கலந்து பருகிவர, அனைத்துவகை மன பாதிப்புகள், இதய படபடப்பு மற்றும் தூக்கமின்மை வியாதிகள் யாவும் விலகிவிடும்.

பல்வலிக்கு :
பற்களை பிடுங்கவேண்டிய கடும் பல்வலிக்கு, செந்நாயுருவி வேரை, பாறை உப்புடன் சேர்த்து பல்துலக்கிவர, பல் வலிகள் விரைவில் நீங்கிவிடும்.

சிறுநீரக பாதிப்புகளை செவ்வனே சரிசெய்யும் செந்நாயுருவி!

மாதவிடாய் கோளாறு :
இளம் செந்நாயுருவி செடி இலைகளை சாறெடுத்து, நீரில் கலந்து சூடாக்கி தினமும் இருவேளை பருகிவர, சிறுநீரக பாதிப்புகள் யாவும் சீராகி, சிறுநீர் இயல்பாக பிரியும். சிறுநீரக கட்டிகள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்றவை நீங்கும். மேலும் மாதவிலக்கு கோளாறுகள், உடலில் அதிக நீர் கோர்ப்பது போன்றவை, சரியாகும்.

தீராத தலைவலிகள் தீர :
செந்நாயுருவி வேரை, நல்லெண்ணையில் இட்டு, தைலம் போல நன்கு சுண்டியபின் சேகரித்துவைத்துக்கொண்டு, மூக்கில் சில துளிகள் விட்டுவர, தீராத தலைவலிகள் விரைவில் நீங்கிவிடும்.

மலச்சிக்கல் வியாதிகள் தீர :
நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்கள், செந்நாயுருவி இலைகளை நீரில் நன்கு கொதிக்கவைத்து, குடிநீராக பருகிவர, எத்தகைய நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கி, உடனே பேதியாகி வெளியேறும்.

இருமல் நெஞ்சு சளி நீங்க :
செந்நாயுருவி இலைகளை வாரமொருமுறை, சமையலில் கூட்டு போலவோ அல்லது கடைந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டுவர, இருமல் குறைந்து, நுரையீரலில் தேங்கியுள்ள சளி, உடலில் இருந்து வெளியேறும்.

ஜுரம் குணமாக :
செந்நாயுருவி இலைகளுடன் இரு மடங்கு மிளகு சிறிது பனைவெல்லம் சேர்த்து, மையாக அரைத்து சாப்பிட்டுவர, எல்லாவகை ஜுரமும் விலகிவிடும்.

மிகத்தீவிர ஜுரத்துக்கு, செந்நாயுருவி இலைகளோடு ஜீரகம் சேர்த்து சூடாக்கி பருகிவர, கடும் ஜுரமும், மெல்ல விலகிவிடும்.

நெடுநாள் காயங்கள் ஆற :
ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில், இடித்த செந்நாயுருவி இலைகளோடு, தேங்காயெண்ணை சேர்த்து சூடாக்கி பின்னர், அடிபட்ட காயங்கள், நெடுநாள் புண்கள், அவை சீழ்வடியும் நிலையில் இருந்தாலும், அவற்றின் மேல், இந்த எண்ணைக்கலவையை தினமும் சீரான இடைவெளியில் தடவிவர, காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

பூச்சிக்கடி குணமாக :
செந்நாயுருவி இலைகளுடன் துளசி இலைகளை கலந்து எடுத்து விரல்கடை அளவு தினமும் சாப்பிட்டுவர, விஷப்பூச்சிக்கடிகள் குணமாகும்.

மேலும், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள், சரும வியாதிகள், பிறப்புறுப்பு வியாதிகள் போன்ற எண்ணற்ற வியாதிகளை, குணமாக்கி, மனிதனுக்கு நற்பலன்கள் அளிக்கும் இயல்புடைய "மாமுனி" என்று சித்தர்களால் போற்றப்படும் தெய்வீக மூலிகை, செந்நாயுருவி.

சில மருத்துவ குணங்கள்
செந்நாயுருவி வேரைப் பொடியாக்கி, அத்துடன் சிறிது மிளகுப்பொடி,தேன் கலந்து சாப்பிட, வறட்டு இருமல் விலகி, சுவாசப்பிரச்னைகள் சீராகும்.
செந்நாயுருவி இலைச் சாற்றில் சிறிது பெருங்காயம் கலந்து சாப்பிட, வயிற்றுவலிகள் தீரும்.
செந்நாயுருவி அரிசியை, வீட்டில் அரிசி கழுவிய நீரில் இலேசாக கொதிக்கவைத்து பருகிவர, மூல வியாதிகள், மூளைக்கட்டிகள் மற்றும் உடல் கட்டிகள் குணமாகும்.
செந்நாயுருவி இலைகளை அரைத்து பற்று போல நெஞ்சின் மேல் தடவிவர, நெஞ்சு குத்தல் மற்றும் வலிகள் நீங்கும்.
செந்நாயுருவி சமூலம் எனப்படும் வேர், இலைகள் மற்றும் விதைகளை இடித்து தூளாக்கி அதை, இரசத்தில் கலந்தோ அல்லது தினமும் ஒருவேளை நீரில் இட்டு கொதிக்கவைத்தோ பருகிவர, அனைத்து வகை கண் வியாதிகள் மற்றும் அதிகமாக பசி எடுத்தல் போன்ற பாதிப்புகள் சரியாகிவிடும்.
காதில் சீழ் வடிதலை நிறுத்த, செந்நாயுருவி இலைச்சாற்றை, இரு சொட்டுகள் காதில் விட, காது சீழ்வடிதல் பிரச்சினைகள் விலகும்.
தகவல் பகிர்வு
வித்யா சித்தா பார்மசி
வைசியாள் வீதி புதுச்சேரி
செல்:8489982168

01/01/2026

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
இந்த புத்தாண்டில் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இந்த பிரபஞ்சம் அனைத்து வளங்களையும் வாரி வழங்கட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.சந்துரு
வித்யா சித்தா பார்மசி வைசியாள் வீதி புதுச்சேரி

31/12/2025

A BIG THANK YOU to everyone who stood by me throughout the year.
Your support, kindness, Guidence, Encouragement and appreciation meant more to me than words can express,
I am truly Greatful,
Message by chandru
Vidhya siddha pharmacy,
Cell:8489982168

22/12/2025

தோப்புக்கரணம்.

