28/10/2025
ஒரு பையன், சாப்ட்வேர் எஞ்சினியர் .... கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆச்சு குழந்தை இல்ல அதனால மனைவி விட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்கன்னு கம்ப்ளைன்ட்டோட வந்தான்... பொதுவா நம்ம பெண்கள் அவ்வளவு சாதாரணமா கணவரை விட்டு கொடுக்க மாட்டாங்க 10 வருஷம் ஆனாலும் குறைய தன் மேல ஏத்துகிட்டு அவன காப்பாத்துவாங்க.. விட்டுட்டு போற அளவுக்கு என்ன மேட்டர்ன்னு விசாரிச்சேன்....
பையன் மாத சம்பளம் 40,000 வாங்குறான் ஆனா தன்னம்பிக்கை இல்லாம ரொம்ப பயந்து பயந்து பேசினான்... கவுன்சலிங்ல வழக்கம் போல தன்னால உடலுறவில திருப்தி அளிக்க முடியலன்னு சோகமா சொன்னான், வயசு 27 தாண்டாது, நிச்சயமா இந்த வயசுல பெரிய குறைகள் இருக்க வாய்ப்பு இல்லை... பொதுவா போலி மருத்துவர்கள் அவர்களுடைய விளம்பரத்தில் விடலை பசங்களை ஏமாற்ற பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் (சுயஇன்பம், ஆண்மைக்குறைவு, நரம்பு தளர்ச்சி, கண்களில் எரிச்சல், கன்னத்தில் குழி, கை கால் நடுக்கம்) பேசிட்டிருந்தான்... ஆழமா விசாரிச்சதுல பையன் நம்ம போலி மருத்துவர்கள் கிட்ட மாட்டி தன்னம்பிக்கைய இழந்திருக்கான்னு தெரிஞ்சுது... பொதுவாக விடலை பருவங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாத அனைத்து ஆண்களுக்கும் தான் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகும் தகுதி உடையவனா?? இல்லற வாழ்வில் திருப்திகரமாக வாழும் தகுதி உடையவனா என்ற சந்தேகம் கண்டிப்பாக எழும் இந்த சந்தேகம் தான் போலி மருத்துவர்களின் மூலதனம் இதை போலிமருத்துவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள்??? போலி மருத்துவர்களின் ஸ்டைல் என்னன்னு தெரிஞ்சிக்குவோம்.. பல பேருக்கு பயன்படும்...
1) தொலைகாட்சி, தினசரி பத்திரிகை போன்ற ஊடகங்களில் சுயஇன்பம், ஆண்மைக்குறைவு, நரம்பு தளர்ச்சி, கண்களில் எரிச்சல், கன்னத்தில் குழி, கை கால் நடுக்கம், குறி வளைந்திருத்தல், விறை வீங்குதல் அல்லது தளர்ந்து இருத்தல் உறுப்பு சிறுத்தல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தங்களை விளம்பரம் செய்வார்கள்...
2) கண்டிப்பாக எந்த ஒரு அரசு பதிவு பெற்ற சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் மறக்காமல் தங்களை பரம்பரை மருத்துவர்கள் என்று கூறி கொள்வார்கள், (அரசு பதிவு பெற்ற சான்றிதழ் என்பது MBBS, BHMS, BAMS, BSMS, போன்றவை இன்னும் விபரங்கள் இணையத்தில் கிடைக்கும்)
3) விளம்பரத்தை பார்த்து விட்டு நீங்கள் தொடர்பு கொண்டால் மருந்துகளை தபாலில் அனுப்புவதாகவும் அல்லது உங்கள் ஊருக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வருகை புரிவதாகவும் சொல்லி உங்களை வளைப்பார்கள்.
4) அவரை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக நாடி பிடித்து பார்ப்பார்கள்... இன்றைய கால கட்டத்தில் ஒரு மருத்துவன் நோயை கண்டறிய ஆயிரம் வழிகள் உண்டு... "செமன் அனலிசிஸ்", அல்லது "penile Function Test" மூலம் ஒருவரின் ஆண்மையை கண்டுபிடிக்க இயலும் ஆனால் போலி மருத்துவருக்கு அது தெரியாது அவருக்கு பரம்பரையாக நாடி மட்டுமே பார்ப்பார்கள்... ஏன் என்றால் அதில் தான் ரிப்போர்ட் தர வேண்டியது இல்லை அவர் சொல்வதை நீங்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும்.
