Aalen Homeopathy Clinic

Aalen Homeopathy Clinic Dr.Aalen Fredrick M BHMS.,

         எண்ணம் போல் வாழ்வு. நம் வாழ்வு செழிக்க, நம் எண்ணத்தை நெறி செய்ய வேண்டும். கடந்த காலத்தை நம்ம ஒரு நாளும் மாற்ற இ...
26/10/2022





எண்ணம் போல் வாழ்வு. நம் வாழ்வு செழிக்க, நம் எண்ணத்தை நெறி செய்ய வேண்டும். கடந்த காலத்தை நம்ம ஒரு நாளும் மாற்ற இயலாது. அப்படி இருக்க கடந்த காலத்தில் நடந்த சில கசப்பான நினைவுகளை மனதில் ஏந்தி கொண்டு நம் நிகழ் காலத்தில் வாழ்வது துன்பத்தை தரும். அதேபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு நமக்கு ஒரு வித பதட்டத்தை தரும். கடந்த கால மனக்கவலையோ எதிர்காலத்தின் பதட்டமோ நம் நிகழ்காலத்திற்கு உதவாது. எனவே நம் வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள நம் நிகழ்காலத்திலே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நன்மையும் கூட. நம்முடைய இன்றைய சிந்தனைகளை நாளைய செயல்கள் ஆகின்றன. எனவே நம் சிந்தனையை வளப்படுத்துவோம்.

              கொஞ்சம் காலத்திற்கு முன்னால் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமானால், குழந்தை தலை சுற்றி தன் கையால் க...
23/10/2022



கொஞ்சம் காலத்திற்கு முன்னால் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டுமானால், குழந்தை தலை சுற்றி தன் கையால் காதை தொட வேண்டும். அப்படி தொடுவதையே பள்ளி சேர தகுதியான கருதி இருந்தனர். ஆனால் இப்போது குழந்தைக்கு மூன்று வயது ஆனவுடன் pre kg இல் சேர்த்து விடுகின்றன. மூன்று வயதில் இருந்தே அந்த குழந்தையை எழுதவில்லை, வகுப்பில் முதல் மதிப்பெண் பெறவில்லை என பெற்றோர்கள் வருத்தப்படுகின்றன. தகுந்த வளர்ச்சி அடைந்த பிறகே ஒவ்வொருத்தரால் ஒவ்வொரு செயலை செய்ய இயலும். இங்குள்ள படத்தில் மூன்று வயது குழந்தை க்கும், ஆறு வயது குழந்தைக்கும் எலும்பு வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் காட்டியுள்ளனர். தகுந்தாற்போல் எலும்பு முதிர்ச்சி அடையாத குழந்தைகளை எழுத சொல்லி, அல்லது சரியாக எழுதவில்லை என்று திட்டுவது அனர்த்தம். எனவே இதனைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள் குழந்தைகளை நல்ல வழியில் வழிநடத்த வேண்டும்.

இன்று world mental health day. வருடம் ஒரு முறை அனுசரிக்கப்படும் உலக மன நல நாள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே. நமக...
10/10/2022

இன்று world mental health day. வருடம் ஒரு முறை அனுசரிக்கப்படும் உலக மன நல நாள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே. நமக்கு இருக்கும் மிக பெரிய சொத்து என்பது நம்முடையே நல்ல மன நிலையே. எல்லாருக்கும் வாழ்வில் எதேனும் தொந்தரவு இருக்க தான் செய்யும். அது நம் மனநிலையை பாதிக்காமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் நாம் கனிவாக நடக்க வேண்டும். அதாவது, நம்மை நாமே நொந்து கொள்வது, பிறருடைய தவறுக்கு நம்மை கடிந்து கொள்வது, தேவையில்லாமல் பொறாமை, அடுத்தவர் என்ன சொல்லுவார்கள் என்ற மன நிலை, தாழ்வு மனபான்மை, குற்ற உணர்ச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நம் மனதின் நலனை நாமே கவனிக்க வேண்டும். நல்ல மன நிலையே வாழ்வில் நம்மை வெற்றிக்கு அழைத்து செல்லும். அப்படி நல்ல மன நிலைகாக மற்றவர்களின் உதவியை நாடுவது தவறில்லை. அந்த நபர் நண்பராக, தாயோ, தந்தையோ யாராக வேணும்னாலும் இருக்கலாம். இதற்காக மருத்துவரை அணுகுவது தவறில்லை. இதை வலியுறுத்தியே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் வர செய்ய வேண்டிய சில விஷயங்கள் குழந்தைகளை எப்போது இருந்து புத்தகங்களை படிக்க சொ...
29/08/2022

குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் வர செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குழந்தைகளை எப்போது இருந்து புத்தகங்களை படிக்க சொல்லி தரலாம் என்று கேட்டால், குழந்தை தாயின் வயிற்றில் இருந்தே கேட்கும் திறன் இருப்பதால் கற்கிறது. எனவே குழந்தை எப்போதும் கற்க தையாராக உள்ளது. தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் இருந்தே புத்தகங்கள் படிப்பது நல்லது.