பிள்ளையார் கோவில் பலர் தோப்புக் கரணம் போட்டு பிள்ளையாரை வணங்குவதை பார்த்திருப்போம்.

நன்கு ஆராய்ந்துதான், நம் முன்னோர்கள் வழிபாட்டோடு தோப்புக்கரணத்தை
இணைத்திருக்கிறார்கள்.

தினமும் 3 நிமிடம்
தோப்புக்கரணம்
உடலைவலுவாக்கும்.

தோப்புக்கரணம் போட்டாலே
போதும்யோகாசனத்தின்
பெரும்பாலான பலன்களும் கிடைத்துவிடும் என்று சொல்வார்கள்.

நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்பிடித்துக் கொள்கிறோம்.

காதுமடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற
புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்செயல்படுவதற்கு
ஆன தூண்டுதல்கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும்.

பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.

வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும்,இடது கை விரல்களால் வலது காதுமடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.

இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் அமைந்துள்ள
மூலாதாரம் போன்ற 7 சக்கரங்களும் சீர்படும். நரம்பு மண்டலமும் ஊக்குவிக்கப்படும்.

உட்கார்ந்து எழும்போது,காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்குவேலை கொடுக்கிறோம்.

உடல் முழுக்கஇரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

Vericose Vein என்ற நோய் வராமல் தடுக்கலாம்

முதலில் 10 தோப்புகரணம், பின் படிப்படியாக மூன்று நிமிடங்கள் வரை தோப்புக்கரணத்தைத்தொடர்ந்து
செய்தால், நல்ல உடற்பயிற்சி.

உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும்.

தகவல் பகிர்வு
வித்யா சித்தா பார்மசி வைசியாள் வீதி புதுச்சேரி

21/12/2025



❄️ தமிழ்நாட்டில் நிலவும் கடும் குளிர் – முதியோர்கள் & இதய நோயாளிகள் ஏன் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்?

தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த குளிர் காலநிலை அனைவருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது.

👉 முதியோர்கள்,
👉 இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
👉 இதய ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது ரத்த ஓட்டக் குறைபாடு உள்ளவர்கள்

இவர்கள் குளிர் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

❓ ஏன் இந்த எச்சரிக்கை அவசியம்?

இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் முக்கியமான தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதுமான அளவு ரத்தம் செல்லாத நிலையை
Ischemic Heart Disease (IHD)
அதாவது
👉 இதய நாளக் குருதி ஓட்டக் குறைபாட்டு நோய்
என்று அழைக்கிறோம்.

---

❤️ இதய ரத்த ஓட்டக் குறைபாடு உள்ளவர்களுக்கு தோன்றும் பொதுவான அறிகுறிகள்

இந்த நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்படும்:

🔸 சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது
🔸 எளிதில் சோர்வடைதல்
🔸 கொஞ்சம் வேகமாக நடந்தாலோ ஓடினாலோ
👉 நெஞ்சில் கனத்த உணர்வு அல்லது வலி
🔸 உடல் முழுவதும் ஒரு வித அசதி
🔸 கால்களின் கணுக்காலுக்குக் கீழ்
👉 நீர் தேங்கி வீக்கம் ஏற்படுதல்

⚠️ இத்தகைய அறிகுறிகளை சாதாரண வயதான உடல் நிலை என்று புறக்கணிக்கக் கூடாது.

👉 இது இதய நோயின் தெளிவான எச்சரிக்கை மணி.

📌 உடனடியாக இதய நோய் சிறப்பு மருத்துவரை சந்தித்து
📌 தேவையான பரிசோதனைகள் செய்து
📌 முறையான சிகிச்சை பெறுவது மிக மிக அவசியம்.

---

👴 45+ வயது & இளைஞர்கள் – உண்மை என்ன?

பொதுவாக இதய ரத்த நாள அடைப்பு
👉 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே அதிகம் காணப்படுகிறது.

ஆனால்…

❗ “இளைஞர்களுக்கு இதய நோய் வராது”
என்று உறுதியாகக் கூற முடியாத நிலை இன்று உள்ளது.

📉 தற்காலத்தில்
👉 இளம் வயதினரிலும்
👉 முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
மாரடைப்பு & இதய நோய் மரணங்கள் பதிவாகி வருவது ஒரு கடுமையான எச்சரிக்கை.

---

👴 60+ வயதுடையவர்களுக்கு உள்ள மறைமுக அபாயம்

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களில்:

🔹 இதய ரத்த நாள அடைப்பு
🔹 ரத்த ஓட்டக் குறைபாடு

👉 அறிகுறிகள் தெரியாமல் அமைதியாக ஒளிந்திருக்கும்.

ஏனெனில்
முதியவர்கள் தங்களின் நடமாட்டத்தை இயல்பாகவே குறைத்துக் கொள்வார்கள்.
அதனால் நோய் வெளியே தெரியாமல் இருக்க

Address

Calve Subbraya Chetty Street
Pondicherry
605002

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm
Sunday 10am - 1pm

Telephone

+919994473581

Alerts

Be the first to know and let us send you an email when Vidhya Siddha Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vidhya Siddha Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram