06/06/2021
இந்த நெருக்கடியான தொற்று நோய்க் காலத்தில் இயன்றவரை வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்க்க முயற்சித்தலே சிறந்தது ஆகும். இருப்பினும் பல் வலி போன்ற தவிர்க்க முடியாத தேவைகளுக்கு பல் வைத்தியரை நாடுதல் அவசியமே ஆகும். கை வைத்தியம் எனும் பெயரில் வைத்திய ஆலோசனை இன்றி மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் ஆபத்தை உருவாக்கலாம். அவ்வாறு இருக்க பல் ஒன்று பிடுங்க வேண்டி இருப்பின் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்க.
* இதய நோய்கள், நீரிழிவு, இரத்தம் சார்ந்த நோய்கள், அல்லது ஏதாவது தொற்று நோய்கள் இருப்பின் உடனே அதை தெரியப்படுத்தவும்.
* நீங்கள் மருந்துக் குறிப்பு கொப்பி (Clinic book) பயன்படுத்துபவராயின் அதனை தவறாது எடுத்துச் செல்லவும்.
* ஏதாவது மருந்துகளுக்கு ஒவ்வாமை இருப்பின் அதனை மறக்காமல் தெரியப்படுத்தவும்.
* முன்பு பல் பிடுங்கி ஏதாவது பிரச்சினை வந்திருப்பின் அது தொடர்பில் தெரியப்படுத்தவும்.
மேலும் பல் பிடுங்கியவுடன் கவனிக்க வேண்டிய பொதுவான விடயங்கள் பின்வருமாறு....
1) பல் பிடுங்கிய பின்பு வைக்கப்படும் பஞ்சை குறைந்தது 30-45 நிமிடங்கள் வரை இறுக்கமாக கடித்து வைத்திருக்கவும். அதன் பிற்பாடும் பெருமளவான இரத்தப் பெருக்கு இருப்பின் பல் வைத்தியரை நாடவும்.
2)எச்சில் துப்புதல் மற்றும் வாயை பலமாக அலசுதலை இயன்றவரை தவிர்தல்.
3) சூடான உணவுகளை தவிர்த்தல் மற்றும். மென்மையான ஆகாரங்களை உள்ளெடுத்தல்.
4) சிலருக்கு மிகக் குறந்தளவு இரத்தப் போக்கு இருக்கலாம். அதனை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.
5) 5,6 நாட்களுக்கு பிறகும் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கம் இருப்பின் உடனடியாக பல் வைத்தியரை நாடவும்.
6) மருந்துக் குளிசைகள் ஏதும் தரப்படின் முழுமையாக அதனை பாவித்து முடிக்கவும்.
7) புகைத்தல் மற்றும் மது அருந்துதலை குறைந்தது 1 கிழமையேனும் நிறுத்துதல்.
நன்றி Dr. Mugundhan