நம்மை பார்த்தே நம் குழந்தைகள் வளர்கின்றன. நானும் நல்புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும்.

அப்படி படிக்கும் போது வாய்விட்டு படிக்க வேண்டும். இது குழந்தைகளுகும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்.

குழந்தைகளுக்கு என அவர்களின் இடத்தில் புத்தகங்கள் அதிகம் வாங்கி வைக்கவும். அவர்களின் கவனம் புத்தகத்தில் திரும்பும்.

அதே போல், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும்.

குழந்தைகள் எழுத்துகூட்டி படிக்க ஆரம்பிக்கும் சமயம்,அவர்களையும் சத்தமாக வாசிக்க சொல்லவும். அவர்கள் படிப்பதில் கேள்விகள் கேட்கவும்.

அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை தேர்வு செய்து அனுமதி தாருங்கள்.

ஒரு புத்தகம் படித்ததற்கு வெகுமதி அளியுங்கள். பிறந்தநாள் போன்ற விஷயங்களில் புத்தகங்கள் பரிசு அளியுங்கள்.

தாய் பால் அதிகம் சுரக்க செய்ய வேண்டியவை1. Good latching - குழந்தையை பால் குடிக்க ஏதுவாக கிடத்த வேண்டும். Proper latching...
06/08/2022

தாய் பால் அதிகம் சுரக்க செய்ய வேண்டியவை
1. Good latching - குழந்தையை பால் குடிக்க ஏதுவாக கிடத்த வேண்டும். Proper latching நல்லது.

2. Proper drainage - ஒரு மார்பில் உள்ள பால் முழுவதுமாக அருந்த செய்தல். பாதி பால் அருந்திய பிறகு அடுத்த மார்பில் அருந்த செய்ய கூடாது.

3. Massaging - மார்பை நன்கு தடவி கொடுக்க வேண்டும். வருடி தர வேண்டும்.

4. Skin to skin contact - குழந்தையை நன்கு அரவணைத்து மார்போடு அணைத்து கொள்ள வேண்டும்.

5. Daily Calorie - தாய் போதுமான ஊட்ட சத்தான உணவு அருந்த வேண்டும்.

6. பால் அதிகம் சுரக்க கூடிய உணவுகளை அருந்த வேண்டும்.

7. போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.

8.தாய்மார்கள் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்...


Proper latching தாய்ப்பால் அருந்தும் குழந்தை மார்பகத்தை சரியாக வாயால் பிடித்திருக்க வேண்டும். இதை good latching என்பர்கள...
06/08/2022

Proper latching

தாய்ப்பால் அருந்தும் குழந்தை மார்பகத்தை சரியாக வாயால் பிடித்திருக்க வேண்டும். இதை good latching என்பர்கள். Good latching தாய் பால் தர மிகவும் முக்கியம். Proper latching எப்படி இருக்கும் என்பதை காணலாம்.
1. குழந்தை தாயின் நெஞ்சுக்கு நேராக இருக்கும்.
2. குழந்தையின் வாய் முழுமையாக திறந்து இருக்கும்.
3. மார்பக காம்பு குழந்தை வாயில் முழுமையாக சென்றிருக்கும்.
4. மூக்கு மார்புக்கு அருகில் இருக்கும்.
5. குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாக இருக்கும்.
6. குழந்தையின் தாடை மார்பை தொடும்.
7. தாய்க்கு எந்த வலியும் இருக்காது.
8. குழந்தை பால் சுலபமாக அருந்தும்.

இவையே பால் தரும் தாய் மார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.


தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் ஏற்படும் நன்மைகளை காணலாம்.தாய்க்கு: 1. குழந்தைக்கு ஏற்ற உணவு என்பதால் குழந்தைக்கு அளிப்பத...
05/08/2022

தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் ஏற்படும் நன்மைகளை காணலாம்.
தாய்க்கு:
1. குழந்தைக்கு ஏற்ற உணவு என்பதால் குழந்தைக்கு அளிப்பது எளிதானது.
2. பவுடர் பாலை விட நல்லது.
3. தாய்ப்பால் தருவதினால் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
4. பிரசவத்திற்கு பிறகு கர்ப்பப்பை தன்னுடைய பழைய நிலைக்கு திரும்ப தாய்ப்பால் சுரப்பது உதவுகிறது.
5. தாய்ப்பால் பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களை மன அழுத்தத்தில் இருந்து காக்கிறது.
6. குழந்தைக்கு தாய்ப்பால் தரும் தாய்மார்கள் இயற்கையாகவே அடுத்த முறை கருத்தரிப்பது தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் குழந்தைக்கு தாய்க்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
7. இதனால் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் இடையே போதுமான இடைவெளி கிடைக்கின்றது.


