07/08/2023
கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், கருவில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனைக் கொண்டு குழந்தையின் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்.
* கர்ப்பிணிகள் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் நிலையை அறிய முடியும். இதனால் குழந்தை இடம் மாறி இருந்தால், முன்பே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
* நஞ்சுக் கொடி எந்த பகுதியில் உள்ளது என்பதையும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். பொதுவாக நஞ்சுக்கொடியானது கர்ப்ப காலத்தில் கருப்பையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் நஞ்சுக்கொடியானது 7 மாதத்திற்கு பின், கருப்பை வாயை மூடியவாறு இருந்தால், அதற்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
* பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கானது 11-14 வாரத்திற்குள் செய்யப்படும். இவ்வாறு செய்தால், குழந்தைக்கு மனநலிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளுக்கு 18-20 வாரங்களில் அனாமலி ஸ்கேன் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கேன் மூலம், குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் 20-வது வாரத்தில் ஸ்கேன் செய்தால், குழந்தை ஒரு வடிவத்தில் வந்துவிடும். இதனால் தண்டுவடம், மூளை மற்றும் இதர உள்ளுறுப்புக்களை சோதனை செய்து, அதில் பிரச்சனைகள் இருந்தால், அதை தெரிந்து கொள்ளலாம்.