5) நாடி பார்த்து விட்டு உடலில் சூடு அதிகம் எனவும் நரம்பு தளர்ச்சி எனவும், சிறு வயதில் சுய இன்பம் செய்ததால் குறி சிறுத்து விட்டது எனவும், விரை ஒரு பக்கம் மேலே ஏறியும் மற்றொரு பக்கம் கீழே இறங்கியும் இருக்கும் எனவும், ராத்திரியில் கண் முழித்தால் கண் எரிச்சல் வரும் எனவும் அடித்து விட ஆரம்பிப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவையாவும் இயற்கையான விஷயம். ராத்திரி கண் முழிச்சா கண்ணு எரியத்தானையா செய்யும், அதே போல இவர்கள் குறிப்பிடும் அனைத்தும் 'உன் மூக்கு வழியா சுவாசிப்பாய், காது வழியா கேட்ப்பாய், என்பது போல மிக சாதாரண விஷயங்கள்
6) இவற்றை கூறி இருக்கிறதா என கேட்பார்கள் நீங்கள் குழம்பி போய் தலையை ஆட்டிநீர்கள் என்றால் திடீரென்று சரமாரியாக திட்ட ஆரம்பிப்பார்கள், உனக்கு நாடி நரம்பு எல்லாம் வீக் ஆகிடுச்சு நீ எதுக்கும் லாயக்கு இல்ல எதுக்கு டா உனக்கு அவசரம் ஏன் தப்பு பண்ணின என வறுத்து எடுப்பார்கள்... இது உங்களை பலவீன படுத்துவதற்காக... கடைசியில் சரி போனா போகுது விடு.. இனிமேல் இப்படி செய்யாத... நான் தர்ற மருந்த 3 மாசம் சாப்பிடு எல்லாம் சரியாயிடும்னு சொல்லி சுமார் 1000 முதல் 20,000 வரை தீட்டுவார்கள்... அவர்கள் தருவது வெறும் மைதா மாவு கலந்த லேகியமாக கூட இருக்க கூடும்... அதில் தயாரிப்பு குறித்த எந்த தகவலும் இடம் பெறாது.
சரி மேட்டருக்கு வருவோம் இவர்களிடம் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள் பொதுவாக பிரச்சன என்று வருபவனிடம் அவனின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வண்ணம் ஆறுதலாக பேசி கவுன்சலிங் செய்ய வேண்டும்.. அது தான் ஒரு மருத்துவனின் கடமை ஆனால் தன்னுடைய சுய லாபத்திற்காக ஒருவனுடைய தன்னம்பிக்கையை காலி செய்வது போலி மருத்துவரிடம் போனால் நடக்கும். அதிலும் ஆணுக்கு செக்ஸ்-ல் மனமும் உடலும் சேர்ந்து இயங்கினால் தான் திருப்தி அளிக்கும், இப்படி மனதை குழப்பி விட்டால் சுத்தமாக சோர்ந்து போய் தன்னம்பிக்கை இல்லாமல் எதுவும் செய்யாமல்.... மன அழுத்தத்தில் தன்னுடைய வேலையை கூட ஒழுங்காக செய்யாமல் தான் ஏதோ தவறு செய்து விட்டது போல் குற்ற மனப்பான்மையில் குழம்பி கிடப்பான்... இது தான் இந்த பையனுக்கும் நடந்தது... தன்னுடைய தினசரி வேலையை கூட செய்யாமல் இருந்தால் எப்படி பெண் பொறுத்து கொண்டு இருப்பாள்?? நானும் அவன் தன்னம்பிக்கையை அதிகரிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்.. திரும்பவும் சுத்தி சுத்தி சுய இன்பம் தப்பில்லையா சார் ??? என்ற இடத்திலயே நிற்ப்பான்... பின் ஒரு மன நல மருத்துவர் உதவியுடன் அவனை குற்ற மனப்பான்மையில் இருந்து வெளி கொண்டு வந்தோம்....
இங்கு கவனிக்க வேண்டியது - உங்களுக்கு ரகசியமாக கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், குற்ற மனப்பான்மையோ, தவறு செய்து விட்ட வருத்தமோ இருந்தால் உங்கள் திருமணத்திற்கு முன்பே அதை சரி செய்து கொள்ளுங்கள், ஒரு மருத்துவரை (போலிகளை அல்ல) அவர் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் சந்தித்து மனதளவில் தெளிவு பெறுங்கள். முடிவாக எச்சில் சுரப்பது போல் விந்தும் ஒரு சுரப்பி மூலமாக சுரக்கும் சாதாரண ஒன்று தான் எச்சில் வாழ்நாள் முழுவதும் சுரப்பது போல் நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் விந்தும் சுரந்து கொண்டு தான் இருக்கும்... அதை இழப்பதால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது...
Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , Thiruvannamalai, Madurai
9080052846, 9842775242
Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details
Dhanvandhiri Vaidyasala, Theni
Maaya Farm stay
Sanjeev Maternity Clinic