தாய்ப்பால் அருந்துவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:1. தாய்ப்பாலில் இருந்து பூரண சத்து கிடைக்கிறது. 2. தாய்ப்பால் எதிர...
04/08/2022

தாய்ப்பால் அருந்துவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:

1. தாய்ப்பாலில் இருந்து பூரண சத்து கிடைக்கிறது.
2. தாய்ப்பால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
3. பால் புட்டியிலிருந்து வரும் கிருமி தொற்றுகள் தவிர்க்கப்படுகின்றது.
4. முளைக்காம்புகளை சப்புவதால் குழந்தையின் தாடைகள் நன்றாக வளர்கின்றது.
5. எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் சர்க்கரை நோய் இருதய கோளாறு போன்றவைகள் தவிர்க்கப்படுகின்றன.
6. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும் நன்கு ஆரோக்கியமாக வளர்கின்றனர்.
7. SIDS எனப்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணம் தவிர்க்கப்படுகிறது.
8. தாய்ப்பால் தருவதினால் குழந்தைக்கு தாயிடம் பந்தம் அதிகரிக்கிறது.


குழந்தையின் பசியை அறிய சில வழிகள்...1. குழந்தை பசியில் அழுகும். பசி தவிர பிற காரணங்களுக்கும் குழந்தை அழ வாய்ப்புண்டு. என...
04/08/2022

குழந்தையின் பசியை அறிய சில வழிகள்...
1. குழந்தை பசியில் அழுகும். பசி தவிர பிற காரணங்களுக்கும் குழந்தை அழ வாய்ப்புண்டு. எனவே குழந்தை எதற்காக அழுகிறது என்பதை அறிய வேண்டும்.
2. பசிக்கும் சமயத்தில் குழந்தையின் கண்ணத்தை தொட்டால் தலையைத் திருப்பி மார்பை சுவைக்க முயற்சி செய்யும்.
3. கைவிரலை வாய அருகில் கொண்டு சென்றால் பாலை சுவைக்க சப்புவது போல சப்பும்.
4. நன்கு பசியில் இருக்கும் குழந்தை வாய் நிறைய பால் சப்பி விழுங்கும். பிறந்த குழந்தைக்கு ஒரு முறை விழுங்க மூன்று நான்கு முறை மூளை சப்பும்.

பசி இல்லாத சமயத்தில் குழந்தை மேல கூறியவற்றை செய்யத் தவறும். இதிலிருந்து குழந்தையின் பசியை அறியலாம்.


குழந்தைக்கு தாய்ப்பால் தருவதில் தாய் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம். 1. குழந்தை உறங்கும் ...
03/08/2022

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதில் தாய் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

1. குழந்தை உறங்கும் போது பால் தரக்கூடாது.
2. மணிக்கு ஒருமுறை பால் தரும் வழக்கம் தவறானது. குழந்தைக்கு பசிக்கும் பொழுதே பால் தர வேண்டும்.
3. குழந்தையை படுக்கையில் கிடத்திக் கொண்டே பால் தருவதை தவிர்க்க வேண்டும்.
4. குழந்தை பால் அருந்திய பிறகு சிறிது நேரம் தோளில் சாய்த்து, ஏப்பம் விடும் வரை தட்டிக் கொடுக்க வேண்டும்.
5. குழந்தைக்கு பால் தரும் வேலையில் குழந்தையின் முகத்தைப் பார்த்து, தாயின் கவனம் முழுவதும் குழந்தை மீது இருக்கும் படி செய்ய வேண்டும்.


குழந்தையும் தாய்ப்பாலும்....பிறந்த குழந்தை எவ்வாறு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். நம் கண்ணுக்க...
03/08/2022

குழந்தையும் தாய்ப்பாலும்....

பிறந்த குழந்தை எவ்வாறு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். நம் கண்ணுக்கு அடி பட போகும் சந்தற்பத்தில் இமைகள் தானாக மூடிக் கொள்வது போல, குழந்தையின் பல செய்கைகள் தாய்க்கு தாய்ப்பாலை சுரக்கச் செய்யும். அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை இந்த பதிவில் காணலாம்.

1. பிரசவம் ஆன பிறகு குழந்தை மார்பை சுவைப்பதால், அதில் இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு, பால் சுரக்க மூளையிலிருந்து கட்டளை வருகிறது.
2. குழந்தை பால் பருக பருக தாய்ப்பால் சுரப்பதற்கு காரணமும் இதுவே.
3. தன் குழந்தையின் அழுகை குரல் கூட, தாய்க்கு பால் சுரக்க செய்யும்.
4. குழந்தை ஒரு மார்பகத்தின் பாலை முழுமையாக அருந்தி விட்டால், தாய்க்கு அந்த மார்பகத்தில் பால் அடுத்த சில மணி நேரத்தில் நன்றாக சுரக்கும்.

இவையே குழந்தையால் தாய்ப்பால் சுரக்க காரணங்களாகும்...


Address

Sasi Nagar
Sivakasi
626123

Opening Hours

Monday 9am - 1pm
5pm - 9pm
Tuesday 9am - 1pm
5pm - 9pm
Wednesday 9am - 1pm
5pm - 9pm
Thursday 9am - 1pm
5pm - 9pm
Saturday 9am - 1pm
5pm - 9pm
Sunday 5pm - 9pm

Telephone

+919488891116

Alerts

Be the first to know and let us send you an email when Aalen Homeopathy Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aalen Homeopathy Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category